Sunday 30 November 2008

வார இறுதிக்கு சென்னை சென்று இருந்தோம். நவம்பர் 29th அன்னைக்கு எனது மாமனார் தபால் துறையில் நாற்பது ஆண்டு காலம் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
அதற்காக அவருக்கு அலுவலகத்தில் பிரிவுபச்சார விழா. எங்கள் குடும்பத்தில் அனைவரும் அவருடைய ஆபீஸ் க்கு போய் இருந்தோம்.எல்லாரும் அவரை வாழ்த்தி பேசி கொண்டு இருந்தார்கள். அந்த நேரத்தில் எனது நாத்தனார் வந்திருக்க வில்லை. அவங்க ஒரு பேச்சாளர். என் மனதில், நம்ம குடும்பத்தினர் சார்பாக யாரையாவது நன்றி சொல்ல அழைத்தால், நான் போய் சொல்லலாம் என்று ஒரு எண்ணம். பனிரெண்டாம் வகுப்பிற்கு பிறகு, மைக் பக்கமே போக வில்லை...ரொம்ப out of touch .கண்ணை மூடி ஒரு ரெண்டு நிமிடங்கள் யோசிச்சு ஒரு நிமிடம் பேசுற மாறி சில வரிகள் தயார் செய்து கொண்டேன். அதற்குள் என் நாத்தனார் வந்துவிடவே, வடை பாயசத்தோட விருந்தளிக்க அவர்கள் வந்து விட்ட பிறகு, உப்புமாத்தனமா என் பேச்சு எதுக்குன்னு relax ஆயிட்டேன்....அர்ஜுன் வேறு பசி வந்து ரகளை செய்யவே, நான் விழாக்கூட்டத்தை விட்டு அகல வேண்டியதாகி விட்டது. ...அவங்க எல்லாரும் தப்பிச்சுட்டாங்க.....But you all have no choice.
நான் என்ன பேச நெனச்சேன்னு இங்க எழுதி இருக்கேன்.நீங்க படிச்சு தான் ஆகணும்....:-)

...................................................................................



அனைவருக்கும் வணக்கம்.
எனது மாமனாரை கடந்த மூன்று வருடங்களாக பரிச்சயம்.
நான் அவரிடம் பார்த்து வியந்த விஷயங்கள்...
- அவருடைய எளிமை.

-அடுத்தது, தன் பக்கம் நியாயம் இருந்தாலும் கூட, ஒரு பிரச்சினை என்று வரும் போது விவாதம் பண்ணி பெரிதாக்காமல், பிரச்சினைகளை தவிர்த்து விடும் அவருடைய சாதுர்யம்.

-அவருடைய தமிழ் ஆளுமை. ஒரு முறை அவருடைய நண்பர் தொலைபேசியில் தன்னுடைய மகனுடைய திருமண அழைப்பிதழில் அச்சிடுவதற்கு நல்ல வாக்கியங்கள் ஏதாவது சொல்லுமாறு கேட்ட போது, சற்றும் தாமதிக்காமல்

"யாயும் யாயும் யாராகியரோ நெஞ்சு நேர்ந்ததென்ன??
யானும் நீயும் எவ்வழியறிதும் உறவு சேர்ந்ததென்ன???"
என்று புறநானூற்று வரிகளை அவர் சட்டென்று சொல்ல கேட்டு நான் வியந்து போனேன்.

-அவருடைய English vocabulary skills. தினசரி ஆங்கிலம் பேசும் எங்களுக்கு எல்லாம் தெரியாத பல வார்த்தைகள் அவருக்கு சர்வ சாதாரணம்.எனக்கு திருமணம் ஆன புதிதில் எங்க wedding DVD பார்த்து கொண்டு இருந்தோம்.அதில் 'Best complements from Kith And Kin' என்று ஒரு வார்த்தை வந்தது. Kith And Kin என்பதற்கு சரியான தமிழ் வார்த்தை எனக்கோ என் கணவருக்கோ தெரிய வில்லை. 'சுற்றமும் நட்பும்' என்று ஒரு போடு போட்டார் என் மாமனார். நான் அசந்துட்டேன்.

- அவருடைய வேலையின் மீது அவருக்கு இருக்கும் dedication. நானும் என் கணவரும் IT துறையில் வேலை செய்கிறோம். அதிக வேலை பளு இருக்கும் நேரங்களில், வழக்கத்தை விட அதிகமான நேரம் அலுவலகத்தில் செலவிட நேரும் போது, ரொம்ப அலுத்துக்குவோம். ஆனால், being a PRI, மாங்கு மாங்கு ன்னு வெயிலும், மழையிலும் அலைந்து திரிந்து வேலை செய்து விட்டு வந்தாலும் ஒரு நாள் கூட தன் வேலையை பற்றி ஒரு அலுப்பு அவரிடம் தென் பட்டதே இல்லை...

'தனக்கு மாதா மாதம் சம்பளம் தரும் வேலை' என்பதை தாண்டி தபால் துறை மீது அவருக்கு ஒரு ஈடுபாடு இருப்பது உண்மை. கடந்த வருடம் நாங்க டென்மார்க் ல இருந்தப்போ ஒரு மூணு மாதம் அவர் அங்கே வந்து இருந்தார். அப்போ நாங்க வெளில செல்லும் போது, எங்க போஸ்ட் ஆபீஸ் அல்லது போஸ்ட் பாக்சை பார்த்தாலும் அவர் ரொம்ப உற்சாகமாகி விடுவார்.எங்க வீட்டுக்கு போஸ்ட் டெலிவரி பண்ண வரும் ஒரு போஸ்ட் வுமனை friend ஆக்கி கொண்டு, அங்க உள்ள போஸ்ட் ஆபீஸ் க்கு சென்று, அவர்களின் செயல் முறைகள் எல்லாத்தை பத்தியும் தெரிஞ்சுக்கிட்டு, நிறைய புகைப்படங்கள் எல்லாம் எடுத்து வந்தப்போ அவருடைய அந்த ஈடுபாடு ரொம்ப evident ஆ தெரிஞ்சுது.

அவருக்கு இந்த நாற்பதாண்டு கால அழகான அனுபவத்தை தந்த தபால் துறைக்கு எங்கள் குடும்பத்தினர் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
அவர் கடவுள் மறுப்பு கொள்கை உடையவர். ஆனால் எனக்கு கடவும் நம்பிக்கை நிறைய உண்டு. அவருடைய ஓய்வுக்காலம் அமைதியுடன் அமைய கடவுளை பிரார்த்திக்கிறேன்.
நன்றி, வணக்கம்.
..................................................................................

நான் எப்டி 'எங்க அப்பா இல்லன்னா நான் இன்னைக்கு இப்டி இல்ல' ன்னு சொல்லுவேனோ, அதே மாறி என் நாத்தனார், என் மாமனாரை பத்தி சொல்லுவாங்க....
அர்ஜுன் க்கு என் அப்பாவிடம் ஆங்கிலம் படிக்க குடுத்து வைக்கலைன்னு இதுக்கு முன்னால் ஒரு post ல சொல்லி இருந்தேன். ஆனா என் மாமனாரிடம் தமிழ் படிக்க குடுத்து வைத்து இருக்கிறான்.

.....................................................................................

And this post is undoubtedly dedicated to(No prizes for guessing) my Father in law, as a small gift for his retirement. This is wishing for him, peace,health and happiness today and everafter.

..................................................................................



பின்னால் சேர்த்தது 07Jan2009
சமீபத்தில் என் கணவர் இந்த பதிவை என் மாமனாரிடம் காட்டி இருக்கிறார்.அவர் குடுத்த கமெண்ட்:
"மொதல்ல அந்த பாட்டு புறநானூறு இல்ல...அடுத்தது lyrics மொத்தமும் தப்பு....இத படிச்சவங்க யாரும் சுட்டி காட்லையா???"
மானம் போச்.சொன்னதோட இல்லாம ஒழுங்கான வரிகளை எழுதி குடுத்து இத மாத்திடுன்னும் சொன்னாரு.அந்த வரிகள் இதோ:
"யாயும் ஞாயும் யாராகியரோஎந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்யானும் நீயும் எவ்வழி அறிதும்செம்புலப் பெயல் நீர் போலஅன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே"
--- குறுந்தொகை -40

Friday 28 November 2008

யாக்கை திரி, காற்றின் மொழி...

சமீபத்தில் ஒரு நண்பரிடம் யாக்கை திரி பாடல் பற்றி பேச நேர்ந்தது.
வைரமுத்து இந்த பாட்டை எழுதி இருக்கும் விதமும்(in his பெய்யென பெய்யும் மழை), அந்த பாட்டுக்கு ARR போட்ட composition உம்(Yes, this is one of the very few பாட்டுக்கு மெட்டு போட பட்ட privileged songs), மணிரத்னம் அதை உபயோகப் படுத்தி இருக்கும் லாவகமும் யாரையுமே கவரும்....நெனச்சு நெனச்சு சந்தோஷ பட்டுக்கலாம். எப்போ
கேட்டாலும் உற்சாக படுத்தும் பாட்டு.

ஆயுத எழுத்து ஆடியோ ரிலீஸ் ஆனப்போ, visuals ஐ ரொம்ப expect பண்ண வெச்ச பாட்டு எனக்கு இது தான்.
படம் வந்த அப்றோம், மத்த எல்லா பாட்டும் டிவி ல போடுவாங்க, ஆனா இந்த பாட்டு மட்டும் வரவே வராது....ரொம்ப காக்க வெச்ச பாட்டு....

ஆனா ஒரு சோகமான உண்மை என்னன்னா......சிலர் இந்த பாட்டோட அருமையான lyrics ஐ அனுபவிக்காம, வெறுமே இசையை மட்டும் ரசிச்சது தான்.
அவங்களுக்கு எல்லாம் (AR)Rehmania....:-)
யாக்கை ன்னா உடல் ன்னு அர்த்தம்.
உடலை திரியாக்கி காதலை சுடராக்கிய வைரமுத்துவுக்கு இந்த rehmania மேட்டர் தெரிஞ்சா அழுதுடுவாரா இருக்கும்....:-(


நான் எங்கயோ படிச்ச ஞாபகம். 'ஒரு கவிஞர் ரொம்ப ரொம்ப ரசிச்சு ரசிச்சு 'a drop of crocodile on the wall' ன்னு தன்னோட ஆங்கில கவிதை ல எழுதினாராம்.அதை படிச்சவங்கள்லாம் 'என்னங்க சொல்ல வரீங்க? புரியலையே' ன்னு சொன்னங்களாம்.
அதுக்கு அவர், "அட பாவி மக்கா...'பல்லி'ய(Lizard) தான் அவ்ளோ நுணுக்கமா எழுதி இருக்கேன்னு சொன்னாராம்'...பாவம் அவருக்கு எப்டி இருந்து இருக்கும்??

'மொழி'படத்துல 'காற்றின் மொழி' பாட்டு எல்லாருக்கும் பிடிக்கும்....அதுல ஒரு நுணுக்கமான மேட்டர் இருக்கு....நெறைய பேரு கவனிச்சு இருப்பீங்க...
அதுல நடுவுல BGM வர எடத்துல, ஒரு zebra crossing வரும்....அங்க Jo வந்து Prakashraj, Prithviraj, Swarnamaalya மூணு பேர் கிட்டயும் ஒரு action பண்ணுவாங்க
உடனே அவங்க மூணு பேரும் அந்த zebra crossing ல காலை மாத்தி மாத்தி ஒரு step போடுவாங்க.அந்த zebra crossing ஐ Keyboard ஆகவும், ஆடுற அந்த மூணு பேரை விரல்களாகவும் அந்த deaf and dumb பொண்ணு கற்பனை பண்ணுறது எவ்ளோ ஒரு அழகு...:-)

"ரொம்ப பெருமையா பொறந்த நாள் கொண்டாடிட்டு என்ன அதுக்கு அப்றோம் ஒண்ணையும் காணும்.... காணும்?" ன்னு எல்லாரும் கேவலப் படுத்துறாங்களேன்னு ஏதோ ஒண்ணு பதிஞ்சாச்சு.

With that I wish you all a very very happy weekend.

Friday 14 November 2008

Happy Birthday Synapse..:-)



Synapse க்கு இன்னைக்கு மொத பொறந்த நாள்....



போன வருடம் இதே நாள், Sweden ஆபீஸ் ல உக்காந்து முதல் பதிவு எழுதி publish பண்ணப்போ, I did not have a clue how blogging would be.

என் friend சுபாஷினி நான் blog ஆரம்பிச்சப்போ சொன்னா....'ஆரம்பத்துல இருக்குற அந்த வேகத்தை maintain பண்றது பெரிய challenge, வேகமா நெறைய பதிவு எழுதுறத விட consistent ஆ தொடர்ந்து எழுத முயற்சி பண்ணு' ன்னு...
ஒரு வருஷமா consistency maintain பண்ணியாச்சு....இனியும் பண்ணனும் ன்னு ஆசை இருக்கு....முயற்சி பண்றேன்.

இந்த பதிவு எனக்கு பின்னூட்டம் போட்டு,தனி மடல் அனுப்பி(இப்டி உசுப்பேத்தி உசுப்பேத்தி தான்...ஒடம்பு ரணகளமா ஆயிருக்கு...:-)...) உற்சாகம் குடுத்துட்டு இருக்க எல்லாருக்கும் dedicate பண்ண படுகிறது...

On this day, I wish and pray for you all, a healthy and peaceful life(என்னை பொறுத்த வரைக்கும் health உம், peace உம் இருந்தா மத்த எல்லாம் தன்னால வந்துடும்.) and ofcourse a very very happy reading:-)...

Sunday 9 November 2008

பனை மரக்காடே! பறவைகள் கூடே! மறுபடி ஒருமுறை பார்ப்போமா?

தமிழ் திரையுலகம் இலங்கை பிரச்சினையை கண்டித்து உண்ணாவிரதம் இருந்த அன்னைக்கே இத பத்தி எழுதணும் ன்னு நெனச்சேன். எப்டியோ விட்டு போச்சு....ஆனா இன்னைக்கு இந்த போஸ்ட் படிச்சதும், இத பத்தி கண்டிப்பா எழுதணும் ன்னு தோணுச்சு.


நாங்க டென்மார்க் ல இருந்தப்போ, அங்க நெறைய இலங்கை தமிழர்கள் இருந்தாங்க. நாங்க ஒரு srilankan store ல தான், groceries எல்லாம் வாங்குவோம்.
பார்த்தீபன் ன்னு ஒருத்தர், என் கணவருக்கு colleague. இலங்கை பிரச்சனையால் அங்க இருந்து சில வருஷங்களுக்கு முன்னால் இடம் பெயர்ந்து டென்மார்க் ல வேலை செஞ்சுக்கிட்டு இருந்தாரு. அவரோட மனைவி, அவங்க சின்ன புள்ளயா இருக்கப்போவே அவங்க அம்மா, அப்பா எல்லாருமே இந்த பிரச்சனையால் இடம்பெயர்ந்து லண்டனுக்கு போய்ட்டாங்களாம். பார்த்தீபனுக்கும் அவங்களுக்கும் திருமணம் ஆனதுக்கு பிறகு அவரோட மனைவியும் டென்மார்க் வந்துட்டாங்க. எங்க வீட்டுக்கு எதிர்த்த வீடு. அர்ஜுன் பொறந்து இருந்தப்போ எங்க வீட்டுக்கு அவனை பாக்க வந்தாங்க.... வந்ததும் 'நான் அவனை தூக்கட்டுமா?" ன்னு கேட்டு அர்ஜுன் ஐ எடுத்து மடியில் வெச்சு கொஞ்சிக்கிட்டு இருந்தாங்க....அர்ஜுன் க்கு ஏக பட்ட gift வாங்கிட்டு வந்துருந்தாங்க. அவங்க பொண்ணுக்கு ரெண்டு வயசு, ரொம்ப துறு துறுன்னு அழகா இருப்பா..... எங்க அம்மா அவங்களுக்கு பஜ்ஜி செஞ்சு குடுத்தாங்க.... நாங்க எல்லாரும் சாப்பிட்டுகிட்டு இருந்தோம்... அந்த குட்டி பாப்பா எங்க அம்மாவை, அம்மம்மா அம்மம்மா ன்னு சிலோன் ரேடியோ ல வர்ற மாறி கூப்பிட்டுகிட்டு இருந்தா......ரொம்ப கல கலன்னு பேசிக்கிட்டு இருந்தோம்....

திடீர்னு பார்த்தீபன் மனைவி 'நீங்க எப்போ இந்தியா போறீங்க?' ன்னு கேட்டாங்க ....அப்போ அர்ஜுன் பொறந்து ஒரு வாரம் ஆயிருந்துச்சு.... 'டாக்டர் ஒரு மாசம் கழிச்சு தான் flight ல கூட்டிட்டு போலாம் ன்னு சொன்னாரு, அதுனால அடுத்த மாசம் போறோம் " ன்னு சொன்னேன்.
உடனே அவங்க அவங்க மடில இருந்த அர்ஜுனை கையில் எடுத்து அவன் கிட்ட பேசுற தொனியில் அவனை hold பண்ணிக்கிட்டு, "நீ அதிர்ஷ்டக் காரன், பொறந்து ஒரு மாசத்துல சொந்த நாட்டுக்கு போற.....நான் என் நாட்டை விட்டு வந்து பதினெட்டு வருஷம் ஆகுது, இன்னும் திரும்பி போக முடியலை' ன்னு சொன்னாங்க....எங்க எல்லாருக்கும் சாப்பிட்டுக்கிட்டு இருந்த பஜ்ஜி தொண்டைலையே சிக்கிடுச்சு...எல்லாருக்கும் ஒரு நிமிஷம் கண் கலங்கி அந்த situation ரொம்ப கனமா ஆயிடுச்சு...எல்லாருமா சேந்து எப்டியோ சமாளிச்சு பழைய நெலமைக்கு வந்தோம்.....

இலங்கை பிரச்சனை பத்தி படிச்சு, டிவி ல பாத்து நான் உணர்ந்தத விட, அன்னைக்கு அவங்க சொன்ன அந்த ஒரு வரியில் நானும் அவரும் அம்மாவும் உணர்ந்தது அதிக வலி.

பார்த்தீபன் அதுக்கு அப்றோம் தான் சொன்னாரு, அவங்க அம்மா, அக்கால்லாம் இன்னும் திரிகோண மலை பகுதில தான் இருக்காங்களாம். அங்க ரொம்ப சண்டை நடக்குறாதால அவர வரவே வேணாம் ன்னு சொல்லிட்டாங்களாம்.....'அவங்களை எல்லாம் பாத்து பல காலம் ஆயிடுச்சுன்னு' சொன்னாரு....

இந்தியா-இலங்கை கிரிக்கெட் மேட்ச் நடக்குறப்போ, என் கணவர் கவனித்து இருக்கிறாராம்....பார்த்தீபன் இலங்கை க்கு பயங்கரமா சப்போர்ட் பண்ணுறதை.....ஆனா அந்த நாட்டு அரசாங்கம் அவங்களை எல்லாம் அந்த நாட்டு பிரஜைகளா நடத்த போறது என்னைக்குன்னு தான் தெரியலை....

Friday 7 November 2008

நிலா! நிலா!

சென்ற முறை அம்மா வீட்டுக்கு போனப்போ, ஒரு பழைய டைரி கெடைச்சுது.
நான் 12th படிக்குறப்போ, என்னோட competitions க்கு prepare பண்ற materials எல்லாம் எழுதி வெக்குற டைரி.
ஒரு on the spot கவிதை போட்டிக்கு எழுதின கவிதை(???).
சந்திராயன் பற்றி படிக்கும் போது இது தான் எனக்கு ஞாபகம் வந்துச்சு...
சின்ன புள்ள தனமா இருக்கு??? ன்னு யாரும் கேக்க கூடாது....சொல்லிட்டேன்.



நிலா
-------
வெள்ளி நிலவே....உன் விருப்பம் போல சிரிக்கிறாய்...
வான்வழி செல்லும் ராஜகுமாரியாய் விண்ணில் பவனி வருகிறாய்...

என்ன மந்திரம் செய்தாய் நீ?
எங்கள் வீட்டு பிள்ளை சோறுண்ண உன்னை கேட்கிறது...

மக்கள் தொகை பெருக்கத்தால்
எங்கள் பூமித்தாய் மட்டும் பாரம் தாங்காமல் நசுங்க...
நீர்,வளி இல்லாததால் நீ மட்டும் சுதந்திரமாய் !!!

ஆர்ம்ஸ்ட்ராங்கும் ஆல்ட்ரினும் தானா?
நாளை யாம் அனைவருமே உன்னில் குடியேறி
வெற்றி கொடிஏற்றத்தான் போகிறோம்....
காத்திரு கவின் நிலவே!
வளர்பிறையாய்!!!
பௌர்ணமியாய்!!!!!!
-------------------------------------------------------




Thursday 6 November 2008

பாட்டு போட்டி.

இந்த லிரிக்ஸ் எந்த பாட்டுல வருது சொல்லுங்க பாப்போம்....கூகிள் பண்ணாம சொல்லணும் அதான் போட்டி...
clue இந்த line லேயே இருக்கு.

"அணைக்கும் ஆசை ஆயிரம்.. கலைக்கும் பாஷை பாசுரம்..
சுரம் ஏழிலும்.. சுவை ஆறிலும்...... "