Showing posts with label புதிர். Show all posts
Showing posts with label புதிர். Show all posts

Friday, 11 December 2009

பாட்டு போட்டி - 4

இது ஒரு லிரிக்ஸ் போட்டி.
பாட்டோட நடுவில இருந்து ஒரு வரி சொல்லி இருக்கிறேன்.
பாட்டோட முதல் வரி என்னன்னு கண்டு பிடிங்க. கூகிள் செய்யகூடாதுன்னு சொன்னா கேக்கவா போறீங்க. Ok, Start Music.

1)"அந்த இயற்கை அன்னை படைத்த ஒரு பெரிய ஷவர் இது".

2)"கட்டு கட்டா நோட்டடிச்சா கரண்டு பில்லு கட்டுறதாரு?"
என்ன தத்துவம்...சான்ஸே இல்ல... போங்க...:-)

3)"யாழ் உடலினில் வாள் இடைவெளி நுரையாய் மறையாதா நிறைத்திடு..."
குறிப்பு: நானும் எவ்வளவோ தடவை ரீவைண்ட் செய்து கேட்டதில், எனக்கு புரிந்தது இது. சரியா தப்பா தெரியலை. ட்ரை பண்ணுங்க.

4)"சேலைகளை திருடி இவன் செய்த லீலை பல கோடி."

5)"ஒரு ஜீன்ஸ் அணிந்த சின்னக்கிளி ஹலோ சொல்லி கைகுலுக்க தங்க முகம்..."

6)As always, connect the above five songs.அட இது லிரிக்ஸ் இல்லை. மேல உள்ள அஞ்சு பாட்டுக்கும் ஒரு தொடர்பு இருக்கு. What is that?

Friday, 13 November 2009

சில கேள்விகள் - 2

-படத்துல மாங்கு மாங்கு ன்னு உழைச்சவங்களையே இருட்டடிப்பு பண்ற இந்த காலத்துல "இவர்களுடன் குற்றால அருவி" அப்டின்னு ஒரு படத்துல டைட்டில் கார்டு போடுவாங்க. அது என்ன படம்?

-சாமி படத்துல 'இது தானா இது தானா' ன்னு ஒரு பாட்டு இருக்கு. சித்ராஜி(உபயம்: சூப்பர் சிங்கர்) பாடினது. இந்த பாட்டு ஆரம்பிக்கும் போது சாமியும் மாமியும் ஒருத்தரை ஒருத்தர் பாத்து ஏதோ சொல்லிக்குவாங்க. உதடு அசைவது மட்டும் தான் காமிப்பாங்க. அவங்க அப்டி என்ன சொல்லிப்பாங்க?

-எதிர் நீச்சல் படத்துல மாடிப்படி மாது, கிட்டு பட்டு, நாயர் இப்டி எல்லார் பெயர்களும் நமக்கு சுலபமா ஞாபகத்துல இருக்கும். ஆனா ஒரு தாத்தா ரூம்ல படுத்து லொக்கு லொக்குன்னு இருமிக்கிட்டே இருப்பார். அவர் பேரு என்ன?

-மேல கேட்ட மூணு கேள்விக்கும் ஒரு சம்மந்தம் இருக்கு. அதையும் சொல்லிடுங்க.

Tuesday, 18 August 2009

From Today's Playlist :-)

இசை என்று ஒரு விஷயம் இந்த உலகத்தில் இல்லாமல் போனால், நிறைய பேருக்கு பைத்தியம் பிடிச்சுடும். ஏதோ ஒரு வடிவத்தில் இசைக்கு எல்லோருமே அடிமை தான்.

"இளையராஜாவின் "How to Name it?" கேட்டு இருக்கீங்களா??"
"இல்லை"
"கேட்டதில்லையா...ச்ச, வேஸ்ட் நீங்க"

இசையை பொறுத்த வரை என்னுடைய எல்லை ரொம்ப ரொம்ப சின்னது.
நம்ம எதுக்கு மியூசிக் கேக்குறோம்? மகிழ்ச்சியை பகிர்ந்துக்க, துக்கத்தை வடிக்க, தனிமைய போக்க, பொழுது போக, தூக்கம் வர, கடவுளை உணர...etc etc.
இந்த மாதிரி ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு மாதிரியான தேடலுடன் மியூசிக் கேட்போம்.

இந்த தேடலுக்கு எல்லாம் விடை சிலருக்கு "How to name it"டில் கிடைக்கலாம். எனக்கு சினிமா பாட்டுலேயே கெடைச்சுடுது.
இதை 'குறுகிய ரசனை' ன்னு ஆதங்கப்படும்/'வளர்த்துக்கொள்ள சொல்லி' அக்கறைப்படும் நண்பர்களுக்கு நான் சொல்றது இதான்,
"எனக்கு தெரிஞ்சது இவ்வளவு தான்...:-(
இப்போதைக்கு எனக்கு அதுவே போதுமானதா இருக்கு."

லகான் படத்துல "Radha kaise na jale" ன்னு ஒரு பாட்டு வரும். என்னோட சந்தோஷத்தை இரட்டிப்பாக்க அது போதும்."காதலின் தீபம் ஒன்று" பாட்டை விட ரொமான்டிக் ஆன ஒரு பாட்டு இன்னும் வந்துடலைன்னு எனக்கு ஒரு நம்பிக்கை. எப்போல்லாம் தனியா இருக்க மாதிரி உணர்கிறேனோ, அப்போல்லாம் "Tanhayee(Dil Chahta Hai)" பாட்டு எனக்காக அழும்.

சரி எனக்கு பிடிச்ச பாட்டு லிஸ்ட் சொல்லி பிட் போடுவதற்காக அல்ல இந்த பதிவு.
மேட்டர்க்கு வரேன்.

இந்த மாதிரியான என்னோட limited horizon னில் இருந்து சில கேள்விகள்.

கூகிள் பண்ணாம பதில் சொல்லுங்க பார்க்கலாம்.


1)உன்னி கிருஷ்ணனும், உதித் நாராயணனும் சேர்ந்து பாடின பாட்டு சொல்லுங்க.

2)அனுராதா ஸ்ரீராம், மாதங்கி சேர்ந்து பாடின பாட்டு?

3)"வளையோசை கல கலவென", "ஓ பட்டர்பிளை" இந்த ரெண்டு பாட்டுக்கும் என்ன ஒற்றுமை?

4)இசைஞானியின் நானூறாவது படத்துல, அவரே பாடின பாட்டு என்ன?

5)Musically Connect: அபூர்வ ராகங்கள். பதினாறு வயதினிலே, சிந்துபைரவி, மின்சாரகனவு,கருத்தம்மா, அழகி, பாரதி, ஆட்டோக்ராப்

Wednesday, 17 June 2009

பாட்டு போட்டி - 2

"பெண்மை தோற்றாலும் ஆண்மை தோற்றாலும் முடிவில் இருவரும் வென்றாக வேண்டும்."

"இதில் யார் தோல்வியுறும் போதும் அது தான் வெற்றி என்றாகும்"

தல ஒரு பாட்டுல சொன்னதையே கொஞ்சமா மாத்தி போட்டு இன்னொரு பாட்டுல சொல்லிருக்காரு.

என்ன பாடல்கள் என்று யோசித்து சொல்லுங்கள். ரொம்ப சுலபம் தான். அதுனால கூகிள் பண்ண கூடாது.

response பொறுத்து, நெறைய lyrics கேள்விகள் கேட்கலாம் என்று எண்ணம்.

Tuesday, 28 April 2009

சில கேள்விகள்.

பதில் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லுங்கள். இதை விட நல்ல கேள்விகள் இருந்தாலும் அனுப்புங்கள்.
கூகிள் பண்ண கூடாதுன்னு எந்த விதி முறையும் இல்லை:-)
பின்னூட்டங்கள் பிறகு பிரசுரிக்கப் படும்.
பரிசாக புத்தகம், CD ஏதும் அனுப்பி வைக்க மாட்டேன்.




1.அயன் படம் பாத்துட்டீங்களா? அட இது கேள்வி இல்லை.
"அயன்" அப்டின்னா உண்மையான அர்த்தம் என்ன? "சூர்யா" என்ற பதிலும், அந்த படத்தின் டைரக்டர் சொன்ன மாதிரி "பலம் பொருந்தியவன்" அப்டின்னு உதார் விடுற அர்த்தமும், தப்பு என்று இப்போவே சொல்லிக்கறேன்.

மகாபாரதம் படித்து/பார்த்து இருப்பீர்கள். அதில் இருந்து சில கேள்விகள்.

2.பீஷ்மரின் இயற்பெயர் என்ன? "முகேஷ்" என்ற பதில் செல்லாது.

3.ஊர்வசியின் சாபத்தால் அர்ஜுனன் பெண்தன்மையை அடைந்து விடுகிறான். அப்டியா என்று கேட்பவர்கள் அடுத்த கேள்விக்கு போய் விடலாம். அப்போ
அவன்(ள்), எந்த பெயரால் அழைக்க படுகிறான்(ள்)?

4.பாண்டுவின் இரண்டாவது மனைவி பெயர் என்ன? (நல்ல வேளை, இவராவது அண்ணன் மாதிரி ஆட்டம் போடாம , ரெண்டோட நிறுத்தினாரு)

5.கடோத்கஜனோட அப்பா பேர் எல்லாருக்கும் தெரியும் ன்னு நம்பறேன். அம்மா பேர் என்ன??

6.துரோணரின் மகன் பெயர் என்ன?இது ரொம்ப சுலபமான கேள்வி தான், ஆனாலும் ஒரு குட்டி க்ளூ. மகாபாரதத்தில் ஒரு யானைக்கும் அதே பெயர் உண்டு.










Thursday, 6 November 2008

பாட்டு போட்டி.

இந்த லிரிக்ஸ் எந்த பாட்டுல வருது சொல்லுங்க பாப்போம்....கூகிள் பண்ணாம சொல்லணும் அதான் போட்டி...
clue இந்த line லேயே இருக்கு.

"அணைக்கும் ஆசை ஆயிரம்.. கலைக்கும் பாஷை பாசுரம்..
சுரம் ஏழிலும்.. சுவை ஆறிலும்...... "