Tuesday 26 August 2008

சொர்க்கமே என்றாலும்...

'உங்க சொந்த ஊரு எது?'

'திருச்சி பக்கம்'( வழக்கமா சொல்லுறது தான்...)

'திருச்சி பக்கத்துல எங்க?'

'புதுக்கோட்டை....'(ஆஹா ஆரம்பிச்சுடுச்சு...இது எங்க போயி நிக்கும் னு எனக்கு நல்லா தெரியும்)'...

'proper புதுக்கோட்டை யா?'

'இல்ல...அங்கே இருந்து கொஞ்சம்(???) தூரத்தில அறந்தாங்கி.....'

'ஓ! அறந்தாங்கி யா?'

'அட இருங்க, நான் இன்னும் முடிக்கலை, அறந்தாங்கி பக்கத்துல கீரமங்கலம் பேரூராட்சி (பக்கத்துல வேம்பன்குடி கிராமம்)'

'அட மக்கா! இதான் திருச்சி பக்கமா??முழுசா 100km ஐ ஒரு 'பக்கம்' ல மறச்சுட்டியே....பேரூராட்சியாம்ல....நான் மட்டும் கேள்வி கேக்கலைன்னா நீ ஏதோ மாநகராட்சி லேர்ந்து வந்துருக்கே ன்னுல்ல நெனச்சுருப்பேன்.....ம்ம்ம் போ போ....'

My face hanging.

காலேஜ் சேந்த புதுசுல ஒவ்வொரு புது அறிமுகமும் இப்படி தான் தொடங்கும்.

ஒரு செமஸ்டர் லீவ் ல என் classmates ரெண்டு பேரு எனக்கு DTDC ல courier அனுப்ப try பண்ண போக, (எங்க ஊருக்கு அப்போல்லாம் professional மட்டும் தான் சர்வீஸ்)courier காரன் இந்த ஊருக்கு எல்லாம் டெலிவரி இல்ல ன்னு சொல்ல போக...அவங்க ரெண்டு பேறும் எக்கச்சக்கமா கடி ஆயிட்டாங்க...அதுல ஒருத்தனுக்கு, நான் ஆட்டோகிராப் ல வேம்பன்குடி(west) னு அட்ரஸ் எழுத போயி, அவன் கொலை வெறி ஆகி, 'உங்க ஊருல இருக்குறதே நாலு வீடு தான், அதுல east,west, north, south லாம் தேவையா?? னு பின்னிட்டான்.

காலேஜ் ல லீவ் விட்டா போதும்.....கிளாஸ் ல எல்லாரும், "என்ன ப்ரியா....மாட்டு வண்டி, ஆரத்தி, குலவை விடுறதுக்கு, கொட்டு க்கு எல்லாம் சொல்லியாச்சா??" ன்னு கலாசிடுவாங்க.....'என் இனிய கிராமத்து மக்களே" பாரதிராஜா படத்துல வர கிராமம் மாறி எங்க ஊரு இருக்கும் னு அவங்களே முடிவு பண்ணிட்டாங்க.

இதே மாறி, "I am from Nagercoil(பக்கத்துல நல்லூர்) " னு பீலா விட்டுக்கிட்டு இருந்த பார்ட்டி நமக்கு pick up ஆனது தனி track.

அடிக்கடி நானும் என் தம்பியும் 'ச்ச,நம்ம வேற ஊருல பொறந்து இருக்கலாம்' னு feel பண்ணுவோம். ஏன்னா ஒவ்வொரு முறை ஊருக்கு போறதும், ஒரு பெரிய travel experience ஆ இருக்கும்.
டெல்லி ல வேலை பாக்குறப்போ, காலைல சென்னை வந்து இறங்கினதும் , அடிச்சு பிடிச்சு Paris corner போயி, ஊருக்கு பஸ் பிடிக்குறப்போ, ரொம்ப கடுப்பா இருக்கும், என்னடா வந்து இறங்கினோமா, வீட்டுக்கு போனோமான்னு இல்லாம இன்னும் பத்து மணி நேரத்துக்கு மேல travel பண்ணனுமேன்னு.....அதும் அறந்தாங்கி வரைக்கும் கூட போய்டலாம். அங்க இருந்து எங்க ஊருக்கு ஒரு பஸ் விட்டா அப்றோம் அடுத்த பஸ் வர்ற வரைக்கும் பேய் முழி முழிச்சுக்கிட்டு பஸ் ஸ்டாண்ட் ல நிக்க வேண்டியது தான். என் தம்பி நெறைய வாட்டி, அறந்தாங்கி ல வெயிட் பண்ணி பண்ணி, பொங்கி எழுந்து வீட்டுக்கு போன் பண்ணி, பக்கத்துல தான் சென்னை பஸ் நிக்குது, அதுல ஏறி சென்னை க்கே திரும்பி போறேன்னு சொல்லுவான்....

ஸ்வீடன், டென்மார்க் ல இருந்து வரப்போ, அங்க இருந்து சென்னை வர ஆகுற டைம் விட, சென்னை ல இருந்து எங்க ஊருக்கு போறதுக்கு ஜாஸ்தி டைம் ஆகும்.

ஆனா எங்க ஊரு compare பண்றப்போ நல்லூர் ரொம்ப சின்ன ஊரு.
எங்க ஊருல ரெண்டு higher secondary school, மூணு elementary school, நாலு கல்யாண மண்டபம், ரெண்டு தியேட்டர் எல்லாம் இருக்கு....நல்லூர் என்பது நாலே நாலு தெரு மட்டும் இருக்குற ஒரு சிற்றூர். ஆனா எப்போ இந்த argument வந்தாலும் இந்த travel மேட்டர் ல அவர் என்னை overtake பண்ணிடுவார். "நாகர்கோயில் வரைக்கும் direct train, அப்றோம் அங்கேருந்து 20 mins travel" னு, இந்த ஒரு பாயிண்ட் வெச்சே என்னை பேச்சிழக்க பண்ணிடுவாரு....:-(

But whatever it is, எங்க ஊரு எனக்கு special, like anyone else...

இப்போ தான் ஒரு 10 நாள் அம்மா வீட்டுக்கு போயிட்டு வந்தேன்.
படிக்குறப்போ லீவ் க்கு வந்துட்டு, hostel கெளம்பும் போது எப்புடி அழுகை வருமோ அதே மாறி தான் இப்போவும் வருது...

நம்மூரு போல வருமா???

No comments:

Post a Comment