Wednesday 30 December 2009

அப்போ நம்ம உலக பொதுமறைன்னு சொல்றது எல்லாம்?

கன்னட சூப்பர் ஸ்டார் விஷ்ணுவர்தன் இன்று மாரடைப்பால் காலமானார்.

சற்று முன் என்னுடன் வேலை செய்கிற ஒரு பெண்ணும் நானும், அவளுடைய ஆக்டிவாவில் வெளியில் சென்று வந்தோம்.

ஒரு மெயின் ரோட்டில் ரெண்டு பைக்கில் கர்நாடக கொடியுடன் இருவர் ஏதோ கன்னடத்தில் சத்தமாக சொல்லிக்கொண்டே போக, பின்னால் ஒரு திறந்த வேனில், விஷ்ணுவர்த்தன் புகைப்படத்துக்கு மாலை சாற்றப்பட்டு பைக்கை தொடர்ந்து கொண்டு இருந்தது. அந்த தெருவின் கடைகாரர்கள் "பட பட" என்று ஷட்டர்களை இழுத்து விட்டார்கள். எங்களுக்கும் ஏதோ புரிந்தது. சட்டென்று வண்டியை திருப்பி ஆபீஸ் வந்துட்டோம்.

வந்து நேரா லஞ்ச் போனோம். விடுமுறை நாட்கள் என்பதால் வழக்கமான லஞ்ச் மேட்கள் leave. இருக்கிறவங்க எல்லாம் ஒண்ணா சேந்து தான் போய்கிட்டு இருக்கோம். ரெண்டு வடக்கு, ரெண்டு ஆந்திரா, ஒரு தமிழ்-இது நான் , ஒரு கன்னடா, ஒரு மலையாளி என்று ஒரு பாரத விலாசாக இருந்த லஞ்ச் டேபிள்.

நாங்கள் நடந்ததை சொல்லவும், ராஜ்குமார் மறைவின் போது, பெங்களூரில் நடந்த நிகழ்வுகளை நினைவில் கொணர்ந்து, பேச்சு எங்கெங்கோ சென்றது.ஒரு வடக்கர் தான் ஆரம்பித்தார்.

"இதென்ன ஒரு நடிகர், இயற்கையாக இறந்ததற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா?"

ஒரு தெலுங்கரை பார்த்து, "உங்க ஊரிலும் தான் ......ரை, கடவுளாக நினைக்கிறார்கள்".
தெலுங்கர் பதிலுக்கு, " ஏன், உங்க ஊர்ல இல்லையா? ..............னுக்கு உடம்பு முடியாமல் இருந்தப்போ பூஜை எல்லாம் பண்ணீங்க?"

அடுத்த வடக்கர்.

அவருக்கு டார்கெட் நான்.

"உங்க ஊருல ................... துக்கு, ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா, இப்டி தான் கலவரம் பண்வீங்களா?"

"ஒரு மனுஷ உயிர் ஜோக் பண்ற விஷயம் இல்லை"  இது என்னை அடுத்து அமர்ந்து இருந்த மலையாளி. கொஞ்சம் சீரியஸ் ஆயிட்டார்.

இப்படி நடிகர்களில் ஆரம்பித்த பேச்சு, அப்படியே தெலுங்கானா, காவேரியை எல்லாம் தொட்டு, நம்ம திருவள்ளுவரில் வந்து நின்றது.
" சமீபத்துல கூட ஒரு சிலை திறந்தாங்களே...எத்தனை பாதுகாப்பு எத்தனை போலீசு, ஆமா யார் அவர்?"


"யாரோ முனிவராம்" (some saint itseems)

கேட்டவர் தெலுங்கர். பதில் சொன்னவர் கன்னடர்.

இதுக்கு மேல என்னால முடியலை.

"முனிவரா? அவர் யார் தெரியுமா?" ன்னு ஆரம்பிச்சு மூச்சு வாங்க சொல்லி முடிச்சப்போ,

"ச்ச ச்ச 1330 இல்ல, நூத்து பதினஞ்சோ என்னவோ" (hey not 1330 man , some 115 )

(அட பாவி..எனக்கேவா?)....."இல்ல 1330 தான்"  லேசாக அழுகை வந்தது.

"சமீபத்துல நான் கன்னியாகுமரி டூர் போனேன். அங்க கூட அவரோட சிலை கட்டி இருக்காங்க, அதன் உயரம், அடிக்கணக்கில் வந்து அவர் எழுதின பாட்டுகளோட எண்ணிக்கை ன்னு தான் சொன்னாங்க..I am sure its not 1330 feet tall"

"Oh thats 133 feet tall. The 1330 couplets are arranged as 133 parts with 10 couplets each"

"Oh ok"

பதிவின் தலைப்பை ஒரு தரம் படிக்கவும்.

Monday 28 December 2009

Three Idiots (படம் இன்னும் பார்க்கலை)

ஒருத்தி ஒன்றுக்கு மூணு SuperHit படம் பாத்தா என்ன நடக்கும்? இதான்.

இந்த பதிவில் இருக்கும் கமெண்டை பார்த்த பிறகும்,  படம் பார்க்க வேண்டும் என்ற சபலம். தல, தளபதில்லாம் மசாலா வறுக்கும் போது வர்ற எரிச்சல் சூர்யா மேல வரலை. இருந்தாலும் க்ளைமாக்ஸ்ல கார்ல ஒட்ட வைச்ச bomb எடுத்து ஹெலிகாப்ட்டர்ல போயிட்டு இருக்க வில்லன் மேல எரிஞ்சுட்டு, அப்டியே தண்ணில குதிச்சு பொழைக்கறது எல்லாம், கேப்டன் கூட இப்போல்லாம் இந்த மாறி பண்ண மாட்டார். பொதுவா KSR படத்துல எல்லாம் அவர் ஒரு சீன்ல வந்து எதாச்சும் பண்ணுவார். படையப்பால 'கிக்கு ஏறுதே' பாட்டுல அழகா நாலு ஸ்டெப் போடுவார்.தெனாலில மீனாவை கூட்டிட்டு வருவார். இதுல புரடியூசரை அழைச்சுட்டு வந்து குழி பணியாரம் செய்ய சொல்லி தரார். எனக்கு தீபாவளி அன்னைக்கு வெறும் பணியாரம் சாப்பிட்டு வயிறு வலி வந்த மாறி இருந்துச்சு.

வயிறு வலியோட விட்டதா? ஜெயம் ரவி அப்படி என்னதான் பண்ணிருக்கார்ன்னு பாக்கலாம் ன்னு ராத்திரில ஒரு திடீர் முடிவு.
என்னென்னவோ பண்ணிருக்கார். எருமைமாட்டுக்கு பிரசவம் பாக்கறார். பொலிடிகல் எகனாமிக்ஸ் சொல்லி தரார். பாத்ரூம் கழுவறதுல கூட பாடம் இருக்குன்னு பீலிங்க்ஸ் விடறார். காட்டுக்குள்ள வெள்ளைக்காரன்களை (அட, படத்துல அவிங்களை அப்டி தான் சொல்றாங்க), பொசுக்கு பொசுக்குன்னு வீசி தள்ளுறார். கடசில ஏவுகணையை கூட திசை மாத்தி விடறப்போ, என் வயித்து வலியை தலைவலியா மாத்தி விட்டார். நல்ல வேளையாக,ஏவுகணையை பிடிச்சு தொங்கிட்டு போய்....அந்த மாதிரி முடிவு எல்லாம் அவர் எடுக்கலை.அந்த அஞ்சு பொண்ணுங்களும் ஆரம்பத்துல மொரண்டு பிடிக்குறதும், அப்றோம் சரி ஆறதும், இதெல்லாம் Chak De India விலேயே பாத்துட்டோம். ஆனாலும் கல்பனாவா வர்ற அந்த பொண்ணு ரொம்ப ஸ்மார்ட், சின்மயி குரலா?
Commodity<->Commodity
Commodity->Money->Commodity
Money->Commodity->Money
என்று கார்ல் மார்சை எளிமையாக சொல்லி தருவது பிடித்தது, எனக்கு கூகிள் பண்ண அடுத்த மேட்டர் ரெடி.

இதோட நிறுத்தி இருந்தா....சரி சரி விதி வலியது.
பதினஞ்சு வருஷமாச்சு எங்க ஊரில் நான் தியேட்டர் பக்கம் போய். எங்க ஊர் பொண்ணுங்க, பெரிய மனுஷி ஆனதும், "அதெல்லாம் ஆம்பிள்ளைங்க சமாச்சாரம்" என்று தியேட்டரை ஒதுக்கி வெச்சுடுவாங்க.பிறகு கல்யாணம் ஆனதும் கணவரோடு போக ஆரம்பிப்பாங்க. நான் கல்யாணம் ஆன பிறகும் போகலை. டெண்டுக்கொட்டகையை சற்றே upgrade செய்த நிலையில் இருக்கும் எங்க ஊரு தியேட்டருக்கு கணவரை அழைத்து போற அளவுக்கு தைர்யம் இல்லை என்பதாலும், பெரும்பாலும் உலகத் தொலைகாட்சிகளில் முதன் முதலா போட்ட படங்கள் தான் எங்க ஊருல ரிலீஸ் ஆகிக்கொண்டு இருந்ததாலும் எனக்கு அங்க போகணும்ன்னு தோணினதே இல்லை. ஆனாலும் சமீப காலமா என் தம்பி ரொம்பவே பில்டப் கொடுத்தான். 'நம்ம ஊரு தியேட்டர் ரொம்ப முன்னேறிடுச்சு, புது படம் ரிலீஸ் அன்னைக்கு நம்ம ஊருலயும் ரிலீஸ் பண்றாங்க.DTS பண்ணிட்டாங்க" அப்டி இப்டின்னு ரொம்ப தாளிச்சுட்டு இருந்தான். சரி இந்த வாட்டி போய் பாத்துடறதுன்னு ஒரு முடிவெடுத்தாலும், "இந்த படமா? என்று சற்று உதறியது. "இந்த படத்துக்கு two wheelerல போனா, பெட்ரோல் allowance தராங்களாம்"  கிண்டலை எல்லாம் துச்சமென தள்ளிட்டு கிளம்பியே விட்டேன்.கூடவே ரஸ்க் சாப்பிட இன்னும் நாலு பேரை சேத்துக்கிட்டேன்.

Scooty park பண்ண போன எடத்துல எனக்கு மொத அதிர்ச்சி, பத்து ருபாய் ஒரு வண்டிக்கு. Fame லையே அவ்ளோ தான்.
உள்ள நுழைஞ்சதும் "வாங்க வாங்க"
ஓனர் சொந்த காரர். ஏதோ கல்யாண வீட்டுக்கு வந்த மாதிரி வாசல்ல நின்னு கூப்பிட்டார். கூப்பிட்டதோட விட்டாரா?
"நீ ஒல்லியா இருக்கப்போ பாத்ததும்மா" Grrrrr.
'டிக்கட் இருவது ரூபா இருக்கும், எக்ஸ்ட்ரா நூறு ரூபா இண்டர்வல்க்கு' என்று கணக்கு போட்டு வெறும் இருநூறு ரூபாயோட போய் இருந்தேன்.
"நூறு ரூபாய நீட்டி அஞ்சு first class டிக்கட் குடுங்க"ன்னதும்,டிக்கெட் குடுக்கறவர் டென்ஷன் ஆயிட்டார்.எனக்கு ரெண்டாவது அதிர்ச்சி.
எங்க ஊரு தியேட்டர்ல டிக்கெட் அம்பது ரூபாயாம். தம்பிகிட்ட அம்பது ரூபா கடன் வாங்கி,அஞ்சு டிக்கெட் எடுத்து உள்ள போனோம்.
தியேட்டர் சீட்டெல்லாம் கூட மாறலை. DTS மாத்திரம் புதுசு.
"நீ கடைசி கடசியா நாட்டாமை பாக்க வந்தப்போ இங்க தான்டி உக்காந்த" விட்டா என் தம்பி 'போன ஜென்மத்துல நீ...' ன்னு எல்லாம் சொல்வான் போலிருந்துச்சு.

இந்த படத்தை பத்தி ஏற்கனவே நெறைய பேரு FIR போட்டுட்டாங்க. படத்தை பத்தி எனக்கும் சொல்ல ஒன்னும் இல்லை. ஆனா படம் பாத்தப்போ நடந்த சில விஷயங்களை மாத்திரம் பகிர்ந்துக்கிறேன்.

-படம் ஆரம்பிச்சு கிட்ட தட்ட முக்கா மணி நேரம் கழித்து ஒரு நாலு பெண்கள் எங்களுக்கு முன் வரிசையில் வந்து உக்காந்தாங்க. வந்ததும் திரும்பி பின்னால் இருந்த எங்களிடம், "ஏங்க? அவர் பையன் ஆடுற பாட்டு போயிடுச்சா?" சாமீ....சத்தியமா நீங்க மாஸ் ஹீரோங்க.

-"உனக்கெல்லாம் போலீஸ் வேணாம். வேற வேற வேற...." ன்னு ஹீரோ பஞ்ச் சொல்றப்போ, முன் சீட்டு குழந்தை ஒன்று "பூச்சாண்டீ வந்துட்டான்" என்று அழுது ரகளை பண்ணிடுச்சு.

-இடைவேளைக்கு முன்னாடி ஒரு encounter சேசிங் காட்சி இருக்கும். பாதி சேசிங் போது என் கசின் சொன்னா, "பரவால்லக்கா, அட்லீஸ்ட் கிளைமாக்ஸ் கொஞ்சம் விறு விறுப்பா இருக்கு".

-காலைலேர்ந்தே நான் எங்கயோ கிளம்பறத மோப்பம் பிடிச்சு, "என்னை விட்டுட்டு எங்கம்மா போறீங்க?" ன்னு கேட்டுட்டே இருந்த அர்ஜுனை பிளான் பண்ணி வீட்டுல தூங்க வைச்சு விட்டுட்டு போன எனக்கு கடவுளா பாத்து பண்ண விஷயம். முன் சீட்டு பெண்மணி தன்னுடைய மூணு வயசு பையனை பாத்துக்கற பொறுப்பை என்கிட்டே விட்டுட்டு இன்டர்வல்ல சமோசா வாங்க போய்டுச்சு. அந்த பையனா, 'அப்பாடா பூச்சாண்டி போயிட்டான்'னு குஷில அங்க இங்க ஓடறது. அத அவங்கம்மா வர்ற வரைக்கும் சமாளிக்குறப்போ, "நல்லா வேணும்" ன்னு அர்ஜுன் ஞாபகத்துல வந்து சொல்லிட்டு போனான்.

-ஆமா இந்த படத்தை எல்லாரும் ஏன் இவ்வளோ திட்றீங்க? அம்பது ரூபாக்கு எவ்வளோ... பெரிய படம்? சான்சே இல்ல.படம் முடிஞ்சுடுச்ச்சுன்னு எல்லாரும் கிளம்பி போய்ட்டாங்க. நல்ல வேளை, பார்க்கிங் கிளியர் ஆகட்டும் ன்னு வெயிட் பண்ணதால சல்யுட் அடிக்கறதெல்லாம் பாக்க முடிஞ்சுது. இல்லன்னா முக்யமான சீன மிஸ் ஆயிருக்கும்.

நல்லவேளை, நம்ம சீயான் "கொக்கொரக்கொ"ன்னு கத்தி கத்தி காமெடி பண்வாரே, அந்த படமும் பார்க்க வேண்டியது. ஏதோ நல்ல நேரம்.பிளான் கான்செல் ஆனது. அதையும் பாத்து இருந்தா, "Four mistakes of my life" அப்டின்னு போஸ்ட் போடறதுக்கு கூட பொழச்சு வந்து இருக்க மாட்டேன்னு நெனைக்கறேன்.

"ஏங்க வர வர சீரியஸ் பதிவு எழுதறீங்க? உங்க வழக்கமான போஸ்ட்லாம் எங்க?"
"ஹ்ம்ம்...எல்லாம் சில இலக்கியவாதிகளை பாத்து நானும் சூடு போட்டுக்கொள்ள முயற்சி செய்யறதோட விளைவு தான்"

ரொம்ப சூடு போட்டுக்கொண்டதால் எனக்கே சூடு தாங்க முடியாமல் இந்த பதிவு.

Sunday 20 December 2009

நீங்கள் இடதா? வலதா?

உன்னை போல் ஒருவன் படத்தில் ஒரு வசனம் வரும். ஒரிஜினலில் இல்லாதது. கமல் காமன்மேனாக நடித்ததால் விளைந்தது.
மோஹன்லால் கமலிடம் சொல்வார்."நீ சொல்லலன்னா கூட உன்னை பற்றி நிறைய விஷயங்கள் எனக்கு தெரியும், .....உன் இடது கை பழக்கம் வரைக்கும்"
"oh எல்லாம் தெரியுமோ? உங்களுக்கு மகாத்மா காந்தி தெரியுமா?"
"அவர் பேரை சொல்ல கூட உனக்கு அருகதை இல்ல"
"ஏன் உங்களுக்கு இருக்கா? இல்ல எவனுக்கு இருக்கு? he was ambidextrous . unfortunately i am in that strand too.எனக்கு இடது வலது பேதம் கிடையாது. ஆனால் அது எழுதறப்போ மட்டும்”.

என்னவோ எனக்கு அந்த மொத்த வசனமும் மிகவும் பிடித்து போனது.

ambidextrous ன்னா என்ன? காந்தியையும் கமலையும் தவிர வேற யாரெல்லாம் ambidextrous?
ஏன் இடது? ஏன் வலது ? இப்படி எனக்குள் சில கேள்விகளை விதைத்த வசனம்.

ambidextrous என்பதற்கு "தன்னுடைய இரு கைகளையும் திறன்பட சம அளவில் உபயோகிக்கும்" என்று பொருள்.சமஸ்கிருதத்தில் 'சவ்யசச்சி' என்று சொல்லுகிறார்கள்.

புராண,இதிகாச காலங்களிலேயே இந்த ambidexterity புழக்கத்தில் இருந்து இருக்கிறது.

மன்மதன் ambidextrous தானாம். சிம்புவை சொல்லலை. என்ன தான் அவர் ரெண்டு கை விரல்களையும் சுற்றி சுற்றி பஞ்ச் டயலாக் பேசினாலும்....நான் சொல்வது காதல் கடவுள் மன்மதன். ரதியுடைய husband.

வால்மீகி ராமாயணத்தில் பாலகாண்டத்தில் விஸ்வாமித்திரர் ராம லக்ஷ்மனர்களுக்கு குமாரசம்பவம் சொல்லுவதாக இருக்கிறது.
தேவர்கள் தங்களுக்கு 'சூரனின் அட்டகாசத்தை ஒடுக்க தேவசேனாதிபதி வேண்டும்' என்று சிவனை வேண்டியதாகவும், அதன் பொருட்டு முருகன் அவதரித்ததாகவும் புராணம் கற்பிக்கும் போது முருகன் ambidextrous என்று சொல்கிறார். அழகில் மாரனையே(மன்மதன் தான் மாரன், 'நின்னையே ரதி என்று...' பாடலில் கூட, பாரதி சொல்வாரே, 'மாரன் அம்புகள் என்மீது மாறி மாறி....') மிஞ்சியதால் முருகனுக்கு 'கு'மாரன் என்ற பெயராம்.பின்னாளில் காளிதாசர் குமாரசம்பவம் எழுதிய போது, தலைப்பை ராமாயணத்தில் இருந்தே தேர்ந்து எடுத்ததாகவும் சொல்கிறார்கள்.

"ska.nda iti abruvan devaaH skannam garbha parisravaat |
kaartikeyam mahaabaahum kaakutstha jvalana upamam ||"
- சர்கம்-37,பாலகாண்டம்.வால்மீகி ராமாயணம்

"And gods called that boy, oh, Rama of Kakutstha, whose glow is like that of flaring fire and who is ambidextrous as 'Skanda' for he slid down from the secretions of a womb.

கம்ப ராமாயணத்தின் பால காண்டத்தில் குமாரசம்பவம் பற்றி இருக்கிறதா என்று தெரிய வில்லை. எனக்கு தெரிந்த வரையில் இல்லை. கேட்டால் சிலர் கம்பர் செய்தது ரீமேக்.மொழி பெயர்ப்பு அல்ல என்று சப்பை கட்டுகிறார்கள்.

Ambidexterity ஆரண்யகாண்டத்தையும் விடவில்லை. ஆரண்ய காண்டத்தில் அகஸ்திய முனிவரை சந்திக்கும் ராமனுக்கு, அகஸ்தியர் எடுக்க எடுக்க குறையாத இரு அம்புக்கூடைகளையும்(Quiver), ஒரு வில்லையும், ஒரு வாளையும் தருகிறார். "அந்த வில் விஸ்வகர்மாவால் டிசைன் செய்யப்பட்டது. 'Quivers full of arrows' பிரம்மனால மகாவிஷ்ணுவுக்கு பரிசாக அளிக்கப்பட்டவை. அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் நடந்த கடுமையானபோரில், இந்த அம்பின் மூலமே மகாவிஷ்ணு அசுரர்களை அழித்து தேவர்களை காத்தார். 'அந்த வாள் இந்திரன் மூலம் என்னிடம் சேர்க்க பட்டது,இவற்றை எல்லாம் ராமனிடம் சேர்க்கவே காத்திருப்பதாக" சொல்கிறார் அகத்தியர். இந்த தெய்வாம்சம் பொருந்திய ஆயுதங்களை உபயோக்கிப்பவன், சவ்யசச்சியாக இருக்க வேண்டுமாம்.கிரேதா யுகத்தில் ராமன் சவ்யசச்சியாக இருந்து இருக்கிறான்.

இந்த ஆயுதங்கள் பற்றிய குறிப்பு கம்பராமாயணத்தில் இருந்து.

இப் புவனம் முற்றும் ஒரு தட்டினிடை இட்டால்
ஒப்பு வரவிற்று என உரைப்ப அரிய வாளும்,
வெப்பு உருவு பெற்ற அரன் மேரு வரை வில்லாய்
முப்புரம் எரித்த தனி மொய்க் கணையும், நல்கா.
- அகத்திய படலம், ஆரண்ய காண்டம், கம்ப ராமாயணம்.

இந்த சவ்யசச்சி அந்தஸ்து பின் துவாரபா யுகத்தில் அர்ஜுனனுக்கு கிடைத்து இருக்கிறது. தன்னுடைய இரு கைகளாலுமே அம்பெய்துவதில் தேர்ந்தவனாக இருந்து இருக்கிறான் அர்ஜுனன்.


புராணத்தில் வில்வித்தை காட்டின அர்ஜுனன் மாத்திரம் ambidextrous இல்லை. கிரிக்கெட் பேட்டை வைத்து வித்தை காட்டுகிறாரே சச்சின்,அவரும் ambidextrous தான். கிரிக்கெட் பேட்டை வலது கையால் பிடித்து விளாசும் இவர், ஆட்டோகிராப் போடுவது இடக்கையாலாம்.'கலியுக அர்ஜுனன்' ?

ambidextrous பற்றி சற்று தெளிந்தது, அதென்ன இடது வலது?

இடது வலது என்ற வார்த்தைகளை நம் அன்றாட வாழ்க்கையில் அடிக்கடி உபயோக்கிறோம்.

Football முதலான விளையாட்டுகளில் left wing என்று இருக்கிறது. ஆரம்ப காலத்தில், வலது காலால் பந்தை விளையாடுபவர்கள் வலது விங்கிலும், இடது காலால் பந்தை உதைப்பவர்கள் இடது விங்கிலுமாக position செய்ய படுவார்களாம்.
அட மனிதர்களை விடுவோம், மரத்திலும் கூட இடது சார்ந்த மரங்கள் இருக்கிறது தெரியுமா? binary மரத்தில்.


Leftist tree என்கிறார்கள். பைனரி ட்ரீயில் s - வேல்யு என்று ஒரு விஷயம் உண்டு. எந்த ஒரு node க்கும் s - வேல்யு உண்டு. அந்த node இலிருந்து, leaf வரைக்குமான தூரம்.அதில் ஒரு கண்டிஷன் கூட உண்டு. வலது node களின், S வேல்யு இடதை விட குறைவாக இருக்கும் பட்சத்தில் அந்த tree, leftist tree என்று சொல்ல படுகிறது. குழப்பமாக இருக்கும் என்று நினைக்கிறேன் :-)

ஈசியா புரியணும்னா இப்படி அர்த்தம் பண்ணிக்கொள்ளலாம், binary tree யின், வலது subtree, இடத்தை விட குள்ளமாக இருப்பின், அது leftist tree .As simple as that .

அரசியலில் இடது சார்ந்த கட்சிகள் யார் (எல்லாம்), என்று நமக்கு தெரியும். ஆனால் அவர்களுக்கு ஏன் இடது என்று பெயர் வந்தது என்று தெரியுமா? பிரெஞ்சு புரட்சிக்கு பிறகு, பாராளுமன்றத்தில், "எல்லாருக்கும் எல்லாமும்" என்ற 'equal rights'
கொள்கை உடையவர்கள் பாராளுமன்றத்தின் இடது புறமாக அமர்ந்ததில் இந்த பெயர் ஏற்பட்டது என்று வரலாறு இருந்தாலும் ஒரு வேடிக்கை கதை கூட சொல்கிறார்கள்.

இங்கிலாந்து நாட்டில் ஒரு ராஜா ஆட்சி செய்து வந்தாராம் அரசருக்கு இரண்டு கைப்பக்கமும் சேனாதிபதி, மந்திரிகள், பிரபுக்கள், ரிஷிகள் முதலாளிமார்கள் எல்லாம் உட்கார்ந்திருப்பார்கள். இந்த சபையில் உழைப்பாளிகள் மற்றும் விவசாயிகளுக்கு இடமில்லை. இந்த நிலையில் அரசியல் உரிமை, நல்ல வாழ்வு வேண்டுமென பெரிய கலகம் வெடித்து ராஜா அரண்மனையை விட்டு வெளியே வரவே வழியில்லை. சரி தொழிலாளிகளும் அரசவையில் பங்கேற்கலாம் என்று உத்தரவிட்டார். உடனே பிரபுக்கள் "ராஜா ராஜா ஒரு சின்ன விண்ணப்பம் நாங்களெல்லாம் சேற்றிலே உழன்று வீச்சமெடுத்த பஞ்ச பராரிகளுடன் எப்படி உட்காரமுடியும்? என்றார்கள் உடனே ராஜா நீங்களெல்லாம் எனக்கு வலதுகைப்பக்கம் அமருங்கள், தொழிலாளிகள் அப்படியே எனது பீச்சாங்கை பக்கமாக இருந்துவிட்டுப்போகட்டும் என்று உத்தரவிட்டாராம்.

இந்த கதை உண்மையிலேயே நடந்ததா என்று தெரியவில்லை.
அது கிடக்கட்டும். பின்னூட்டத்தில் சொல்லுங்கள், நீங்கள் இடதா? வலதா?
அட, நான் கூட காமன் (வு)மென் தான். எழுதுறத பத்தி மட்டும் தான் கேட்கிறேன்.

Friday 11 December 2009

பாட்டு போட்டி - 4

இது ஒரு லிரிக்ஸ் போட்டி.
பாட்டோட நடுவில இருந்து ஒரு வரி சொல்லி இருக்கிறேன்.
பாட்டோட முதல் வரி என்னன்னு கண்டு பிடிங்க. கூகிள் செய்யகூடாதுன்னு சொன்னா கேக்கவா போறீங்க. Ok, Start Music.

1)"அந்த இயற்கை அன்னை படைத்த ஒரு பெரிய ஷவர் இது".

2)"கட்டு கட்டா நோட்டடிச்சா கரண்டு பில்லு கட்டுறதாரு?"
என்ன தத்துவம்...சான்ஸே இல்ல... போங்க...:-)

3)"யாழ் உடலினில் வாள் இடைவெளி நுரையாய் மறையாதா நிறைத்திடு..."
குறிப்பு: நானும் எவ்வளவோ தடவை ரீவைண்ட் செய்து கேட்டதில், எனக்கு புரிந்தது இது. சரியா தப்பா தெரியலை. ட்ரை பண்ணுங்க.

4)"சேலைகளை திருடி இவன் செய்த லீலை பல கோடி."

5)"ஒரு ஜீன்ஸ் அணிந்த சின்னக்கிளி ஹலோ சொல்லி கைகுலுக்க தங்க முகம்..."

6)As always, connect the above five songs.அட இது லிரிக்ஸ் இல்லை. மேல உள்ள அஞ்சு பாட்டுக்கும் ஒரு தொடர்பு இருக்கு. What is that?

Wednesday 9 December 2009

அப்துல் கலாம் : கனவு நாயகன்


சில புத்தகங்கள் பார் சாக்லேட் மாதிரி. ஒரு கடி கடித்த பிறகு கவர் போட்டு உள்ளே வைக்க முடியாது. ஆரம்பித்தால் கடைசி வரை படித்து முடித்து விட்டு தான் மூட முடியும். கனவு நாயகன் அந்த ரகம் அல்ல. டின்னில் வருமே குலாப் ஜாமூன்,ரசகுல்லா எல்லாம். அந்த மாதிரி. ஒன்று எடுத்து சாப்பிட்டு விட்டு பிரிட்ஜில் வைத்து விட்டு, சற்று கழித்து அடுத்தது. நிதானமாக படிக்க வேண்டிய வகை.இந்த புத்தகத்தை பற்றிய என்னுடைய பார்வையை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். இதை புத்தக விமர்சனம் என்றெல்லாம் சொல்வதற்கில்லை. விமர்சனம் செய்யும் அளவு எனக்கு வாசிப்பனுபவமோ,முதிர்ச்சியோ இல்லை.இவைகளை என்னுடைய சொந்த கருத்துகளாக மட்டும் கொள்க.

ஆரம்பமே அனல் பறக்கிறது. போக்ரான் பாலைவனத்தை பற்றிய வர்ணனையோடு ஆரம்பமாகும் முதல் அத்தியாயம் முழுதும் ஏதோ திரில்லர் படம் பார்ப்பதை போன்ற உணர்வு. "அணு ஆயுத சோதனை" ப்ரொஜெக்டில் என்னவாக இருந்தீர்கள் கண்ணன்? கூடவே இருந்து பார்த்த மாதிரியான ஒரு விவரிப்பு. Brilliant.

எந்த ஒரு நிகழ்ச்சியை குறிப்பிடும் போதும் கண்டிப்பாக தேதி குறிப்பு,பெயர்குறிப்புகள், சூப்பர் சோனிக்,ஹோவர்க்ராப்ட்,ஸ்பிட்ஃபியர் என்று விமானங்களை குறித்த தகவல்கள் என்று 248 பக்கங்களும் data,data and data. கலாம் சம்பந்தப்பட்ட ஏதாவது தகவல் தேவை ஏற்படின், கூகிள் பண்ணுவதற்கு முன்னால், 'இந்த ச.ந.கண்ணன் ஏதாவது சொல்லி இருக்கிறாரா பார்ப்போம்'என்று தேடலாம். தான் பகிர்ந்திருக்கும் தகவல்களுக்கு disclaimer ஆக ஏராளமான புத்தகங்கள்,பேட்டிகள்,சுட்டிகள் என்று கடைசியில் ஒரு பெரிய லிஸ்ட் தந்தும் இருக்கிறார்.கலாம் அவர்களுக்கு inspiration ஆக இருந்த புத்தகங்களில் இருந்தே ’இதுவும் கடந்து போகும்' மாதிரியான (நிகழ்வுக்கு பொருத்தமான) மேற்கோள்கள் காட்டி இருப்பது புத்திசாலித்தனம்.

ஹீரோ அப்துல் கலாம் தான் என்றாலும், ஆசிரியரின் horizon சற்று அகன்றதாகவே தான் இருக்கிறது. New Horizon?...:-). சிவானந்த சுவாமிகள், கணித மேதை ராமானுஜர் என்று ஆங்காங்கே நிறைய கதை சொல்கிறார். பறவை எப்படி பறக்கிறது, செயற்கைக்கோள் எப்படி வேலை செய்கிறது முதலான அறிவியல் விளக்கங்கள் கூடவே. இஸ்ரோ உருவான கதை, கதிரியக்கத்தினால் ஹிரோஷிமா நாகசாகியில் விளைந்தது என்ன? முதலான நிகழ்வுகளையும் சுருக்கமாக பதிவு செய்திருக்கிறார்.

புத்தகத்தின் அத்தியாயங்கள் பிரித்திருப்பது கவனமாக கையாள பட்டு இருக்கிறது. தலைவாழை விருந்து மாதிரி சாம்பார் முடித்து ரசம், பிறகு தான் மோர் என்று வரிசையாக செல்ல வேண்டிய அவசியம் இல்லை. தாலி மீல்ஸ் மாதிரி. பிடித்ததை முதலில் சாப்பிட்டுக்கொள்ளலாம். நான் பொருளடக்கம் பார்த்ததும் முதலில், "சோனியா-கலாம் என்ன நடந்தது? " என்று 201 ம பக்கத்துக்கு தான் போனேன். ஒவ்வொரு அத்தியாயமும் தனி தனி கட்டுரைகளாவும் வாசிக்கும் அளவுக்கு தேர்ந்தவை.

சமுதாயத்தின் பெரும்பான்மையினரால், வெற்றியாளராக மட்டுமே அறியப்பட்ட ஒருவரின் தோல்விகளையும், துவள வைத்த சம்பவங்களையும் சாமர்த்தியமாக சொல்லி இருப்பதற்கு சபாஷ்.முதல் எஸ்.எல்.வி கடலில் விழுந்ததும், நந்தி ஹோவர் முடங்கியதும் படிப்பவர்களை ’அச்சச்சோ’ சொல்ல வைக்கும். அக்னியின் முதல் இரண்டு முயற்சிகளும் தோற்றதை பற்றிய கேலி கார்டூன்களை பற்றிய குறிப்புகள், அந்த கார்டூன்களுக்காக கூகிள் பண்ண வைக்கும்.

"'கலாமு'க்கு ராமேஸ்வரத்தில் ஒரு 'சிவசுப்ரமணிய ஐயர்' கிடைத்தது போல, ராமநாத புரத்தில் ஒரு 'அய்யாதுரை சாலமன்' கிடைத்தார்" என்று சந்தர்ப்பவசமாக நடந்த சம்பவங்களை கூட, சுவாரஸ்யமான வரிகளாக மாற்றியிருப்பது அழகு.

"பொற்கொல்லர் தன் சொந்த மகளுக்கு நகை செய்யும் போது கூட, அதில் சற்று ஆட்டையை போடுவார். அது அவருடைய தொழில் தர்மம்" என்று சொல்வார்கள். அது மாதிரி தன்னுடைய புத்தகத்தில் கூட ஆங்காங்கே தன் சொந்த அரசியல் கருத்துகளை 'subtle ' ஆக தூவி இருக்கிறார். "ராமர் கட்டிய பாலம் இனி இங்கு தேவை இல்லை" யாம். ஒரு ரூபாய் அரசியல்வாதிகளையும் லேசாக உரசி இருக்கிறார்.

ஒரு விஞ்ஞானி, முன்னாள் குடியரசு தலைவர், இந்நாள் ஆசிரியர், இவரை பற்றிய புத்தகம். முழுக்க முழுக்க சீரியஸாக தான் இருக்கும்,முகத்தை உம் என்று வைத்து கொண்டு தான் படிக்க வேண்டியதாக இருக்கும் என்று எண்ண வேண்டியதில்லை. வெடிச்சிரிப்பு வரா விட்டாலும் 'கோத்தாரியும் நேருவும் அறிவியல் வல்லுனர்களை தேர்ந்தெடுத்தது முதலான' புன்னகைக்கு மினிமம் கேரண்டி தரும் இடங்கள் பல.

தகவல்களும் புன்னகையும் தானா? செண்டிமெண்ட்? இருக்கிறது. போலியோவால் பாதிக்க பட்டவர்களுக்கு கலாம் செய்த காலிப்பர், முக்கியமான தருணங்களில் அவருடைய குடும்பத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த மரணம் என்று நெகிழ வைக்கும் விஷயங்கள், ஆனால் உறுத்தாத அளவில்.

கடவுளை நம்புகிறீர்களா? என்பதற்கான கலாமின் பதிலும், முஷாரப் கலாம் சந்திப்பின் முடிவில், முஷாரப் கலாமிடம் சொல்லும் வரிகளும் 'நச்'கள்.மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கலாம் சொல்லும் பத்து பத்து உறுதி மொழிகளும், இரண்டு "Ten commandments" களுக்கு சமானம்.

எஸ்.எல்.வி-3 ஏவுகணை, ரோகினி 1B launching காட்சிகள் விவரிப்பின் முடிவில், கலாமை தோளில் தூக்கி வைத்து கொள்ளும் shaar ஊழியர்களுள் ஒருவராக நாமும் மாறி போகிறோம்.

ஒரு குடியரசுத்தலைவராக கலாம் சந்தித்த தர்மசங்கடமான சிக்கல்கள் பற்றி சொல்லி இருக்கிறார். தேர்தல் சீர்திருத்த தீர்ப்பு, பீகார் சட்டமன்ற கலைப்பு, நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு நிறுவனங்களில் பதவி வகிப்பது குறித்த சட்டம், அப்சல் கருணை மனு முதலான விஷயங்களில், ’அந்த நிலைமையில் கலாம் வேறு எதும் செய்திருக்க இயலாது’ என்பதை போன்ற விளக்கங்கள்.

திருஷ்டி பொட்டுகள் சில கண்ணில் பட்டன. ஒரு பொட்டை பற்றி மட்டும் சொல்கிறேன். ஜமீலாவின் முகூர்த்தத்துக்கு இன்னும் சில மணி நேரங்கள் தான் இருக்கின்றன. கலாம் டி ஆர் டி ஓ வில் இருக்கிறார். ஏவுகணையில் சென்றால் தான் அவ்வளவு விரைவாக ராமேஸ்வரம் போய் சேர முடியும் என்கிறீர்கள். ஆனால் கலாம், மாலை வரை ஒரு திட்ட அறிக்கை வேலை செய்து முடித்து, சமர்ப்பித்து,அதற்கு பிறகு ஒரு ஹெலிகாப்டர் பிடித்து சென்னை வந்து, அங்கிருந்து விமானத்தில் மதுரை போய், அங்கிருந்து ரயில் பிடித்து ராமேஸ்வரம் போனதெல்லாம் சரி. ஆனால் சரியான நேரத்தில் திருமணத்தில் கலந்து கொண்டார் என்றும் எழுதி இருக்கிறீர்கள். குழப்புகிறீர்களே கண்ணன்? உண்மையை சொல்லுங்கள். கலாம் ஜமீலாவின் திருமணத்திற்கு சரியான நேரத்தில் போனாரா இல்லையா?

கலாம் பற்றிய புத்தகம் என்பதால் அவர் சிரித்துக்கொண்டோ, யோசித்துக்கொண்டோ இருக்கும் close-up shot தான் அட்டை படத்தில் போடுவதற்கு பொருத்தம் என்றாலும், அக்னிசிறகுகள் அட்டையை யோசித்து இங்கு சற்று வித்தியாசப்படுத்தி இருக்கலாமோ? புத்தக கண்காட்சியில் மேலோட்டமாக பார்ப்பவர்கள், "ஏற்கனவே வாங்கியாச்சு" என்று நினைத்து விடும் ரிஸ்க் இருக்கிறது.

"அக்னிசிறகுகளில் இருந்து உங்கள் புத்தகம் எந்த விதத்தில் வேறுபடுகிறது?" என்று நூலாசிரியரிடம் கேட்டதற்கு
"தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்தில் கூட கலாம் பற்றிய முழுமையான வாழ்க்கை வரலாறு கிடையாது. அந்தக் குறையை இந்தப் புத்தகம் போக்கியிருக்கிறது" என்கிறார்.

பா.ராகவன் அவர்களின் twitter கமென்ட்:"ச.ந. கண்ணனின் அப்துல் கலாம் பற்றிய புத்தகம் துதி மாலைகளை விலக்கி அவரைச் சற்றுத் தள்ளி நிறுத்தி அழகாக எடை போடுகிறது"

My verdict: An educating book.

புத்தகததை பற்றிய எனது கருத்துகள் இட்லிவடையில் வெளிவந்துள்ளது.
வேண்டுகோளை ஏற்று பிரசுரித்த இட்லிவடைக்கு நன்றி. நன்றி.நன்றி.

Friday 4 December 2009

சைக்கிள்


எந்த வயதில் சைக்கிள் ஓட்ட ஆரம்பித்தேன் என்று சரியாக நினைவில்லை. ஆனால் கற்றுக்கொள்ள ஆரம்பித்த சமயத்தில், சொல்லிக்கொடுத்து கொண்டிருந்த என் சித்தி பின்னால் பிடித்து இருந்த பிடியை விட்டு விட, நானும் நேராக போய்க்கொண்டே இருந்ததும்,ஒரு இடத்தில் 'திருப்பு திருப்பு' என்று சித்தி கத்தியதை கேட்டு, 'ஹான்ட் பாரை திருப்பனுமா ??'என்று நான் திரும்பி பார்த்து கேட்டதில் balance தடுமாறி சைக்கிளோடு சேர்ந்து ரோட்டோரம் இருந்த சாக்கடையில் விழுந்ததும் மறக்கவே இல்லை.

நன்றாக ஓட்ட கற்றுக்கொண்டதும் எங்கள் ஊரில் வாடகைக்கு சைக்கிள் கிடைக்கும். மணிக்கு ஒரு ரூபாய். லேடீஸ் சைக்கிள் என்றால் இரண்டு ரூபாய். சனி ஞாயிறு மாலைகளில் வாடகைக்கு சைக்கிள் எடுத்து வீட்டு முன் உள்ள திட்டானியில் சுற்றி சுற்றி ஓட்டுவது வழக்கம் ஆனது.அதிலும் அப்படி சுற்றி ஓட்டும்போது திரும்ப வேண்டிய இடங்களில் லாவகமாக திரும்புவது ரொம்ப பெருமையா இருக்கும்,பக்கத்து வீட்டு வெங்கிடு அண்ணா, அவனோட தம்பி செந்தில், தங்கை செல்வி, என்னோட தம்பி எல்லாரும் தான் என்னோட சைக்கிள் சாகசத்துக்கு ஆடியன்ஸ். ஒரு கையை விட்டு விட்டு ஓட்டுவது, ரெண்டு கையையும் விட்டு ஓட்ட முயற்சிப்பது, வேகமா பெடல் பண்ணிட்டு அப்புறம், காலை பெடலில் இருந்து எடுத்து விடுவது, இப்படி ஒரு மணி நேரமும் ஒரே த்ரில்லிங்கா இருக்கும் ...

ஏழாவது படித்து கொண்டிருந்தேன். என் கசின் ஒருத்தி திடீர் என்று ஒரு நாள் சைக்கிள் ஓட்டிக்கொண்டு ஸ்கூல்க்கு வந்தாள்.அவளுடைய மாமா வாங்கி கொடுத்து இருந்தார். சிவப்பு கலர் கேப்டன் லேடீஸ் சைக்கிள். அன்றிலிருந்து எனக்கு சொந்தமாக சைக்கிள் வாங்கி அதில் பின்புறம் கேரியரில் புத்தகப்பையும், முன்னால் ஹேன்ட் பாரில் சாப்பாடு பையும் வாட்டர் பாட்டிலும் தொங்க விட்டுக்கொண்டு ஸ்கூல் போவதாக கனவு வர ஆரம்பித்தது. பாவம் எனக்கு மாமா வேற இல்ல. எங்க அம்மா கூட பொறந்ததெல்லாம் தங்கைகள். ஒரு வழியாக அரையாண்டு தேர்வு, இலக்கிய மன்ற போட்டி என்று நிறைய சாதனைகளுக்கு பிறகு, வீட்டில் எனக்கு சைக்கிள் sanction செய்யப்பட்டது.


BSA SLR . மெரூன் கலர். கேப்டன் சைக்கிள் சினேகா ரகம் என்றால் , BSA SLR ஐ கரீனா கபூர் ரகம் என்று சொல்லலாம். ஒரு டெம்ப்ளேட் சைக்கிளாக இல்லாமல் உயரமாக,ஸ்லீக்காக இருக்கும்.ப்ரேக் வயர் வெளியில் தெரிவதே ஒரு தனி ஸ்டைல். சைக்கிள் செயின்க்கு ஒரு பக்கம் மட்டும் தான் கவர் இருக்கும். செண்டர் ஸ்டாண்டு இருக்காது. சைடு ஸ்டாண்டு மட்டும் தான். நிறுத்தி வைத்து இருக்கும் போது ஒயிலாக சாய்ந்து நிற்கும்.இப்படி எல்லா விதத்திலும் (பின்?)நவீனத்துவம் வாய்ந்த மாடல். "பார்க்க அழகா தான் இருக்கு, ஆனா ஸ்ட்ராங்கா இருக்குமா(உன் வெயிட் தாங்குமா?)" என்ற கேள்விகளை எல்லாம் புறந்தள்ளி அது தான் வேண்டும் என்று அடம் பிடித்தேன்.

1991 பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி வீட்டுக்கு சைக்கிள் வந்தது. நாலு நிமிடத்தில் குறுக்கு வழியில் போய் விட முடிந்த பள்ளிக்கு, சுற்றிக்கொண்டு சைக்கிளில் போக ஆரம்பித்தேன். நல்ல நிழலாக பார்த்து நிறுத்தி விடுவேன். இண்டர்வல்லில் வந்து சைக்கிள் மீது எதாவது காக்கா கக்கா போய் வெச்சு இருக்கா? பப்பி உச்சா போய் வெச்சுருக்கான்னு எல்லாம் பார்த்து பார்த்து கழுவி விட்டு போவேன்.சனிக்கிழமை தோறும் நான் தலைக்கு குளிக்கிறேனோ இல்லையோ சைக்கிள் கழுவுவது தவறாது. முதலில் ஒரு காய்ந்த துணி வைத்து தூசி எல்லாம் துடைத்து பிறகு ஒரு ஈர துணியில் துடைத்து, மறுபடி காய்ந்த துணி வைத்து துடைத்து,செயின்க்கு எண்ணெய் போட்டு,பளபளவென்று மணப்பெண் மாதிரி ஆக்கி விடுவேன்.

அந்த வருட சித்திரை திருவிழாவிற்கு எங்கள் ஊரில் சிறுமிகள் சைக்கிள் பந்தயத்தில்(கிட்டத்தட்ட ஐந்து கிலோமீட்டர் தூரம் ஓட்ட வேண்டும் ) எனக்கு இரண்டாம் பரிசு வாங்கி கொடுத்தது என் சைக்கிள். அப்போது கிராமங்களில் அறிவொளி இயக்கம் என்று ஒரு கல்வி விழிப்புணர்வு இயக்கம் இயங்கி வந்தது. அதில் "சைக்கிள் ஓட்ட கத்துக்கணும் தங்கச்சி" என்ற பாடலுடன் ஒரு கான்செப்ட் வரும். அதற்கு நானும் என் சைக்கிளும் தான் மாடல்(கள்).ஹிந்தி டியூஷன், பனிரெண்டாம் வகுப்பில் கணக்கு டியூஷன், கல்லூரி விடுமுறையில் ஊருக்கு வரும் போது நண்பர்கள் வீடுகள், இப்படி எங்கு செல்வதற்கும் எனக்கு ஒரு துணைக்கு ஆள் போல் ஆகி போனது என் சைக்கிள். ஆனால் ஒரே ஒரு சிரமம் தான்.சைக்கிள் வந்த பிறகு என் தம்பியையும் மிகவும் மதிக்க வேண்டியது கட்டாயமாகி போனது எனக்கு. அவனுக்கு என் மீது கோபம் வரும் போதெல்லாம், சைக்கிளில் ரெண்டு டயரும் காத்து இறங்கி போய் நிக்கும்.ஏதாவது ஒரு இடத்தில் பெயிண்ட் சுரண்ட பட்டு இருக்கும்.


2001 ஜூலை மாதத்தின் ஏதோ ஒரு நாள்.
அப்போது வரைக்கும் சைக்கிள் என்று நினைத்தாலே இதமாக மட்டுமே உணர்ந்து கொண்டு இருந்த என்னை, கலவரமாக்கும் அளவுக்கு ஒரு நிகழ்ச்சி நடந்தது அன்று.டைடல் பார்க்கில் ஆபீஸ். வேளச்சேரியில் தங்கி இருந்தேன். ஒரு VIP வீட்டில் இருந்து மூன்றாம் வீடு எங்கள் ஹாஸ்டல்.அதனால் எப்போதும் வெளிச்சமாக செக்யூரிட்டியோடு இருக்கும் தெரு. பொதுவாக நான் நிமிர்ந்து நேராக பார்த்து கொண்டு தான் நடப்பேன். பாரதியார் சொன்னதற்காக இல்லை. ரீட்டா ராணி சிஸ்டரை பார்த்து கற்றுக்கொண்டது. ஒன்பதாம் வகுப்பு படித்த போது எங்கள் பள்ளியில் ஆங்கிலம் கற்றுத்தந்த ஒரு கன்னியாஸ்திரீ. இவர்கள் நடக்கும் போது நேர்கொண்ட பார்வையுடன், கால் மட்டும் தான் நகரும். மற்றபடி ஒரு விறைப்போடு ஏதோ சிலை ஒன்று நடந்து போவதை போல் இருக்கும். நடையில் ஒரு தன்னம்பிக்கையை பார்த்தது இவர்களிடம் தான். நீங்கள் ரீட்டா ராணி சிஸ்டரை பார்த்ததில்லை என்பதால், இன்னொரு உதாரணம் சொல்கிறேன். "வீர் ஜாரா" படத்தில் பாகிஸ்தானி வக்கீலாக வரும் ராணி முகர்ஜி நடப்பதை போல். சிஸ்டரை போல நடக்க வேண்டும் என்று முயற்சி செய்து வரவழைத்துக்கொண்டேன். நேரான பார்வையுடன் நிமிர்ந்த நடையை. ஆனால் அன்றைக்கு ஏதோ ஆபீசில் மூட் அவுட். ஏதோ யோசனையில் குனிந்து கொண்டே நடந்து போய் கொண்டு இருந்தேன். எதிரில் வந்த சைக்கிளை உணர்வதற்குள், சைக்கிளில் இருந்த ஆசாமி என் கழுத்தில் இருந்த சங்கிலியை இழுத்து விட்டான். அதிர்ச்சியில் கத்த கூட தோன்ற வில்லை எனக்கு. சரி அவன் என்ன ஆனான், செயின் என்ன ஆனது,இல்ல,என் கழுத்து தான் என்ன ஆனது என்பதெல்லாம் இப்போ தேவை இல்லாத விஷயம். ஆனால் அன்றிலிருந்து குழந்தைகள் ஓட்டும் மூன்று சக்கர சைக்கிளை பார்த்து கூட பயப்பட ஆரம்பித்தேன். ஒரு போபியா.அதிலும் ரோட்டில் நடந்து போகும் போது, பகலில் கூட எதிரில் யாராவது சைக்கிளில் வந்தால், Freeze -release விளையாடும் போது யாரோ என்னை freeze சொல்லிவிட்டதை போல், ஆடாமல் அசையாமல் நின்று விடுவேன். அந்த சைக்கிள் கடந்து போன பிறகு தான் எனக்கு உணர்வு திரும்பும்.

இது இப்படி இருக்க, போன வாரத்தின் ஒரு நாள் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்த போது, எதிரில் ஒரு சைக்கிள். அந்த சைக்கிள் என் பக்கத்தில் வந்த அந்த நொடியில், எனக்கு தூக்கி வாரிப்போட, "ஆஆஆ" என்று போட்டேனே ஒரு சத்தம். சைக்கிளில் வந்தவர் பெரியவர், பாவம், நிறுத்தி இறங்கிவிட்டார்.

"ஏனு ஆகித்தம்மா?" என்னை விட அதிக பதற்றம், அவருடைய முகத்தில்.
மண்டையில் அடி பட்டு பழச மறந்தவங்களுக்கு மறுபடி அடி பட்டால், தெளிஞ்சுடுமே, அதே மாதிரி அந்த "ஏனு ஆகித்தம்மா"வில் தெளிந்தது எனது போபியா.
"ஒன்றுமில்லை, சாரி". சங்கடமாக நகர்ந்து விட்டேன்.

ஒரு வேளை அந்த பெரியவரும் நேற்று பொட்டி முன்னால் உட்கார்ந்து "யாவ வயசல்லி சைக்கில் ஒடுஸ்தே அந்த கொத்தில்லா." என்ற கட்டுரை ஆரம்பித்து,"இப்போதெல்லாம் சைக்கிளில் போகும்போது எதிரில் யாராவது நடந்து வந்தாலே, freeze ஆகி விடுகிறேன்" என்று கன்னடத்தில் தட்டி இருப்பாராய் இருக்கும்.

Monday 23 November 2009

நாஞ்சில் நாட்டு வானவில்

பெங்களூரில் இருந்து போகும் தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயிலில் தூங்க நினைப்பதை விட, அந்த ரயில் போகும் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்துக்கொள்வதே மேல்.மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்களின் பெர்த் சைசில் முக்கால் வாசி தான் இருக்கிறது இந்த ரயிலின் பெர்த்கள். உங்கள் பெட்டியில் முறுக்கு, பிஸ்கட் இத்யாதிகள் வைத்து இருந்தீர்களே ஆனால்,செலவை பார்க்காமல் ஒரு பூனைக்கும் டிக்கெட் போட்டு கையோடு கூட்டி போய்விடுதல் நலம். 'விதௌட்'டில் சுதந்திரமாக ஓடி கொண்டு இருக்கின்றன எலிகள். அவை தின்றது போக மீதி தான் உங்களுக்கு மிஞ்சும்.பையை தலைக்கு வைக்காமல் சீட்டுக்கு அடியில் வைத்து விட்டு தூங்கி விடுவதில் ஒரு சௌகர்யம் இருக்கிறது.மறு நாளில் இருந்து பையை திறக்க ஜிப்பை எல்லாம் இழுத்து சிரமப்படவே வேண்டாம். ஒரு கையை நுழைத்து உள்ளே உள்ள பொருட்களை எடுக்கும் அளவுக்கு ஓட்டை போட்டு தரும் நல்ல மனசுக்கார எலிகள்.
உங்களுக்கு "multiple personality disorder " இருக்கிறதா என்று கண்டு பிடிக்க வேண்டுமா? டாக்டர் checkupக்கு எல்லாம் செலவு செய்ய வேண்டாம். இந்த ட்ரெயினில் இருக்கும் டாய்லெட்டுக்குள் ஒரு முறை நுழையவும்.ஒரு வேளை நீங்கள்
"T T RRRRRRRRRRRRRRRRRRRR" என்று கத்தினால் உங்களுக்கு MPD confirmed.

காலை ஏழு மணிக்கு மதுரை போக வேண்டிய ரயில் சற்று தாமதமாகி ஒரு எட்டு எட்டரைக்கு போய் சேரும். அதற்குள் அவசரப்பட்டு எலி மிச்சம் வைத்த பிரட் ஏதும் சாப்பிட்டு விடாதீர்கள். மதுரை சந்திப்பில், "மீனாக்ஷி பவன்" என்று எழுதிய பச்சை கலர் அட்டை பொட்டியில், சுட சுட பொங்கல், பூரி, இட்லி எல்லாம் கிடைக்கிறது.20Rs/பொட்டி.பசியா ருசியா என்று தெரிய வில்லை. நல்லாவே இருந்தது.

வாஞ்சி மணியாச்சி சந்திப்பில் தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் வருகைக்காக திருநெல்வேலி வரை செல்லும் 'லிங்க் ட்ரெயின்' காத்து கொண்டு இருக்கிறது. போன ஜென்மத்தில் உங்களுக்கு "வருண" தோஷம் ஏதும் இருந்தால், மழை கூட 'நீங்கள் மணியாச்சியில் வந்து இறங்கியதும் பெய்யலாம்' என்று காத்து கொண்டு இருக்கும். 'ஆஷ் துரையை', வாஞ்சிநாதன் சுட்டுக்கொன்ற வீர வரலாற்றுக்கு இன்றும் மௌன சாட்சியாய் இந்த ஸ்டேஷன்.

திருநெல்வேலி சந்திப்பில் இறங்கி வெளியே வந்ததும் ஷேர் ஆட்டோகாரர்கள் நம்மை மொய்க்கிறார்கள். 'புது busstand போக வேண்டும்' என்று சொன்னதும் 'நூறு ரூபாய்' என்று ஆரம்பிக்கிறார்கள். ஆனால் அறுபது ரூபாய்க்கு ஓகே சொல்கிறார்கள். "அல்வா வாங்கணுமா சார்?" என்று கேட்டு அவர்களே ஸ்வீட் கடை முனனால் நிறுத்துகிறார்கள். luggage அதிகம் இல்லையென்றால் ரயில் நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் வரை நடந்து சென்று (அதிக தூரமில்லை, ஐந்து நிமிட நடை தான்), அங்கிருந்து பஸ்ஸில் செல்லலாம். கிட்ட தட்ட ஆறு கிலோமீட்டர் ஆட்டோவில் போனால், புது busstand , நாகர்கோவிலுக்கு நிறைய பேருந்துகள் நிற்கின்றன. End To End bus என்றால், நெல்லையில் புறப்பட்டு நாகர்கோவிலில் தான் நிற்குமாம். ஆனால் அந்த பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்தில் தான் இருக்கின்றன. மற்ற பேருந்துகள் எல்லாம் 'பாயிண்ட் டு பாயிண்ட்' என்ற போர்டுடன் எல்லா பாயிண்டிலும் நின்று நின்று போகின்றன.

இந்த முறை கல்யாண வீட்டை தவிர சென்ற ஒரே இடம் "நாகராஜா கோவில்". நாகர்கோவில் என்ற ஊரின் பெயர்க்காரணமே இந்த கோவில் தானாம். கருங்கல்லால் கட்டி இருக்கும் கோவிலில் முடிந்த வரை எந்த நவ நாகரிகமும் புகுந்து பழைமை மா(ற்)றிவிடாமல் காப்பாற்றி கொண்டு இருக்கிறார்கள். மூலவர் நாகராஜர், சிவன், அனந்த கிருஷ்ணன் இருவருக்கும் சன்னதிகள். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாத அமைதியான இடம். ஆண்கள் சட்டை அணிந்து வர அனுமதி இல்லை.

முடிந்தால் ஒரு கார்த்திகை மாத காலை நேரத்தில் கோட்டார், சுசீந்திரம், நல்லூர், மருங்கூர், இரவிப்புதூர் என்று நாகர்கோவிலில் சுற்றுப்புறங்களை பைக்கில் ஒரு ரவுண்டு சுற்றுங்கள். ஆறு,குளம் என தாமரை மலர்ந்து, நிரம்பி வழியும் நீர்நிலைகள், பைக்கை நிறுத்தி நிறுத்தி உங்களை அங்கங்கே இறங்க வைக்கும்.அப்போது தான் பிரித்து நட்டு வைத்திருக்கும் நெல் நாற்றுகள் தலையை ஆட்டி ஆட்டி வணக்கம் வைக்கும். கொக்கு போல இருக்கும்,ஆனால், அலகு சிறியதான வெண்ணிற பறவைகள் கூட்டம் வயல் முழுக்க மேய்ந்து கொண்டு இருக்கும்.தென்னந்தோப்புகள் காய்த்து குலுங்கிக்கொண்டு இருக்கும்.எதற்கும் கிளம்பும் போதே வீட்டில் 'நேரமாகும்' என்று ஒரு வார்த்தை போட்டு வைத்து விடுங்கள். இதையெல்லாம் ரசித்து முடிந்து வீடு போய் சேர்வதற்குள், மொத்த குடும்பமும், 'என்ன இவ்வளவு நேரம்' என்று மொத்துவதை தவிர்க்கலாம். யாராவது செவ்வாழைபழம் சாப்பிட கொடுத்தால், "ரொம்ப பெரிசா இருக்கு, பாதி போதும்" என்று சொல்லிவிடும் தப்பை மட்டும் செய்யவே செய்து விடாதீர்கள். பழத்தில் ஒரு துண்டு விண்டு வாயில் போட்ட பின் தான் செய்த தப்பு புரியும். 'ஒன்றுக்கு இரண்டு பழம் எடுத்து கொண்டு இருக்கலாமோ' என்று தோன்றும். அப்போதும் ஒன்றும் கெட்டு விட வில்லை. வெட்கப்படாமல் 'பழம் நல்லா இருக்கே' என்று லேசா பிட்டு போடுங்கள். 'அப்போ இன்னொன்னு சாப்பிடு' என்று அவர்களே கொடுத்து விடுவார்கள்.

"என் கணவருக்கு இன்னும் நெறைய நெறைய cousins இருந்து இருக்கலாம். அப்போ தான் அடிக்கடி கல்யாணம் வரும், ஊருக்கு அடிக்கடி போய் இருக்க முடியும்"...யோசனையோடு,லேசான சாரல் முகத்தில் வருட,மணியாச்சி செல்லும் லிங்க் ட்ரெயினின் ஜன்னல் கம்பியில் முகம் பதித்து,கடந்து போன மயில்களை பார்த்த படி,Bangalore திரும்பிக்கொண்டிருந்தேன்.ஏதோ தோன்றிட விழியுயர்த்தவே, காண கிடைத்தது 'நாஞ்சில் நாட்டு வானவில்'.

Saturday 14 November 2009

இது கவிதை அல்ல.

முதலில் சிநேகிதிகளின் கணவர்கள் கவிதை வந்தது.

அதை தொடர்ந்து சிநேகிதன்களின் மனைவிகள் கவிதை மாதிரி முயற்சி செய்யப்பட்டது.

ஏதோ நம்மாலானது.கணவனின் சிநேகிதி(?).

********************************************
கணவனின் சினேகிதி(?)

வணக்கம் என்றேன், ஹாய் என்றாள்.
அவருக்கு தோள் வரை இருப்பாளோ?
ஹை ஹீல்ஸ் போட்டு நடக்க பழகணும்.

பாலில் தான் குளிப்பாளோ, பன்னீரோ?
"அழகு கருப்பு நீ " - பாட்டி
என்னை அணைத்து கொஞ்சியது
அவசரமாய் என் நினைவில்.

சிக்கென்று இருக்கிறாள் ஜீன்ஸ்,ஸ்லீவ்லெஸ்ஸில்.
பூச்சூட்டலுக்கு வாங்கிய புடவையில்
லேசாய் வியர்க்கிறேன் ஏசி அறையிலும்.

'உனக்கு டீ போடவே தெரிய வில்லை'
அவர் அடிக்கடி சொல்வதன் அர்த்தம் புரிந்தது.
அவள் தந்த பீங்கான் கோப்பை தேநீரில்.

சச்சினையும் தோனியையும் தாண்டி
கிரிக்கெட் தெரியாது எனக்கு.
அவர்கள் பேசும் 'பிரெட்லீ'யும் 'கூக்லீ'யும்
என் காதில் 'போடீ' 'போடீ' யாய்.

லஞ்ச்சுக்கு சாண்ட்விச் செய்யவா?பாஸ்தாவா?
அவள் கேட்ட அக்கணத்தில்
சமைந்த பெண்ணாய் ஆனது
என் சாம்பாரும் அவியலும்.

எனக்கு "bye " .
அவருக்கு 'monday team outing .casuals .மறந்துடாதே'
என் பகல் நேர சீரியல் நிம்மதியில்
விழுந்தது மண்.
**********************************************

'மனைவியின் சிநேகிதன்' தான் பாக்கி. யாராச்சும் ட்ரை பண்ணுங்க.

Friday 13 November 2009

சில கேள்விகள் - 2

-படத்துல மாங்கு மாங்கு ன்னு உழைச்சவங்களையே இருட்டடிப்பு பண்ற இந்த காலத்துல "இவர்களுடன் குற்றால அருவி" அப்டின்னு ஒரு படத்துல டைட்டில் கார்டு போடுவாங்க. அது என்ன படம்?

-சாமி படத்துல 'இது தானா இது தானா' ன்னு ஒரு பாட்டு இருக்கு. சித்ராஜி(உபயம்: சூப்பர் சிங்கர்) பாடினது. இந்த பாட்டு ஆரம்பிக்கும் போது சாமியும் மாமியும் ஒருத்தரை ஒருத்தர் பாத்து ஏதோ சொல்லிக்குவாங்க. உதடு அசைவது மட்டும் தான் காமிப்பாங்க. அவங்க அப்டி என்ன சொல்லிப்பாங்க?

-எதிர் நீச்சல் படத்துல மாடிப்படி மாது, கிட்டு பட்டு, நாயர் இப்டி எல்லார் பெயர்களும் நமக்கு சுலபமா ஞாபகத்துல இருக்கும். ஆனா ஒரு தாத்தா ரூம்ல படுத்து லொக்கு லொக்குன்னு இருமிக்கிட்டே இருப்பார். அவர் பேரு என்ன?

-மேல கேட்ட மூணு கேள்விக்கும் ஒரு சம்மந்தம் இருக்கு. அதையும் சொல்லிடுங்க.

Wednesday 11 November 2009

ஒரு சந்திப்பு, ஒரு சினிமா, ஒரு புத்தகம், கொஞ்சம் டிவி.

இது ஒரு time-pass பதி(கிர்)வு.
******************************
சில வருடங்களாக அமெரிக்காவில் இருந்து வரும், நண்பர்கள் சிலரை சந்திக்க நேர்ந்தது. ஆங்கிலம் பேசும் போது அமெரிக்க accent வருகிறது அவர்களுக்கு. Father is like faedher, People is like Peeble, Water is like Wader.

"Coca cola கொடுத்தால், "Sorry, we dont drink Soda" (soda is like Sodae)என்று சொல்கிறார்கள்.

"என்னது சோடாவா? எங்க ஊருல சோடான்னா பச்சை கலர் பாட்டில்ல கோலிகுண்டு போட்டு இருக்கும். சோடா குடிக்கும் போது அந்த கோலிக்குண்டு சோடா பாட்டில் மூடி வரை வந்து டக் ன்னு இடிக்கும் ஆனா வெளிய வராது. ரொம்ப த்ரில்லிங்கா இருக்கும்" சொல்ல நினைத்தேன்.

ஆனால் சொன்னது - "சரி சோடா வேணாமா? தண்ணி தரேன்."

நான் கூட சில நாட்களாக, accent கற்று கொண்டு Fletcher மாதிரி (ச்சி...தா...ம்ரம்) பேசலாமா ன்னு யோசிக்குறேன்.

*******************************
கல்லூரி படத்தில், சோகம், கோபம், கருணை, காதல், possessiveness என்று எல்லா உணர்வுகளையும் வெகு நேர்த்தியாக பிரதிபலிப்பார்.பளீர் கலர். Sleek. தமன்னாவை ரொம்ப பிடித்தது. பாய்ஸில் சித்தார்த் தான் ஹீரோன்னாலும், "பாபு கல்யாணம் அப்டிங்கற பேரை 'பாப் கேலி' ன்னு மாத்திக்கிட்டு அலப்பறை பண்றானே, என்னம்மா dance ஆடுறான்"னு யோசிக்க வெச்சார் பரத்.
'கண்டிப்பா பாரு உனக்கு ரொம்ப பிடிக்கும்' என்று நண்பர்கள் ஏகத்துக்கு build-up குடுத்த படம் Jab we met. இப்படி மூன்று விஷயங்கள் கலந்து கட்டி இருக்கிறதே என்று படு எதிர்பார்ப்புடன் 'கண்டேன் காதலை' பார்க்க போனோம். பொதுவாக எனக்கு ரீமேக் படங்கள் பார்க்குறப்போ ஒரிஜினல் தான் நல்லா இருந்த மாதிரி இருக்கும். இது வரை பார்த்த ரீமேக் படங்களில் "இது ஒரிஜினல் விட நல்லா இருக்கே" என்று 'அட' போட வைத்தது போக்கிரி மட்டும் தான். அதற்கும் முக்யமான காரணம் "பாடி ஸ்டூடா" track (எதையுமே பிளான் பண்ணி பண்ணனும்). ஆனானப்பட்ட அமீர்கான் நடித்தும் ஹிந்தி கஜினி பிடிக்கலை. To me,Sanjay Singhania was not even 10% of Sanjay Ramasamy. So, இந்த படம் பற்றி சொல்லவே வேண்டாம்.Not even 1% of the original.பேரரசு, திருமுருகன் ஹீரோக்களுக்கு பரத் நல்லா பொருந்துவார். But கோட்,சூட் போட்டு, டை கட்டி, CEO ஆக வரும் காட்சிகளில், பாவமாக இருக்கிறது. இடைவேளை வரைக்கும் தமன்னா (சின்மயி குரலில்) பேசிக்கிட்டே இருக்காங்க. அதுக்கு அப்றோம் பரத் பேசறார். Titanic படம் பாத்துட்டு தியேட்டர் விட்டு வெளில வரப்போ, கொஞ்ச நேரத்துக்கு மழைல நனைந்த மாறி ஒரு உணர்வு இருக்கும். இந்த படம் முடிச்சு வரப்போ, கொஞ்ச நேரத்துக்கு யாரும் பேசாம இருந்தா நல்லா இருக்குமேன்னு இருக்கு.

*****************
Dan Brown விழுந்து விழுந்து படிச்ச நாட்களில், உறவினர் ஒருவர், நீ "Paulo Coelho" படித்ததில்லை. அதை படித்தால் டேன் ப்ரோவ்னை தூக்கி போட்டுடுவ" என்று சொன்னதுடன் "The Devil and Ms Prym" புத்தகத்தை வாங்கியும் கொடுத்தார். தலைப்பை பார்த்ததும் ஏதோ பேய்க்கதை என்று நினைத்து படித்துவிட்டு இங்க சொல்லலாம் என்று தான் பேய்க்கதை சொல்கிறேன் என்று சொன்னேன். ஆனால் 'சரி இரண்டுக்கும் அதிக வித்தியாசமில்லை' என்று வேலைக்கு போகும் பெண்களை பற்றி எழுதி விட்டேன்:-)
Book பாதி படித்து இருக்கிறேன். "All human are eventually evil, its only a matter of when they get the chance" என்று சவால் விடும் ஒருவன், பல காலமாக monotonus வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரு கிராம மக்கள், "அந்த கிராமத்தில் இருந்து எவனாவது தன்னை கல்யாணம் பண்ணி கூட்டி போய் விட மாட்டானா என்று" ஒரு life-upgrade எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஒரு பெண் என்று அழகாக முடிச்சு விழுந்து இருக்கிறது. எப்டி அவிழ்கிறது என்று பார்ப்போம்.

*****************************
பெரும்பாலான டிவி நிகழ்ச்சிகளை காதுகளால் மட்டுமே பார்க்கிறேன். 'Airtel சூப்பர் சிங்கர் ஜூனியர்-2' அவ்வளவாக follow பண்ண முடிவதில்லை. அவ்வப்போது பார்க்க நேர்ந்த போதும், "இதென்ன பாட்டு போட்டியா? இல்லை நடன நிகழ்ச்சியா" என்று தோன்றியது. குழந்தைகளுக்கு ஏகத்துக்கு மேக்கப், Chocolate மழையாக கொட்டுறது, குடும்பத்தையே மேடைக்கு அழைக்குறதுன்னு நிறைய stunts.Super Singer is too spoilt. வீட்டில் எல்லாரும் அல்கா என்று பெண் வெளுத்து கட்டுவதாக சொல்கிறார்கள். ஒரு பெண்பிள்ளை டைட்டில் ஜெயித்தால் சந்தோஷம் தான்.
கோலங்கள் சீரியலில் "நான் ஞாபகங்களை தொலைத்து விட்டு நிற்கிறேன்" என்று திருசெல்வன் சொல்லுவது காற்று வாக்கில் கேட்டது. என்ன கொடுமை இது தொல்காப்பியன்? உங்களுக்கு எப்போ ஞாபகம் வந்து, நீங்க எப்போ சீரியல் முடிக்கிறது? மு..டி..ய...ல.

*******************************

With that, wishing each of you to have happy and happening pass time.

Friday 6 November 2009

Alice(s) in wonderland

இன்று காலை கடவுள்களின் பள்ளத்தாக்கு (திரு.தேசிகன் தொகுத்து முன்னுரை எழுதியது) சுஜாதா கட்டுரை தொகுப்பை எடுத்து, கண்ணை மூடிக்கொண்டு ஒரு பக்கம் திறந்தேன். "பெண்களும் நானும்".

பெண் எழுத்தாளர்களுக்கு அறிவுரை, தன்னுடைய அலுவலகத்தில் உடன் வேலை பார்த்த பெண்கள், தன் பாட்டி (இந்த பாட்டி கட்டுரை ஏற்கனவே வேறு எங்கோ படித்த ஞாபகம்) என்று கட்டுரையில் சுவாரஸ்யத்துக்கு குறைவில்லை.

பெண்களிடம் வேலை வாங்க மூன்று விதி முறைகள் இருக்கிறதாம். அவருடைய அனுபவத்தில் சொல்கிறார்.

-பெண் என்பதால் இந்த வேலை வராது என்று முடிவு பண்ண கூடாது.
-பெண்களிடம் உள்ள இயற்கை கோளாறுகளை புரிந்து கொள்ள வேண்டும்.
-பெண்களுக்கு லாஜிக் வராது, எதையும் உணர்வு பூர்வமாக தான் பார்ப்பார்கள். ஈஸ்ட்ரோஜென், ஆண்ட்ரோஜென் பிரச்சனை இது.

முதல் பாயிண்ட் படித்த போது ஒரு சபாஷ் போட்டது மனது.

இரண்டாவதை படித்த போது,(அவர் எந்த இயற்கை கோளாறை :-) சொன்னாரோ)எனக்கு இந்த பதிவை எழுத தோன்றியது.

வேலைக்கு போகும் பெண்களுக்கு என்னுடைய சொந்த/'உடன் பணிபுரிவோரை கவனித்த' அனுபவத்தில் சொல்ல விரும்பும் சில விஷயங்கள்:

- நம் மேலாளரிடமோ,உடன் பணிபுரிவோரிடமோ 'நாம் பெண்' என்ற காரணத்தை வைத்து எந்த சலுகைகளையும் எதிர்பார்க்காதீர்கள். இது நமது குடும்பம் அல்ல. இங்கு நாம் செய்யும் வேலைக்கு மட்டும் தான் சம்பளமே தவிர, நமது உடல்,மன பிரச்சனைகளுக்கு சேர்த்து அல்ல.அப்படி எதிர் பார்த்தோமே ஆனால்,அது நம்மை நாமே தாழ்த்தி கொள்ளுவதற்கு சமம்.

- குழந்தை பெறுவது, மாதா மாத சமாச்சாரங்கள் எல்லாம் நமது anatomy. கடவுள் design பண்ணது. இதெல்லாம் மொத்தமாக சேர்த்து தான் நாம். "இதனால் எல்லாம் என் வேலை பார்க்கும் திறன் குறைகிறது, career growth தடை படுகிறது, ஒரு ஆணுக்கு இந்த பிரச்சனைகள் இல்லை" என்று புலம்பாதீர்கள். மொத்தத்தில் "எனக்கு அங்க வலிக்குது இங்க வலிக்குது" விஷயங்களை எல்லாம் அலுவலகத்துக்கு கிளம்பும் போது செருப்பை மாட்டுவோமே,அப்போதே கழற்றி வைத்து விடுங்கள்.

- அலுவலக மீட்டிங் போது, ஆறரை அடி உயரத்தில் கடுகடு முகத்தோடும்/குரலோடும் ஒருத்தன், வேணும்னே வேணும்னே நம்மள outsmart பண்ணவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு கேள்வி கேக்கும் போது கொஞ்சம் உதற தான் செய்யும். பயப்படாதீர்கள். அதற்கு முதல் தேவையாக technical skillsஐ வளர்த்து கொள்ளுங்கள். எந்த அளவுக்கு அறிவாளியாக இருக்கிறோமோ, அந்த அளவுக்கு தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். எந்த கொம்பனையும் சமாளித்து விடலாம்.சில மாதங்களுக்கு முன் ஒரு பெண் மேலாளருக்கு கீழே வேலை பார்த்தேன். அவங்க சொல்வாங்க,
"If one has to run 100 meters to prove that one can run, a woman has to run 200 meters to prove that she can run".

- "நான் ஒரு பெண்" என்ற consciousnessஐ துடைத்து எறிந்து விடுங்கள்.இந்த நினைப்பு நம்மை பலவீனமாக ஆக்கி விடும்."வெகு உயரத்திற்கு சரசர வென்று போய் விட்ட பெண்களை, வேறு எந்த விதத்திலும் விமர்சிக்க வழி இல்லாத நிலையில்,அவர்களது பர்சனல் விஷயங்கள் படு மலிவாக விமர்சிக்க படலாம்.துளியும் கண்டு கொள்ளாதீர்கள்."ஐயோ நான் ஒரு பொண்ணாச்சே...இப்டில்லாம் பேசறாங்களே" என்று எந்த நிமிடத்தில் concsious ஆகிறீர்களோ, அப்போதே தோற்க ஆரம்பித்து விடுகிறீர்கள்.

-கட்டுரையில் கவர்ந்த இன்னொரு வரி, பெண்களுக்கு 'சுலபக்கோபமும்' ,அழுகையும் வரும். அலுவலகத்தை பொறுத்த வரை சில நேரங்களில் 'சுலபக்கோபம்'நம்மள காப்பாத்தும். ஆனா தப்பு நம்ம மேல இருந்தா, தைர்யமா ஒத்துக்கிட்டு மன்னிப்பு கேட்டுடுங்க. தேவை இல்லாத இடத்தில் செய்யப்படும் விவாதம், கேலிக்குரியதாகி விடும். ஆனா எந்த காரணத்துக்கும் அலுவலகத்தில் அழாதீர்கள். (எங்கயுமே அழாம இருப்பது ரொம்ப நல்லது. ஆனா அது நமக்கு சற்று கஷ்டம் தான்)

-பேறு கால விடுப்பிற்கு பிறகு வேலைக்கு சேர்ந்த முதல் சில மாதங்களுக்கு நம் மனதில் புயல், மழை, சூறாவளி எல்லாம் சேர்ந்து சுற்றி சுழற்றி அடிக்கும். 'வேலைக்கு கண்டிப்பா போகணுமா?' 'குழந்தை சாப்பிட்டுச்சோ இல்லையோ','அம்மாவை தேடுதோ', இந்த மாதிரி மன உளைச்சல் மட்டும் இன்றி, நிறைய உடல் உபாதைகளும் கூட சேர்ந்து பாடாய் படுத்தும். இந்த நேரத்தில் நாம் கடை பிடிக்க வேண்டியது பொறுமை பொறுமை மற்றும் பொறுமை. 'வேலைய விட்டு விட வேண்டும்'என்ற முடிவை இந்த நேரத்தில் தப்பி தவறி கூட எடுத்து விட வேண்டாம். நம் உடல்நிலை, வாழ்க்கை முறை எல்லாமாய் மாறி விட்டதால் ஏற்படும் அயர்ச்சி தான் இது. சில மாதங்களை பொறுமையாக கழித்து விட்டோம் என்றால், அப்புறம் ஒரு தெளிவும் நிதானமும் வந்து விடும். அதுக்கு பிறகும் வேலைய விட தோன்றினால் அது சரியான மனநிலையில் எடுக்கும் முடிவு.

-குடும்பம், குழந்தை என்று ஆன பிறகு , வேலையில் கவனம் செலுத்துவது சவாலான விஷயம். நீங்கள் எவ்வளவு "ambitious " என்பதை பொறுத்து உங்கள் சாய்ஸ் தெரிவு செய்யுங்கள். தெரிவு செய்த சாய்ஸில் தெளிவாக இருங்கள். சில பெண்களுக்கு குடும்பம் வேலை என்று இரண்டையும் சமாளிக்கும் சாமர்த்தியம்/அதிர்ஷ்டம் இருக்கலாம். முடிந்தவரை அந்த சாமர்த்தியத்தை கற்றுக்கொள்ள முயலுங்கள்.முடியாது போனால்,அதற்காக குமையாதீர்கள். ஆனால், நாம் அலுவலகத்தில் எவ்வளவு effort போடுகிறோமோ அதை பொறுத்து தான் உங்கள் உயர்வு நிர்ணயிக்க படும் என்பதில் தெளிவாக இருங்கள். இங்கு எல்லாமே Tit for Tat தான். "I am ambitious"," I am capable" முதலான qualitative விஷயங்கள் மட்டும் வேலைக்கு ஆகாது. செயலில் காண்பிக்க வேண்டும். நமது பர்சனல் காரணங்களினால், ரிசல்ட் காண்பிக்க முடியாது போனால், அதற்கான பலனை எதிர்கொள்ளும் பக்குவமும் வேண்டும். மற்றவர்களோடு ஒப்பிட்டு மூக்கை சிந்த கூடாது.Try to take things easy. Job is just something that brings food to our plate.

-மூன்றாவது பாயிண்ட் (பெண்களுக்கு லாஜிக் வராது, எதையும் உணர்வு பூர்வமாக தான் பார்ப்பார்கள். ஈஸ்ட்ரோஜென், ஆண்ட்ரோஜென் பிரச்சனை இது) படித்த போது, சற்று sarcastic புன்னகை வந்தது. லாஜிக் நல்லாவே வர்ற பெண்களும் இருக்கிறார்கள். உணர்வு பூர்வமாக மட்டுமே பார்க்க தெரிந்த ஆண்களும் இருக்கிறார்கள். பெண்களை கிண்டல் பண்ணி கொண்டே டிவி சீரியல் பார்க்கும் ஆண்களை போலவே.

To all the working women, We all are Alice(s)!There will ofcourse be 'rabit holes', 'drinks that would shrink you', cakes that would grow you', 'riddles with no answers', 'caterpillars', 'dodos', 'King', 'Queen' and many more. Lets Rock it. After all, we are in WONDERLAND you see :-)

Tuesday 3 November 2009

ஜூலி போட்டது ரெண்டு குட்டி

முன்குறிப்பு: இது ஒரு சிறுகதை முயற்சி அல்ல. இலக்கியவாதிகள் அச்சம் தவிர்த்து தொடர்க.

கரண்ட் இல்லாத ஒரு மழை நேர மாலையில் தான் ஜூலி எங்கள் வீட்டுக்கு வந்தது. அப்போ அது நிறை மாத கர்ப்பிணி. வீட்டு சுவரோரம் மழைக்கு ஒதுங்கி குளிரில் நடுங்கி முனகி கொண்டு இருந்ததை பார்த்து அப்பா, அம்மா, நான், தம்பி என்று குடும்பமாக இரக்கபட்டோம். அடுத்த பத்து நிமிடத்தில் திண்ணையில் ஒரு சாக்கு படுக்கையும், ஒரு பழைய தட்டில் பால் சோறுமாக, ஜூலி எங்களோடு சேர்ந்து கொண்டது. அழுக்கான வெள்ளை நிறத்தில் இருந்த அதற்கு நானும் தம்பியும் சேர்ந்து ஜூலின்னு பெயர் வைத்தோம்.

ஜூலிக்கு எங்க எல்லாரையும் ரொம்ப பிடித்து விட்டது. நானும் தம்பியும் மாலை நேர நொறுக்கு தீனியை மூன்று பங்கு ஆக்க ஆரம்பித்தோம். "குட்டி போட போகுதுல்ல, பாவம் ரொம்ப பசிக்கும்" என்று அம்மா அடிக்கடி அதற்கு ஏதாவது கொடுத்து கொண்டே இருப்பாங்க. ஜூலி இது எல்லாத்தையும் விட எங்க அப்பாவோட TVS -50 சத்தத்துக்கு தான் அதிகமா வால் ஆட்டும்.

அப்பா பத்தாங்கிளாஸ் ஆங்கில டியூஷன் எடுப்பாங்க. அதுல 'ஹரன்'ன்னு ஒருத்தன் படிச்சான். இந்த கதைல இவன் எங்க வந்தான்? விஷயம் இருக்கு. கதைக்கு ஒரு திருப்பு முனை கொடுக்க போறதே இவன் தான். இவன் அப்டி என்ன பண்ணான்னு இன்னும் கொஞ்ச நேரத்துல சொல்லிடறேன்.

எங்க வீட்டுல அப்போ ஏதோ பூச்சு வேலை நடக்குதுன்னு நிறைய ஆத்து மணல் கொட்டி வெச்சுருந்தாங்க. அந்த மணல்ல தான் நானும் தம்பியும் அப்பாக்கு ரெண்டு பக்கமும் படுத்துக்கிட்டு நிலாவை பாத்துக்கிட்டே கதை கேப்போம். ஜூலியும் எங்க பக்கத்துல உக்காந்துக்கும்.

ஜூலி வந்து ஒரு நாலஞ்சு நாள் ஆயிருக்கும்.ஒரு நாள் நைட் ஜூலி லேசா முனகிட்டு இருந்துச்சு. அதோட சாக்கு படுக்கையில படுத்துக்காம எழுந்து போய்டுச்சு. "அம்மா எங்க போகுதுன்னு போய் பாப்போமா" ன்னு கேட்டதுக்கு, "அதெல்லாம் வேணாம், பேசாம படுங்க" ன்னு சொல்லிட்டாங்க. காலைல அம்மா சொன்னாங்க, "ஜூலி குட்டி போட்டுடுச்சு. ஆனா எங்க போட்டு வெச்சுருக்கு, எத்தனை குட்டி போட்டுருக்கு ஒன்னும் தெரியலை" ன்னு.

நானும் தம்பியும் துப்பு துலக்கி ஜூலி பின்னாடியே போனோம். அது அந்த ஆத்து மணல் குவியல்ல ஒரு பொந்து மாதிரி பண்ணி அதுக்குள்ள போய்டுச்சு.
"அம்மா! ஜூலி மண்ணை தோண்டி பொந்து மாதிரி செஞ்சு அதுக்குள்ள குட்டி போட்டு இருக்கும்மா, ஆனா எத்தனை குட்டி தெரியலை" .
"ரெண்டு மூணு நாள் கழிச்சு அதுவே வெளிய வரும். இப்போதைக்கு நீங்க பக்கத்துல போய் வெக்காதீங்க, கடிச்சுட போகுது" ன்னாங்க அம்மா.

நானும் தம்பியும் மணலை சுத்தி சுத்தி வந்து பொந்துக்குள் எட்டி பார்த்தா எதாவது தெரியுதான்னு முயற்சி பண்ணிட்டு இருந்தோம். "அதோட வயிறு இருந்த சைஸ்க்கு ஒரு அஞ்சு குட்டியாவது போட்டு இருக்கும். ஆண் குட்டின்னா யாராவது எடுத்துட்டு போய்டுவாங்க. பெண் குட்டிய எல்லாம் என்ன பண்றது தெரியலை" ன்னு அம்மா ஒரே பொலம்பல். அப்பா ஜூலிக்கு ஸ்பெஷல் கவனிப்பு பண்ணிட்டு இருந்தாங்க.நானும் தம்பியும் ஒரு தேடலுடனேயே இருந்தோம்.

ஒரு ரெண்டு நாள் கழிச்சு ஜூலி postpartum sickness எல்லாம் முடிஞ்சு சகஜமா வால் ஆட்ட ஆரம்பிச்சது. அன்னைக்கு சாயங்காலமே அதோட குட்டியை எங்க கண்ணுல காட்டிட்டுது. எங்களுக்கு பயங்கர அதிர்ச்சி. ஏன்னா ஒரே ஒரு குட்டி தான் இருக்கு ஜூலி கூட. கருப்பு கலர்(அதோட அப்பா மாதிரியா இருக்கணும்). பெண் பிள்ளை.



"நாய் பொதுவா ஒரே ஒரு குட்டி போடாது, ஒரு வேளை மணல் ஏதும் சரிஞ்சு மத்த குட்டில்லாம் செத்து போச்சான்னு" அம்மா கவலை பட, எனக்கும் தம்பிக்கும் தூக்கி வாரி போட்டது. மொத்த மணலையும் கவனமாக அகற்றி, துழாவி துருவி தேடினோம். ஒன்னும் அகப்படலை.

தனிக்காட்டு ராஜா(ஜி)வாக வளர்ந்தது ஜூலியோட குட்டி. போட்டிக்கு ஆள் இல்லாம வயிறு முட்ட பால் குடித்து, 'மொத்த அம்மாவும் எனக்கே எனக்கு' ன்னு பெருமையாக வளர்ந்ததில் மூன்றே வாரத்தில் ஒரு முயல் அளவுக்கு வளர்ந்து நின்றது. ஒரு நாள் அப்பா வீட்டில் இல்லாத நேரத்தில் ஜூலிக்கும் குட்டிக்கும் பிஸ்கட் கொடுத்து கொண்டு நான் அம்மா, தம்பி timepass பண்ணி கொண்டு இருந்தோம்.

"டீச்சர்....டீச்சர்.... " என்று சன்னமாக அழைத்து கொண்டே தலையை குனிந்து கொண்டு ஹரன்.
"என்னப்பா"
கையில் இருந்த கூடைக்குள் இருந்து எதையோ வெளியில் எடுக்கிறான், அதும் கருப்பும் வெள்ளையும் கலந்த கலரில்...துளியூண்டாக ...எலி மாதிரி....
"என்னை மன்னிச்சுடுங்க டீச்சர். சார் கிட்ட எப்டியாவது நீங்க தான் சொல்லணும். ஜூலி ரெண்டு குட்டி போட்டு இருந்துச்சு, கேட்டா தருவீங்களோ என்னவோன்னு நான் தான் இத யாருக்கும் தெரியாம தூக்கிட்டு போயிட்டேன், ஆனா சரியா சாப்பிட மாட்டேங்குது, செத்துடும் போலிருக்கு, அதான் திரும்பி கொண்டு வந்துட்டேன்" என்கிறான். கிட்டத்தட்ட அழுதான்.


அது ஆண் பிள்ளை. பிள்ளை பூச்சி சைஸ்ல இருக்கு. பாவம் கண் கூட முழிக்காத குட்டிய திருடிட்டு போய் இருக்கான் கிராதகன்.
"சரிப்பா ஏதோ இந்த மட்டும் கொண்டு வந்தியே, அதோட அம்மா கிட்ட பால் குடிச்சுதுன்னா பொழச்சுடும், கொஞ்சம் தேறினதும் நீயே எடுத்து போய் வளரு" - அம்மா.

அப்றோம் ஜூலியும் அதோட ரெண்டு குட்டியுமா அமளி பட்டது வீடு. இரண்டு வாரங்களிலேயே அந்த சின்ன குட்டியும் தேறி விட, ஹரன் வந்து அப்பாவிடம் கேட்டு எடுத்துட்டு போனான்.

எங்க தெருப்பகுதியில் ஒருத்தர் அடிக்கடி வந்து குரங்கை வைத்து வித்தை காட்டுவார். "ஆஞ்சநேயர் தனியா இருக்கார்ம்மா, அவர் கூட வெளாட ஒரு வைரவர் கொடுங்கம்மா" என்று அந்த பெண்குட்டியை கேட்டு அடம் பண்ணார். "அடிக்காம பத்ரமா பாத்துக்கோங்க,அப்போப்போ கொண்டு வந்து கண்ணுல காட்டுங்க" என்று கண்ணீருடன் அடுத்த குட்டியையும் அவரிடம் கொடுத்தாகி விட்டது.

அப்பா போன பிறகு, அந்த வீட்டை விட்டு நாங்களும் போய் விட்டோம். ஜூலி எங்களுடன் வர வில்லை. சில மாதங்கள் கழித்து நானும் தம்பியும் வீடு காலி பண்ண அந்த வீட்டுக்கு போன போது மறுபடி ஜூலியை பாத்தோம். உண்டாகி இருந்தது.

பின்குறிப்பு: நாய்க்கதை பிடித்து இருந்தால் சொல்லுங்கள். அடுத்து ஒரு பேய்க்கதை சொல்லுகிறேன்.

Monday 26 October 2009

இட்லிவடைக்கு ஆறு வயது.

கடந்த வருடம் மாதிரியே இந்த முறையும் இட்லிவடையின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லியாகி விட்டது.

"ரொம்ப நன்றாக அனுபவித்து, நுணுக்கமாக, நுண்ணரசியல் தூவி எழுதிஉள்ளீர்கள்." என்று பாராட்டும் கிடைத்தது, "உங்க கிட்ட பேசவே பயமா இருக்கு, ரவுடித்தனம் பண்ணிருக்கீங்க பதிவுல" என்று பாட்டும் கிடைத்தது.

இட்லிவடையை 'சமத்தா இருங்க' ன்னு சொல்லி இருக்கேன். ஆனால்,போன வருட பதிவையும், இந்த வருட பதிவையும் ஒப்பிட்டு படித்தால் எனக்கு தான் வால்தனம் அதிகமாகி விட்டது.

இட்லிவடை என்னை கொள்கை பரப்பு செயலாளர் ஆக்குவதாக சொல்கிறார்.
அவருடைய காபினெட்டில் "துணை முதல்வர்" பதவியே கொடுத்தாலும் வேண்டாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிவித்து கொள்கிறேன். :-)

Friday 16 October 2009

Greetings!!!

தீபாவளி நல்வாழ்த்துக்கள்!


சத்தியமாக சற்று முன் நானே செய்த ரசமலாய்.






ரசமலாய் இங்கிருந்து ரெசிப்பி
பார்த்து செய்தது.

நான் ரசமலாய் செய்ய போகிறேன் என்று சொன்னதும் "ஐயோ பாவம் உங்க வீட்டுல எல்லாரும்' என்று வெகுவாக கவலைப்பட்ட சிலருக்காகவும், "எதற்கும் செய்து முடித்த பிறகு ஸ்வீட்க்கு பெயர் வை" என்று மேதாவி ஐடியா கொடுத்தவர்களுக்காவும் இந்த படத்தை உடனே அச்சேற்றி விட்டேன். நானே சற்று பயத்துடன் தான் ஆரம்பித்தேன். ஆனாலும் "சரியாக வரலைன்னா எல்லாத்தையும் ஒண்ணா போட்டு கிண்டி, 'பாசுந்தி' என்று பரிமாறி விடு" என்ற என் தம்பி கொடுத்த தைரியம் கை கொடுத்தது.
வீட்டில் சாப்பிட்டு பார்த்து 'சூப்பர்' என்று சர்டிபிகேட் கிடைத்ததும் விட்டது.

ஒரு கொசுறு தகவல்: நரகாசுரனை வதம் செய்ததை தான் தமிழ் நாட்டில் தீபாவளியாக கொண்டாடுகிறோம். கர்நாடகாவில், மகாபலி பூமியில் மக்களை சந்திக்க வரும் நாளாகவும்(கேரளாவில் மகாபலியின் வருகை ஓணம் பண்டிகையாக கொண்டாட படுகிறது), வட இந்தியாவில் ராமர் அஞ்ஞான வாசம் முடிந்து நாடு திரும்பிய நாளாகவும் தீபாவளியை கொண்டாடுவதாக இன்று தான் அறிந்து கொண்டேன்.
With that, Wishing each of you a very happy, colourful, sweet and safe Deepavali. God Bless.



Monday 24 August 2009

பெங்களூர் to கன்னியாகுமரி - 6

ஏழாவது படிக்கும் போது தான் சுவாமி விவேகானந்தரின் அறிமுகம். விவேகானந்தா மிஷன் 'சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்" புத்தகத்தில் இருந்து ஒரு போட்டி நடத்தினார்கள். அப்போதிலிருந்தே சுவாமிஜி என்றால் ஒரு ஆர்வம். என் ஹிந்தி சார் வீட்டில் மூன்றடி உயரத்திற்கு விவேகானந்தரின் சிலை வைத்து இருப்பார்கள். டியூஷன் அப்போ, அந்த சிலைக்கு பக்கத்தில் தான் உக்காருவேன். கன்யாகுமரி விவேகானந்தர் பாறை போக போகிறோம் என்றதும், உற்சாகம் பீறிட்டது.திருவள்ளுவர் சிலையையும் பார்க்க போவது இதான் முதல் முறை.

26-June-2009 2PM

"நாலு மணிக்குள் போகலைன்னா, cruise டைம் முடிஞ்சுடும். அப்றோம் விவேகானந்தர் பாறையை எல்லாம் தூரமா இருந்து பாத்துட்டு வர வேண்டியது தான்" மறுபேச்சு பேசாமல் சொன்ன நேரத்துக்கு ரெடி ஆயிட்டேன்.

"இது தான் மருந்து வாழ் மலை. அனுமார் சஞ்சீவி மலையை தூக்கிக்கொண்டு போகும் போது, அதில் இருந்து கீழே விழுந்த ஒரு துண்டு. இங்க உள்ள கீரைய பறிச்சு சாப்பிட்டால் எந்த நோயும் குணமாகும்"
நாகர்கோயில் - கன்யாகுமரி வழியில்,ஒரு மலையை காண்பித்து அவரோட அத்தை சொன்னது.

உடனே cruise டிக்கெட் வாங்கிக்கொண்டு, ஏறி உக்கார்ந்தோம். கரையில் இருந்து பாறைக்கு செல்ல ஆகும் அதிக பட்ச நேரம் ஐந்து நிமிடம். அதற்குள் இரண்டு வட இந்திய குடும்பங்களுக்குள் சண்டை வந்து விட்டது. எதற்கு என்றால், ஒருவர் துண்டு போட்டு ரிசர்வ் செய்து வைத்து இருந்த இடத்தில், இன்னொருவர் வந்து உக்காந்து விட்டார். அப்பா அப்பாவுடன், அம்மா அம்மாவுடன், அண்ணன் அண்ணனுடன் என்று அவரவர் வயதில் உள்ளவர்களுடன் வாய்ச்சண்டையில் ஆரம்பித்தது கைகலப்பில் முடிய இருந்ததற்குள், இறங்க வேண்டிய இடமே வந்து விட்டது.
"சாலா" "பாகல்" என்றெல்லாம் திட்டிக்கொள்கிறார்களே? அப்டின்னா என்ன?" கேட்டது அவரோட அத்தை பெண்.

முதலில் கன்யாகுமரியின் நினைவகம். ஒரு ஜோடி பாத அடையாளங்களை கண்ணாடி சட்டம் போட்டு வைத்து இருக்கிறார்கள். சுற்றுலா பயணிகள் எல்லாம் அதன் மீது காசு எறிகிறார்கள்.
"कौन है कन्याकुमारी? उसकी बाप कौन है?" கேட்டுக்கொண்டே காசை போட்டது சண்டை போட்ட குடும்பத்து பெண். அப்போது தான் கவனித்தேன். அங்கு குமரியின் சரித்திரத்தை ஆங்கிலத்தில் மாத்திரம் தான் எழுதி வைத்திருக்கிறார்கள்.விளைவு? குமரியின் அப்பா யாருன்னு கேட்கிற அவலம்.ஹிந்தியிலும் எழுதி தொலைத்து இருக்கலாம்.

விவேகானந்தர் பாறையின் சிறப்பம்சம் அங்கிருக்கும் சுத்தமும், அமைதியும் காற்றும் தான். அங்கு வரும் சுற்றுலா பயணிகளும், ஒரு ஒழுங்குக்கு வந்து விடுகிறோம். யாரும் குப்பை போடுவதில்லை, எச்சில் துப்புவதில்லை, தேவையில்லாத சத்தம் இல்லை. இத்தனைக்கும் நல்ல கூட்டம் வேறு. சண்டை போட்ட அந்த குடும்பங்கள் கூட, ஒருவரை ஒருவர் முறைத்துக்கொள்ள வில்லை. குமரியின் பாத தரிசனம் முடிந்து, விவேகானந்தர் மண்டபத்துக்குள் நுழைந்தோம். தாஜ்மகாலை சினிமாக்களில் பார்த்து விட்டு, முதல் முறை நேரில் போகும் போது, "அட இவ்ளோ பெரிசா" என்று தான் முதலில் பிரம்மிப்போம். அதே தான் இங்கேயும். ஏற்கனவே சின்ன வயசில் பார்த்து இருந்தாலும் கூட, இந்த முறை "இவ்ளோ பெரிசா" என்று ஒரு ஆச்சர்யம் முதலில் ஏற்பட்டது. முதலில் ஒரு பெரிய அறை. அங்கே பளபளவென்று சுமார் பத்து பன்னிரண்டு அடி உயரத்தில் சுவாமிஜியின் சிலை. ஒருவர் அங்கே வருபவர்களை எல்லாம் பேசாதீர்கள் என்று செய்கை செய்த படி தூண்களை எல்லாம் துடைத்து கொண்டு இருந்தார். சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட வேண்டும் என்ற ஆவலை அடக்கி கொண்டேன்.

அடுத்து தியானம் செய்யும் அறை. மெல்லிய வெளிச்சத்தில் ஓம் ஓம் என்ற மிக மெல்லிய ஒலியின் பின்னணியில், ॐ என்று எழுத பட்டு இருக்கும் ஒரு திரையை நோக்கி அமர்ந்து தியானம் செய்கிறார்கள். தியானம் செய்தோமா என்றெல்லாம் தெரியாது ஆனால் சற்று நேரம் அமைதியாக இருந்து விட்டு வெளியே வந்தோம்.

ஒரு கடை வைத்து விவேகானந்தர் சிலை, சிற்பம், புத்தகம் என நினைவுச்சின்னங்கள் விற்பனை செய்கிறார்கள். "Swamy Vivekananda on himself" என்று ஒரு புத்தகம் வாங்கிக்கொண்டேன். விவேகானந்தர் பாறையில் இருந்து பார்த்தால் ஓங்கி உயர்ந்து கம்பீரமாக நிற்கிறது வள்ளுவன் சிலை. அங்கே போவதற்கு படகு போக்குவரத்து தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏமாற்றம் தான்.

அடுத்ததாக குமரியம்மன் தரிசனம். அம்மனின் மூக்குத்தி தான் விசேஷம். கப்பல்களுக்கு எல்லாம் கரை காட்டும் விளக்காக இருந்ததாம் இந்த மூக்குத்தி. உண்மையில் ஏதோ விளக்கொளி சுடர் விடுவதைப்போல மின்னுகிறது.

கடற்கரையில் 'பொங்கி வரும் கடல் அலையை ஒரு கை தடுப்பதை' போன்று சுனாமி நினைவுச்சின்னம் அமைத்து இருக்கிறார்கள்.

திரும்பி வரும் வழியில் ஒரு குறுகலான சந்தில் பார்க் பண்ண போக, காரில் அடுத்த டென்ட். கண் திருஷ்டி.இந்த முறை தடம் பலம்.:-(

27-June-2009
அடுத்த நாள் சனிக்கிழமை,மாமியாரின் குடும்ப கோயில் விசிட். சில உறவினர்களை சந்தித்தோம். திருமணத்துக்கு முன்பு வரை எனக்கு ரஸ்தாளி, பூவன், கற்பூரவல்லி, பச்சை பழம் என்று வாழைப்பழ வகைகள் தான் தெரியும். அப்பறம் தான் பேயன், மட்டிப்பழம்,சிங்கம்பழம், செந்துளுவன் இதெல்லாம் தெரிய வந்தது. மற்ற ஆரஞ்சு, ஆப்பிள் பழங்களை மட்டும் தான் பெயர் சொல்லி சொல்கிறார்கள். மற்றபடி பழம் என்றாலே வாழைப்பழம் தான். காலை காப்பியில் ஆரம்பித்து இரவு படுக்கும் வரை, எல்லா உணவுடனும் வாழைப்பழம் கட்டாயம் சாப்பிட வேண்டும்.

அன்று மாலை ஒரு செட் ஊருக்கு கிளம்பினார்கள். விடை அனுப்ப railway station போன இடத்தில் குழந்தைகள் ஒன்றை ஒன்று கட்டி கொண்டு அழுது பிரியா விடை பெற்றன.

28-June-2009
ஞாயிறு அதிகாலை return பெங்களூருக்கு கிளம்பினோம். வரும் வழியில் மறுபடியும் திருநெல்வேலி அல்வா. காலை 7:30மணிக்கு வாங்கின போதும் அதே சூடு. கயத்தாறில் கட்டபொம்மன் சிலைக்கு கீழே உட்கார்ந்து கொண்டு வந்த காலை உணவு, வழியில் கோவில்பட்டியில் ஒரு மர நிழலில் மதிய உணவு. இரவு உணவுக்கு மறுபடி ஆனந்த பவன், என்று ஒரே மூச்சாக இரவு தூங்க வீட்டுக்கு வந்துவிட்டோம். உறவினர்கள், கடல், அருவி, குழந்தைகள், கோவில், திருமணம் என்று ஒரு வாரம் ஓடியதே தெரிய வில்லை.

So how is life now?
"அடுத்த கல்யாணம் எப்போ வரும்? இதே மாதிரி இன்னொரு ட்ரிப் போகலாம்" என்று பார்த்து கொண்டிருக்கிறேன்.

அட கண்ணனும் சஞ்சயும் இப்போ எதுக்கு இப்டி அழுவறீங்க? அப்டி என்ன ஆகி போச்சு? ஒரு தொடர் ன்னு ஆரம்பிச்சா அது முடிஞ்சு தான ஆகும்? இதுக்கு போயி மனச தளர விடலாமா??

......

என்ன அதுக்கு அழுவலையா? பின்ன என்ன?

......

என்னது? இன்னொரு முறை இப்டி ஒரு தொடர் எழுத மாட்டேன்னு சத்தியம் பண்ணனுமா?



-பயணம் சுபம்.

Tuesday 18 August 2009

From Today's Playlist :-)

இசை என்று ஒரு விஷயம் இந்த உலகத்தில் இல்லாமல் போனால், நிறைய பேருக்கு பைத்தியம் பிடிச்சுடும். ஏதோ ஒரு வடிவத்தில் இசைக்கு எல்லோருமே அடிமை தான்.

"இளையராஜாவின் "How to Name it?" கேட்டு இருக்கீங்களா??"
"இல்லை"
"கேட்டதில்லையா...ச்ச, வேஸ்ட் நீங்க"

இசையை பொறுத்த வரை என்னுடைய எல்லை ரொம்ப ரொம்ப சின்னது.
நம்ம எதுக்கு மியூசிக் கேக்குறோம்? மகிழ்ச்சியை பகிர்ந்துக்க, துக்கத்தை வடிக்க, தனிமைய போக்க, பொழுது போக, தூக்கம் வர, கடவுளை உணர...etc etc.
இந்த மாதிரி ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு மாதிரியான தேடலுடன் மியூசிக் கேட்போம்.

இந்த தேடலுக்கு எல்லாம் விடை சிலருக்கு "How to name it"டில் கிடைக்கலாம். எனக்கு சினிமா பாட்டுலேயே கெடைச்சுடுது.
இதை 'குறுகிய ரசனை' ன்னு ஆதங்கப்படும்/'வளர்த்துக்கொள்ள சொல்லி' அக்கறைப்படும் நண்பர்களுக்கு நான் சொல்றது இதான்,
"எனக்கு தெரிஞ்சது இவ்வளவு தான்...:-(
இப்போதைக்கு எனக்கு அதுவே போதுமானதா இருக்கு."

லகான் படத்துல "Radha kaise na jale" ன்னு ஒரு பாட்டு வரும். என்னோட சந்தோஷத்தை இரட்டிப்பாக்க அது போதும்."காதலின் தீபம் ஒன்று" பாட்டை விட ரொமான்டிக் ஆன ஒரு பாட்டு இன்னும் வந்துடலைன்னு எனக்கு ஒரு நம்பிக்கை. எப்போல்லாம் தனியா இருக்க மாதிரி உணர்கிறேனோ, அப்போல்லாம் "Tanhayee(Dil Chahta Hai)" பாட்டு எனக்காக அழும்.

சரி எனக்கு பிடிச்ச பாட்டு லிஸ்ட் சொல்லி பிட் போடுவதற்காக அல்ல இந்த பதிவு.
மேட்டர்க்கு வரேன்.

இந்த மாதிரியான என்னோட limited horizon னில் இருந்து சில கேள்விகள்.

கூகிள் பண்ணாம பதில் சொல்லுங்க பார்க்கலாம்.


1)உன்னி கிருஷ்ணனும், உதித் நாராயணனும் சேர்ந்து பாடின பாட்டு சொல்லுங்க.

2)அனுராதா ஸ்ரீராம், மாதங்கி சேர்ந்து பாடின பாட்டு?

3)"வளையோசை கல கலவென", "ஓ பட்டர்பிளை" இந்த ரெண்டு பாட்டுக்கும் என்ன ஒற்றுமை?

4)இசைஞானியின் நானூறாவது படத்துல, அவரே பாடின பாட்டு என்ன?

5)Musically Connect: அபூர்வ ராகங்கள். பதினாறு வயதினிலே, சிந்துபைரவி, மின்சாரகனவு,கருத்தம்மா, அழகி, பாரதி, ஆட்டோக்ராப்

Friday 7 August 2009

பெங்களூர் to கன்னியாகுமரி - 5

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

இப்போது மணமகன் மணமகளுக்கு மங்கள நாண் அணிவிப்பார்.

அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான இன்று மணவிழா காணும் மணமக்களை...

இப்படியான ஒரு பகுத்தறிவு கல்யாணம் எனக்கும் கதிருக்கும்.

நோ ஹோமம், நோ மாங்கல்யம் தந்துனானே etc etc.

ஒரு விதத்தில் எனக்கும் மகிழ்ச்சி தான் என்றாலும் என் புகுந்த வீட்டு திருமண சடங்குகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆவல். சிலர் திருமண ஆல்பம்,DVD பார்த்ததில் ஓரளவுக்கு ஐடியா இருந்தாலும், நேரில் பார்க்க போவது இன்று தான் முதல் முறை. மூர்த்திக்கும் பூரணிக்கும் கல்யாணம். அம்மா அப்பா பார்த்து வைத்த மணமகள், மணமகன். சமத்து பிள்ளைகள்.

25-June-2009
அதிகாலையில் என் முதல் நாத்தனாரின் குடும்பம் வந்து சேர்ந்ததில் இருந்தே எல்லாருக்கும் கல்யாண பரபரப்பு தொற்றிக்கொண்டது.
'சீக்கிரம் குளிங்க எல்லாரும்'

'குழந்தைகளை குளிப்பாட்டி டிரஸ் பண்ணி அவங்கவங்க அப்பாவிடம் விட்டு விட்டு அப்றோம் நம்ம saree கட்டலாம்.'

'நம்ம கல்யாணத்தன்னைக்கு கட்டினது, அதுக்கு அப்றோம் இன்னைக்கு தான் இந்த பட்டு கட்டறேன்'
'iron பண்ண போன எடத்துல கூட "சார் saree ரொம்ப நல்லா இருக்கு, நீங்க எடுத்ததா சார்? உங்க wife குடுத்து வெச்சவங்க" ன்னு சொல்றான்.'
'அவனுக்கென்ன? அவன் சொல்வான். By the way, இந்த white and white வேஷ்டி சட்டைல அரசியல்வாதி மாறி இருக்கீங்க. துண்டு தான் மிஸ்ஸிங்.'

"கல்யாணத்துக்கு கல்யாணம் தான் தலையில் பூ வெக்குறது. அதை இன்னும் கொஞ்சம் தாராளமா வெச்சா என்ன?"

"இந்த necklace கொக்கி கொஞ்சம் மாட்டி விடேன்"

பெண்கள் எல்லாரும் புடவை கசங்காமல் மேக்கப் கலையாமல் மண்டபத்தில் கொண்டு விடப்பட்டோம். கதிருக்கும் அவருடைய காருக்கும் ஒரே பாராட்டுகள். Go Fida.

டிபன் முடிந்ததும் மாப்பிள்ளை அழைப்பு.

மாப்பிள்ளை வீட்டார் அதாவது நாங்கள் அனைவரும் ஒரு இடத்தில் கூடி இருக்க, மணமகளின் தம்பி வந்து மாப்பிள்ளைக்கு மாலை போட்டு, பன்னீர் தெளித்து, கைகளில் சந்தனம் தடவி, (இதுவே வயதில் பெரியவர் ஆக இருந்தால் நெற்றியில் பொட்டு வைப்பார்களாம்) மேள தாளத்துடன் (உங்கள் யாருக்காவது ஒரு பலிகடா effect கிடைத்தால் நான் பொறுப்பில்லை.அங்கே நடந்ததை சொல்கிறேன்)எங்க எல்லாரையும் மண்டபத்துக்கு அழைத்து செல்கிறார்கள். மண்டபத்திற்குள் நுழையும் முன், மாப்பிள்ளைக்கு பாதம் கழுவுகிறான் மணமகளின் தம்பி. அதற்கு பரிசாக அவனுக்கு மாப்பிள்ளை ஒரு மோதிரம் போடுகிறார்.

நேராக மாப்பிள்ளையை மணமேடையில் கொண்டு போய் அமர வைத்து திருமண பொழுதில் அணிய வேண்டிய உடையை மணமகளின் தாய்மாமா தருகிறார்.
மாப்பிள்ளை உடை அணிய சென்று விட, மணமகளை மேடைக்கு அழைத்து அவளுக்கு முகூர்த்த புடவையை மணமகனின் அக்கா தருகிறாள்.அந்த பெண்ணும் உடை மாற்ற சென்று விடுகிறது. இதற்குள் மாப்பிள்ளை உடை மாற்றி (ஒரு வேஷ்டி சட்டை மாற்ற எவ்வளவு நேரம் ஆகி விட போகிறது, எங்களை மாதிரியா?)
வந்துவிட, மேடையில் அமர வைத்து 'உரிமா கட்டுதல்' என்று ஒரு சடங்கு நடக்கிறது.
அதாவது மாப்பிள்ளைக்கு உரிமை உள்ள ஆண்கள் அனைவரும், சித்தப்பா, பெரியப்பா, மாமா, மச்சான், அண்ணன், அத்தான், என்று ஏகப்பட்ட பேர் வரிசையில் வந்து மணமகன் தலையில் தலைப்பாகை கட்டுகிறார்கள். வயதான சிலர் பயபக்தியோடு சின்சியராக கட்ட, பலர் கேலியும் கிண்டலுமாக கலாய்த்தபடி.
கலர் கலராக blouse துணியில். மாப்பிள்ளை வீட்டு பெண்கள் இன்னும் ஒரு வருடத்திற்கு எந்த புடவைக்கும் matching blouse தேடி அலைய வேண்டியதில்லை. அவ்வளவு துணிகள் வந்து குவிகிறது.
"உங்க கல்யாணத்தில் கதிரை நல்லா ஓட்டனும் என்று இருந்தோம். வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது." என் நாத்தனார் கணவர் உரிமா கட்டும் வரிசையில் இருந்து விலகி வந்து என்னிடம் கிசுகிசுத்து விட்டு போனார்.

"இந்த சடங்கிலும் ஒரு நன்மை இருக்கு பாத்தியா?பொண்ணுக்கு புடவை மாற்ற நல்ல டைம் கிடைக்கும் இல்ல?"
"உங்கள் பகுத்தறிவு பார்வைக்கு திரிஷ்டி சுத்தி போடணும்ங்க."
"நக்கல் ஜாஸ்தி உனக்கு. பகுத்தறிவுக்கே திருஷ்டியா?இரு இதையெல்லாம் ஒரு நாள் எங்கப்பா கிட்ட போட்டு குடுக்குறேன்."
":-)"

ஒரு வழியாக பெண் உடை மாற்றி வந்து விடுகிறது. வழக்கமான விமர்சனங்கள். புடவை பற்றி, நகைகள் பற்றி, மேக்கப் பற்றி. இதெல்லாம் ஊருக்கு ஊரு மாறாது போல்.
என் அம்மா வீட்டு சைடு, தாய் மாமா, மாமிக்கு தான் சகல மரியாதை கிடைக்கும். மூணாவது முடிச்சுக்கு மட்டும் தான் அக்காவை அழைப்பார்கள்.
ஆனால் இங்கோ மாப்பிள்ளையின் அக்காவுக்கு அதி முக்கித்துவம் கொடுக்கிறார்கள். மேடையில், புரோகிதர், மணமக்களுடன், அந்த அக்காவுக்கு மட்டும் தான் இடம் கொடுக்கிறார்கள். எல்லா சடங்கையும் அவளை விட்டு தான் செய்ய சொல்கிறார்கள். ஆனால் இந்த கல்யாணத்தின் அக்கா ஒரு சாப்ட்வேர் அக்கா. புரோகிதரின் கட்டளைகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல், புடவையை இழுத்து பிடித்துக்கொண்டு தடுமாறியது.
டும் டும் டும். தாலி கட்டியாகி விட்டது. அடுத்து திருநீறு பூசும் படலம். அதற்கும் ஒரு பெரிய வரிசை. ஆனால் இதில் பெண்களும் உண்டு. கதிர் தான் மணமகனுக்கு ஒரே அண்ணன், அதனால் மைனி (அண்ணி) திருநீறுக்கு, என்னை தான் அழைத்தார்கள். ரொம்ப பெருமை எனக்கு.

மதிய உணவில் பருப்பு சாதத்தில் அப்பளம் உடைத்து போட்டு சாப்பிடுகிறார்கள். கலர்கலராக மூன்று பாயசம் வைக்கிறார்கள்.
அன்றைக்கு மாலை reception. அதாவது முகூர்த்த நாள் அன்று நிறைய திருமணங்கள் நடைபெறும் என்பதால், காலையில் வர இயலாதவர்கள், வாழ்த்த வருவதற்காக ஏற்படுத்தப் பட்டது தான் இந்த reception பழக்கமாம். இப்போது அது ஒரு போட்டோ session என்ற அளவில் மாறி விட்டு இருக்கிறது. Orchestra வைப்பதும் சமீபத்திய முன்னேற்றம். reception முடிந்து வைக்கும் சடங்குக்கு பேர் 'நாலாம் நீர்'. இதென்ன நாலாம் நீர் என்றால், அந்த காலத்தில் திருமணத்தின் ஒவ்வொரு சடங்குக்கு முன்னதாகவும் மாப்பிள்ளையும் பெண்ணும் நீராட்ட படுவார்களாம். இது நாலாவது நீராட்டு என்பதால் அந்த பெயர். இப்போது வெறும் பெயர் மாத்திரம்.பெண் தலையில் மாப்பிள்ளையும், மாப்பிள்ளை தலையில் பெண்ணும் அப்பளம் உடைக்கிறார்கள். பின்னாளில் ஒருவர் மண்டையை ஒருவர் உடைப்பதற்கு ஒரு நல்ல ஒத்திகை.பிறகு பித்தளை தேங்காய் உருட்டுகிறார்கள்.இதை பார்த்துக்கொண்டே இருந்த அர்ஜுன் விடு விடுவென்று மேடைக்கு போய் ஒரு அப்பளத்தை எடுத்து தன் தலையில் தானே உடைத்து கொண்டான். எல்லாரும் விழுந்து விழுந்து சிரிக்க, "உன் புள்ளைக்கு பொண்ணு பாருடீ, கல்யாண ஆசை வந்து விட்டது" என்று என்னையும் சேர்த்து வாரினார்கள்.

"சுருள்". மாப்பிளைக்கு உறவுக்காரர்கள் எல்லாரும் மொய்ப்பணம் வைக்க வேண்டும்.
"நீ மைனி சுருள் வை" என்று எனக்கு பணம் கொடுத்தார் கதிர். இந்த பணம் எல்லாம் மாப்பிளையின் அக்காவுக்காம். கொள்ளை வசூல்.இது முடிந்து எல்லாருக்கும் முறுக்கு தருகிறார்கள். பெண் வீட்டில் செய்தது. "முறுக்கு நல்லா இருக்கு" என்று பெண் வீட்டாரும் "இன்னும் கொஞ்சம் உப்பு போட்ருக்கணும்" என்று மாப்பிள்ளை வீட்டாரும் சொல்லி கொண்டே நொறுக்குகிறார்கள்.
பிறகு இரவு உணவு. தீயலும் சோறும். தீயல் என்பது தேங்காய், மிளகாய், மல்லி எல்லாம் வறுத்து செய்யும் ஒரு குழம்பு. வத்தகுழம்பின் ஒரு வடிவம். என் மாமியார் சமைப்பதில் எனக்கு ரொம்ப பிடித்தது இது தான்.

உணவிற்கு பிறகு மாப்பிள்ளையை பெண் வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள்.எங்கள் ஊரில் சாந்தி கல்யாணம் மாப்பிள்ளை வீட்டில் நடக்கும். "பெண் என்பவள் வளைந்து கொடுக்க தெரிந்தவள்.எங்கும் சமாளித்து விடுவாள். ஆண்களுக்கு தான் புது இடம் பழக நேரம் ஆகும்" என்று காரணம் சொல்வார்கள். இவங்க அப்டியே மாத்தி சொல்றாங்க. Good actually.

மறுநாள் காலை, நாங்கள் சிலர் மாத்திரம் கிளம்பி பெண் வீட்டுக்கு சென்றோம். அடுத்த சடங்குக்கு பெயர் "ஏழாம் நீர்" . "ஐந்தாம் ஆறாம் நீர்லாம் எங்க?" என்று கேக்க வில்லை நான். ஏற்கனவே ஏகப்பட்ட கேள்வி கேட்டு நச்சரித்ததால் என் பக்கத்தில் வருவதற்கே என் புகுந்த வீட்டினர் சற்று பயந்த மாதிரி தோணுச்சு.அங்கே பொங்கல் வைத்து, படைத்து, பெண்ணையும் மாப்பிள்ளையையும் அமர வைத்து ஒரு பொம்மையை தட்டில் வைத்து அவர்கள் கையில் குடுத்து, "சரி புள்ளைக்கு எல்லாரும் பணம் போடுங்கள்" என்கிறார்கள்.என்னது ஒரே இரவில் புள்ளையா? பகுத்தறிவுவாதிகளை ஒரேடியாக குறையும் சொல்லி விட முடியாது...:-)
அட மறுபடியும் வசூல். அந்த பணமும் பையனின் அக்காவுக்கு தானாம்.என் தம்பி கல்யாணத்தை நாகர்கோவிலில் வைக்க சொல்ல வேண்டும்.

மூர்த்தி கல்யாணம் இனிதே நிறைந்தது. இல்லை இல்லை இனிமே தான ஆரம்பம்...:-)

- இன்னும் பயணம்(கன்னியாகுமரி)

Saturday 1 August 2009

பெங்களூர் to கன்னியாகுமரி - 4

எப்போதும் நட்ட நடுநிசியில் ராக்கோழி மாதிரி முழிச்சு உக்காந்து பதிவு எழுதி தான் பழக்கம். ஒரு மாற்றத்துக்காக இன்னைக்கு காலங்கார்த்தால.

சுசீந்திரம் தரிசனம் முடிந்து "முட்டம்" (அடி ஆத்தாடீ...என்று முட்டம் சின்னப்பதாசும், ஜெனிஃபர் டீச்சரும் டூயட் பாடுவாங்களே மறக்க முடியுமா?)போவதாக தான் பிளான்.முட்டம், சங்குத்துறை, சொத்தவளை இதெல்லாம் வங்காள விரிகுடா, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கொடுத்திருக்கும், குட்டி குட்டி கடற்கரைகள். இதில் எங்கள் திருமணம் முடிந்த ஓரிரு நாட்களிலேயே, DVD outdoor ஷூட்டிங் க்காக, (இப்டின்னா என்னன்னு புரியாதவர்கள் பின்னூட்டத்திலோ, சாட்டிலோ, கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.இப்போதைக்கு சிரிப்பை கட்டுப்படுத்தி கொள்கிறேன்) சொத்தவளை போய் இருந்தோம். அதனால் "இந்த முறை முட்டம் போவோம், படத்தை பதினைந்து தரம் பாத்துட்டே, அந்த பீச்சை நேரா கொண்டு போய் காட்டுறேன்" ன்னு சொல்லிருந்தார். ஆனால் நான் சுசீந்திரத்தில் உருகி மருகி, கேள்வியெல்லாம் கேட்டு முடிந்து வந்து சேருவதற்குள், நேரமாகி விடவே, ஒரு சின்ன முறைப்புடன் பக்கத்தில் இருக்கும் சங்குத்துறைக்கே போவதாக முடிவாகி விட்டது.

"கடல், நிலா, ரயில் மூன்றும் எவ்வளவு முறை பார்த்தாலும் மனிதனுக்கு அலுக்கவே அலுக்காது" என்று படித்து இருக்கிறேன். எனக்கு இந்த லிஸ்டில் யானையை சேர்க்கணும் என்றால், கதிரை பொறுத்த வரை இந்த லிஸ்டை 'கடல், கடல், கடல்' என்று மாற்றி விடலாம். ஆனால், நான் இந்த முறை, "நான் கால் கூட நனைக்க மாட்டேன், எனக்கு இப்டி கடற்கரையில் உக்காந்து அலையை வேடிக்கை பார்க்க தான் பிடிக்கும்" என்று நல்ல பிள்ளையாக (பின்ன, மாமனார், மாமியார் எல்லாம் கூட வந்து இருந்தார்களே!) உக்காந்துட்டேன். ஆனால் உண்மையில், கடலில் நனைந்து விளையாடுவதை விட, உக்காந்து வேடிக்கை பார்ப்பது தான் அதி சுகம். அங்க நாங்கள் போட்டோ எடுப்பதை பார்த்து, "நம்ம ஊரு கடலை photoல்லாம் எடுக்கறாங்கப்பா" என்று நக்கல் அடித்தது ஒரு மீனவ இளைஞர் கூட்டம். நான் பாரிஸ் போய் இருந்தப்போ, "Eiffel டவர் போறேன் என்று கிளம்பிய போது, பிரெஞ்சு colleague ஒருத்தர், பதினேழு வருஷமா இதே ஊரில் இருக்கேன், ஆனா அந்த டவர் மேல ஏறினது இல்ல, அங்க அப்டி என்னதான் இருக்குன்னு நீ அங்கே போற?" என்று கேட்டதும், இப்போது எங்க வீட்டுக்கு வரும் உறவினர்கள் "லால்-பாக் போகணும்" என்று சொல்லும்போது, நானும் கதிரும் பரிமாறிக்கொள்ளும் நமுட்டு சிரிப்பும் ஞாபகம் வந்தது. கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் வரை யாருடைய/எதனுடைய அருமையும் நமக்கு தெரிவதில்லை.

25-June. Wednesday.
அதிகாலையில் சென்ற இடம் தேரூர். சில உறவினர்களை drop பண்ண போன போது, "நீயும் வாயேன்" என்று அழைத்தார். நாகர்கோயில் பகுதி மக்களிடம் நான் கவனித்த ஒரு விஷயம் யாரு வீட்டுக்கு போனாலும், அவங்க வீட்டில் இருக்கும் போட்டோ ஆல்பம் எடுத்து காண்பிப்பார்கள். காபி,snacks கொடுப்பதை போல, இதும் விருந்தோம்பலில் ஒரு விஷயம் போலும். நோட் பண்ணிக்கிட்டேன், நாளைக்கு எங்க வீட்டுக்கு வந்தால் நானும் பண்ணனும் இல்ல?

அன்றைய பிளான் திற்பரப்பு அருவி. குற்றாலம் போவதாக இருந்தது, சீசன் காலை வாரிவிடவே, திற்பரப்பாக மாறி விட்டது. நாகர்கோயில் - திருவனந்தபுரம் சாலையில், இந்த அருவிக்கு போவதற்கு diversion கிடைக்கிறது. நான், கதிர், அர்ஜுன், எனது நாத்தனார், அவருடைய கணவர், குழந்தைகள். போகும் வழியிலேயே பத்மநாபபுரம் அரண்மனை. 'பொங்கலை பொங்கலை வெக்க மஞ்சளை மஞ்சளை எடு...' 'வருஷம்-16' படத்துல வர்ற வீடு, இந்த அரண்மனை தான்.அங்க இருக்கும் guides எல்லாம்,அரண்மனையை சுற்றி காட்டும் போது, "இது தான் குஷ்பூ மேடம் குளித்த இடம், தலை வாரிய இடம்" ன்னு சொல்லுவாங்களாம். குஷ்பூ மேடம் க்கு திருமணம் ஆகி குழந்தைளும் பெரிசாகி விட்டதாலும், அருவி மீது இருந்த ஆர்வமும், எங்கள் எல்லாரையும் "அரண்மனையை வரும் போது பார்த்து கொள்ளலாம்" என்று சொல்ல வைத்தது. பாவம் நாங்கள் யாரும் அறிந்திருக்க வில்லை, 'வரும் போது நாங்க பதறி அடித்து டாக்டர் தேடி ஓட போகிறோம், இந்த அரண்மனைய பாக்க முடிய போவதில்லை' என்று.

திற்பரப்பு - ஒரு சிறிய அருவி தான். ஆனால் அதிக கூட்டம் இல்லை. தண்ணீரும் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. நாத்தனார் பிள்ளைகள் இருவரையும், அர்ஜுனையும் அவரவர் அப்பாக்கள் நேரடியா கொண்டு போய் அருவியில் நனைக்கவும், குழந்தைகள் பயந்து கத்த ஆரம்பித்து விட்டன. அப்பாக்கள் வேஸ்ட். புள்ளைங்க psychology தெரியலை. மூணு பேரையும் கூட்டி போய், கொஞ்சமா தண்ணீர் வர்ற இடத்துல விளையாட விட்டேன் சற்று நேரம் தான். படு குஷியாக விளையாட ஆரம்பித்தார்கள்.அதிலும் அர்ஜுன் செம ஆட்டம்.

பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு. ஒரு தனி அருவி. :-)
நானும் நாத்தனாரும் குழந்தைகளும் மட்டும் தான் அப்போது அங்க. அருவியில் தலை நனைக்கும் போது, யாரோ பட் பட்டென்று முதுகில் சாத்துவதை போல இருக்கும். அவ்ளோ வேகம். 'உண்மையில் யாரவது இப்டி அடித்தால் விட்டுடுவோமா?' என்று பேசிக்கொண்டே நனைந்து கொண்டு இருந்தோம்.

அழகாக போய் கொண்டிருந்த பயணம், திருஷ்டி பட்டதை போலாகி விட்டது.
நாத்தனாரும், அவருடைய இரண்டாவது பெண்ணும் பாசியில் வழுக்கி விழுந்து காயமாகி விட்டது. அதிலும் குழந்தைக்கு நெற்றி பொட்டில் ரத்தம் நிற்கவே இல்லை. காரில் இருந்த முதலுதவி சமாச்சாரங்களை வைத்து அப்போதைக்கு சமாளித்து விட்டு, திரும்பி நாகர்கோயில் விரைந்தோம் டாக்டரை தேடி.

-இன்னும் பயணம்.(மூர்த்தி கல்யாண வைபோகமே)

எச்சரிக்கை: 'உங்கள் குடும்பத்தில் எல்லாருக்கும் விழறதுன்னா ரொம்ப பிடிக்குமா?' ரீதியில் பின்னூட்டங்கள் வரவேற்க படவில்லை'. :-)

With that I wish each of you, a ver happy Friendship Day! நண்பன் ஒருவன் வந்த பிறகு, விண்ணை தொடலாம் உந்தன் சிறகு, வானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே....

Saturday 25 July 2009

ட்ரிங்! ட்ரிங்!

பயண தொடர் முடியும் வரை வேற எந்த பதிவும் எழுத கூடாது, அது அந்த தொடரின் continuity யை கெடுத்துடும் என்ற முடிவோட தான் இருந்தேன்.
ஆனால் இன்றைக்கு அந்த முடிவை மாற்றியது ஒரு டெலிபோன் கால்.


வெள்ளி இரவு, நானும் அர்ஜுனும் மட்டும் வீட்டில் தனியாக இருக்க வேண்டிய நிலைமை. துணைக்கு தம்பி வந்து இருந்தான். பக்கத்து அறையில் அவன் கதவை அடைத்து கொண்டு படுத்து விட, அர்ஜுனை தூங்க வைத்து, பிறகு இணையத்தில் பொழுதை கழித்து, பிறகு டிவி பார்த்து...என்று படுக்கும் போது கிட்ட தட்ட இரண்டு மணி. அடுத்த மூணு மணி நேரத்தில் ஒரு ரகளை நடக்க இருப்பதை கொஞ்சமும் எதிர் பார்க்காமல் தூங்க போனேன்.

பொதுவாகவே எனக்கு அதிகாலையில் வரும் தொலைபேசி அழைப்புகள்
என்றால் அலர்ஜி. அதற்கு வெவ்வேறு காரணங்கள் இருக்கு. அர்ஜுன் பொறந்த பிறகு, "அவன் காலங்கார்த்தால தூக்கம் கலைந்து எழுந்தால் ரொம்ப படுத்துவான்" என்பதே அலர்ஜிக்கான முதல் காரணம் ஆகி போனது.

சனிக்கிழமை அதிகாலை ஐந்து மணி. வீட்டு landline போன் அலறியது கேட்டு, பதறி அடித்து எழுந்து ஓடிய நான், என்ன ஏது என்று உணர்வதற்குள் ஏதோ தடுக்கி கீழே குப்புற விழுந்து கிடக்கிறேன். சற்று நேரம் அதீத வலியை தவிர வேறு எதுமே நினைவில்லை. கத்த வேண்டும் என்று தோன்றுகிறதே தவிர சுத்தமாக குரல் வர வில்லை. நான் விழுந்த சத்தத்தில் எழுந்து விட்ட அர்ஜுன், நான் இப்டி விழுந்து கிடப்பதை பார்த்து "அம்மா பயமா இருக்கும்மா எந்திரிங்கம்மா" என்று அழுகிறான். இருக்கிற சக்தியை எல்லாம் திரட்டி எழுந்து அவன் பக்கத்தில் போய் படுத்து கொண்டேன். உடல் முழுக்க வலி பரவுகிறது. அவன் தூங்கி விட்ட பிறகு எழுந்து வந்து என்ன(வெல்லாம்) ஆகி இருக்கிறது என்று பார்த்தால், விழுந்த வேகத்தில் கட்டில் மோதி முகத்தில் இடது பாதி செவ செவ என்று ரத்தம் கட்டி போய் இருக்கிறது. ரெண்டு கை முற்றிலும் நல்ல சிராய்ப்பு. தம்பிய எழுப்பி விவரம் சொல்லி, etc etc.

கொடுமை என்னன்னா கடைசில அந்த போன் கால் attend பண்ணவே இல்லை நான்.
அர்ஜுனும் முழிச்சுட்டான். முகம் வீங்கியது தான் மிச்சம் எனக்கு.

-என்ன நீங்க இப்போதெல்லாம் அதிகமாக gChat பேசுவதே இல்லை?
சனிக்கிழமை morning கண்டிப்பாக chat செய்கிறேன்.

-Priya, Your feature test execution status is 50%. Its good though, we need to achieve 100% by 8/August.
Ok, I shall work over the weekend.

-ப்ரியா, saturday நம்ம ஆபீஸ்ல family day, நீ உன் husband கொழந்தை எல்லாம் கூட்டிட்டு வரியா?
இல்லப்பா, நான் weekend work பண்ணனும்.Kathir is out of station too. But உன் familyya கண்டிப்பா meet பண்றேன்.

இப்படி ரொம்ப பெருமையா ஏகப்பட்ட வாக்குறுதிகளை அள்ளி தெளித்து இருந்தேன்.
படு சொதப்பல்.

இந்த பதிவின் நோக்கம், என்னுடைய சோகத்தை சொல்வது அல்ல. infact, நான் சோகமாக இல்லை.

இன்று எனக்கு சில realisation. பகிர்ந்துக்கலாமேன்னு.

-suppose என் தம்பியும் வராமல் இருந்து, எனக்கு பட்ட அடி பலமாக பட்டு இருந்து, நினைவு ஏதும் தப்பி இருந்தால் அர்ஜுனின் கதி? பதினொரு மணிக்கு தான் வீட்டு வேலைகளில் எனக்கு உதவும் ஒரு அம்மா வந்து பார்த்து இருப்பார்கள். அதும் கதவு உள்பக்கமாக பூட்டி இருக்கும். சற்று extreme ஆன thinking தான். ஆனாலும் a very likely case. அதனால் கணவர்களே, மனைவியை தனியா விட்டுட்டு ஊருக்கு போகாதீங்க. மனைவிகளே, தனியா இருக்கும் போது சற்று எக்ஸ்ட்ரா conscious ஆக இருங்க.

-பதிவு எழுதுவதின் மிகப்பெரிய சம்பாத்யம் சுவாரஸ்யமான நண்பர்களும், சுவையான பொழுதுபோக்கும் தான் என்று நினைத்து இருந்தேன். அதை விட பெரிசா ஒண்னு இருக்கு. முன்னாடில்லாம் சின்னதா கொசு கடிச்சுதா கூட, எக்கச்சக்கமா depress ஆயிடுவேன்.ஆனா இப்போ எனக்கு படுற அடிகளையும், ரணங்களையும் கூட ஒரு அனுபவமா பாக்குற பக்குவம் கெடைச்சுருக்கு. "நகத்தை எடுத்தப்போவும், பல்லு பிடுங்கினப்போவும், இன்னைக்கு காலைல விழுந்து கிடந்தப்போவும் ப்ரியாவிற்கு எவ்ளோ தான் வலித்தாலும், பதிவர் ப்ரியா கதிரவன் நடப்பதை எல்லாம் சுவாரஸ்யமாக வேடிக்கை மட்டும் பார்த்துட்டு இருந்து இருக்கிறாள்" என்பது இன்னைக்கு நான் தெரிஞ்சிகிட்ட அழகான விஷயம்.

With that I wish, May God Be with all of us and Guide us through things that could trip us :-)

Wednesday 22 July 2009

பெங்களூர் to கன்னியாகுமரி - 3

22-June. Monday. கோவளம் கிளம்பினோம். நாகர்கோவிலில் இருந்து இரண்டு மணிநேர டிரைவ்.திருவனந்தபுரம் போகும் வழியில் பாலராமபுரம் (மலையாளிகள் பால்ரா என்று சொல்கிறார்கள்) என்னும் ஊரில் இருந்து கோவளத்துக்கு வழி பிரிகிறது. ஆனால் போகும் போது அந்த வழியை மிஸ் பண்ணி, நேரே திருவனந்தபுரம் போய்ட்டோம். அப்றோம் அங்கிருந்து இருபது நிமிட டிரைவ்.


கோவளம் பீச் ஒரு பிரைவேட் பீச் கணக்கா இருக்கு. வெகு சுத்தம்.கூட்டம் கம்மி.
அலை அதிகம். யாராவது மாட்டிகொண்டால் மீட்பதற்கு செக்யூரிட்டி ஆட்கள் அங்கேயே இருக்காங்க. 'நானெல்லாம் தண்ணில வர மாட்டேன்.வேணும்னா கால் மட்டும் லேசா நனைக்குறேன்' இப்டி சொல்லி ஆரம்பித்து கொஞ்ச கொஞ்சமா உள்ள போய், ஒரு பெரிய அலையில் தடுமாறி கடலில் விழுந்தேன்.
(இனிமே கடலில் குளித்து இருக்கிறீர்களா என்று கொக்கிகாய்ச்சல் கேள்வி வந்தா, ஆமா ன்னு answer பண்லாம்.) விழுந்த என்னை அப்டியே அலை இழுத்துக்கொண்டு போக, என்னை கைபிடித்தவர் கை கொடுத்து தூக்கி விட்ட படி,

'உன்னை அப்டியே விட்டுட்டு அர்ஜுன் க்கு வேற நல்ல அம்மா ரெடி பண்ணிருக்கலாம்'.

'அட பாவமே அந்த கஷ்டம் இன்னொரு பொண்ணுக்கு வேணாம்'

பெரியவர்கள் குழந்தைகள் யாரையும் கூட்டி போகாமல் கதிரும் நானும் மட்டும் போனதால், கேட்க ஆளில்லை, நம்மள கேட்பதற்கும் இல்லை , நாம கேட்பதற்கும் இல்லை. ஒரு மணி நேரம் கடலில் ஆட்டம். ஊர் திரும்பி, 'களியன்காடு' சிவன்கோயில் விசிட். கதிரின் பெரிய மாமா அங்கே திருவாசகம் பிரசங்கம் செய்வார். 'இங்க முன்னால் ஒரு ஐந்து கால் காளை இருந்துச்சு, அது என்னை பாத்தா வணக்கம் சொல்லும்(?)' ன்னு சொல்றார். ரொம்ப பெரியவர். எனக்கும் கதிருக்கும் திருமணம் நடத்தி வைத்தவர். அதனால "காளை எப்டி பேசும்?" ன்னு எல்லாம் அவர் கிட்ட அபத்தமா கேள்வி கேக்காம தலைய ஆட்டி வெச்சேன்.
அன்று இரவு 'இரவிப்புதூரில்' கதிரோட பெரியம்மா வீட்டில் தங்கிட்டோம்.
zzzzzzzzzzzz.

Tuesday.
மருங்கூர் - இரவிபுதூரில் இருந்து வெகு அருகில் இருக்கும் மலை, மேல முருகன்.
காலையில் எழுந்து கிளம்பி, அர்ஜுனை கிளப்பி, மூச்சிரைக்க மலை மேல ஏறி கோவிலுக்குள் நுழைய முயற்சிக்கும் போது சரியாக மணி பத்து. "இப்போ தான் நடை சாத்திட்டோம்" என்றார்கள். 'திருப்பரங்குன்றத்தில் என்னை பாக்காமலா போனீங்க?' முருகன் கேட்காமல் கேட்டார். "To me, you are everywhere' ன்னு சாத்தின கதவை பாத்து கும்பிட்டுட்டு, கோவிலை சுத்தி வந்தோம்.

'இந்திரனுக்கு சுசீந்திரத்தில் விமோசனம் கிடைத்ததும், இந்திரனுடைய குதிரை 'உச்சைச்ரவா' தனக்கும் விமோசனம் வேண்டியதாகவும், சிவன் 'நீ என் புள்ள கிட்ட போய் கேட்டுக்கோ' என்று சொல்லிட்டதாகவும், அந்த குதிரைக்கு முருகன் விமோசனம் குடுத்த இடம் தான் மருங்கூர் (மருங்கு - குதிரை) என்றும் எழுதி வைத்து இருக்கிறார்கள்.'

சூரசம்கார திருவிழா நடக்கும் இடம் என்று கோவிலுக்கு பின்னால் காண்பித்தார்கள். அங்கே இருந்து கீழ பார்த்தால் கண்ணுக்கு எட்டின வரை தென்னை மரம் தான்.Good view. இப்டி ஊரு முழுக்க தென்னை மரத்தோட வளர்ந்ததுனால தான், சாப்பிடற எல்லாத்துலையும் தேங்காய் அரைச்சு ஊத்தி போட்டு தாக்குறாங்க போல. அட மோரை கூட விடறது இல்ல. அதுல தேங்காய் சீரகம் பச்சமிளகாய் இஞ்சி வெச்சு அரைச்சு புளிச்சேரி.(எங்க அம்மா வீட்டு மோர்குழம்பு கிட்ட தட்ட)

மாங்குளம் - மாமனாரின் குடும்ப கோவில். முத்தாரம்மன். ஒரு பகுத்தறிவுவாதி குடும்பத்தாரின் விருப்பத்திற்காக குலதெய்வம் கோவிலுக்கு போனால், பகுத்தறிவுக்கு பங்கம் வராதாமே? (..:-) :-) smiley போடாம இருக்க முடியலை) '
ஆனால் என் மாமனார் கோவிலுக்கு உள்ள வரலை, 'எனக்கு விவரம் தெரிஞ்சு இப்போ தான் இங்க வரேன்னு' சொல்லிட்டு எங்களை உள்ள அனுப்பிட்டு வெளில உக்காந்து கொண்டார்.
'நானும் கல்யாணம் ஆனதிலேர்ந்து இங்க வந்ததுல்லை.அர்ஜுன் சாக்கு வெச்சு வந்துட்டேன்' - மாமியார்.

அங்கிருந்து நல்லூர். கதிரின் சொந்த ஊரு. பார்க் பண்ற இடத்தில் மடேர்னு இடிச்சு காரில் ஒரு பெரிய dent. ஊர் நினைவாக ஏதாவது வேண்டாமா பின்ன? கதிரோட அத்தை வீட்டில் லஞ்ச். ஒரு குட்டி தூக்கம். சாயங்காலம் இந்த பயணத்தின் most awaited destination. சுசீந்திரம் தாணுமாலயன் கோவில்.

கோவிலை முழுசா சுத்தி பாக்க ஒரு நாலு மணி நேரம் வேணும். ஆனால் கதிர் குடுத்த டைம் one hour. 'சுத்தி எல்லாம் பின்னொரு நாள் பாக்கலாம், இப்போதைக்கு சாமி மாத்திரம் பாத்துக்கோ', என்று சொல்லி எங்களை(நான், மாமியார், கதிரோட அத்தை பெண், அர்ஜுன்) அனுப்பிச்சுட்டு மாமனாரும் கதிரும் எஸ்கேப். கோவிலில் ஆண்கள் சட்டை அணிந்து வரக்கூடாது என்றெல்லாம் சட்ட திட்டம் இருக்கிறது.

முதலில் ஒரு மரத்தடியில் மூலவர் சந்நிதி. ஆரத்தி பார்த்துட்டு, உள்ளே இன்னுமொரு சந்நிதி. தாண் மால் அயன் என்று மூவரையும் differentiate பண்ண முடியாமல் குழம்பிட்டேன். அங்கே ஒரு அர்ச்சகரிடம் போய், 'கொஞ்சம் எனக்கு தல வரலாறு சொல்லுங்க, அப்டியே மூலவர் சந்நிதில யாரு எங்க இருக்காங்கன்னு கரெக்டா காட்டுங்க, உள்ள இருக்க சந்நிதில லிங்கம் மட்டும் தான் தெரியறது, மத்த ரெண்டு பேரும் எங்க?' - என் மாமியார் சற்று அதிர்ந்து போய்ட்டார். 'அட, கதிருக்கு வாய்ச்சுருக்க பொண்டாட்டிய பாரு' - அவரோட அத்தை பெண்.

அர்ச்சகர் வெகு உற்சாகமா விளக்கினார்.(இந்த கோவிலை பற்றி இணையத்தில் பெரியவர்கள் நிறையா எழுதிட்டாங்க.ஆனாலும் நான் கேட்டதை நான் எழுதுவேன் என் டைரி குறிப்புக்காக)
'இந்த மரம் கொன்றை மரம், இதற்கு கீழே இருக்கிறது மூன்றும் சுயம்பு லிங்கம். ஒன்று சிவன், ஒன்று விஷ்ணு, ஒன்று பிரம்மா, அதுனால இந்த மூலவருக்கு கொன்றையடி தாணுமாலயன்னு பேர். காலையில் நாலரை மணிக்கு பூஜை அப்போ மட்டும் தான் லிங்கங்களை பார்க்க முடியும், அதற்கு அப்றோம் முகங்களை பிரதிஷ்டை பண்ணிடுவோம், உள்ளே சன்னதில நீங்க பார்த்தது ஒரே லிங்கம். அந்த லிங்கம் பிரம்மாவாகவும், லிங்கத்தின் தலையில் இருக்கும் பிறை சிவனாகவும், மேலே இருக்கும் பாம்பு விஷ்ணுவாகவும் இருப்பதாக ஐதீகம். சுசீந்திரம் என்பது இந்திரனுக்கு மோட்சம் அளித்த இடம் என்பதால் வந்த பெயர்" .
ரொம்ப நன்றி ன்னு சொல்லிட்டு இன்னும் உள்ளே போனோம்.
விஷ்ணு மல்லாக்க படுத்த நிலையில் ஒரு சிலை. மறுபடி குழப்பம். ஒருக்களித்து படுப்பாருனுல்ல நெனச்சேன்? பிறகு தான் தெரிந்தது. அவர் படுத்த நிலையில் இருபத்தேழு விதமான போஸ் இருக்காம்.

இதோ வந்தாச்சு. பயணம் தொடங்கியதில் இருந்து 'இந்த இடத்தை எப்டி சமாளிக்க போகிறோம்' என்று படபடப்பாகவே இருந்த இடம்.அழுது தொலைக்க கூடாது என்று ஏகத்துக்கு தயார்படுத்தி கொள்ள வேண்டி இருந்த இடம். சுசீந்திரம் ஆஞ்சநேயர் சந்நிதி. பிரம்மாண்டமா,ஆனா சாந்தமா,உடல் முழுக்க செந்தூரம் பூசிக்கிட்டு, பாதம் வரை தொங்கும் வெற்றிலை மாலையும், வடை மாலையுமாக, ஸ்ரீ ராமன் சந்நிதியை பார்த்தவாறு கைகூப்பி நிற்கும் ஆஞ்சநேயரை விட்டு கிளம்ப மனமில்லாமல் போனதற்கு அவர் அவ்ளோ அழகா இருந்தது மட்டும் காரணம் இல்லை.
சுசீந்திரம் கோயில் என் அப்பாவுடன் நான் போன கடைசி இடம். அதுவும் இதே ஆஞ்சநேயருக்கு வடை மாலை சார்த்த தான்.

- இன்னும் பயணம் (திற்பரப்பு, பத்மநாபபுரம்)

Saturday 11 July 2009

பெங்களூர் to கன்னியாகுமரி - 2

'அடுத்த part போடலையா?'

'போடணுமா வேணாமான்னு யோசிக்குறேன். முதல் part க்கே எல்லாரும் துப்பிட்டாங்க.'

'அதாரு எல்லாரும்? உங்க husband தான் சொல்லிருப்பார்.'

'இல்ல. by the way, அவர் சொன்னா எனக்கு எல்லாரும் சொன்ன மாதிரி தான்.'

'அதுக்கில்ல, உங்களுக்குன்னு ஒரு பத்து பேரு இருப்பாங்களே?'

'அவங்க தான். ரொம்ப திட்றாங்க, ஒருத்தர் என்னன்னா "என்ன இடது கையால எழுதுனீங்களான்னு" கேக்குறாரு. இன்னொருத்தங்க "ஊருக்கு கெளம்பறத மட்டும் வக்கனையா சொல்லிட்டு போங்க, ஆனா திரும்பி வந்து எழுதுற போஸ்ட் ல கோட்டை விட்டுடுங்க" ன்னு சொல்றாங்க. இப்டி மாத்தி மாத்தி திட்டுறத பாத்தா ஏதோ உள்நாட்டு சதியோன்னு ஒரு சந்தேகம் வருது.'

'அவ்ளோ மோசம் இல்ல. நான் ஒரு 5.5/10 மார்க் தரேன்'.

'அட நீங்க அவ்ளோ தாராளமா?'

'ஆனா போஸ்ட் ரொம்ப நீளம். எனக்கு இப்போவே கன்னியாகுமரி போய் சேந்துட்ட மாறி இருக்கு.'

'whatever'

.......

.......

ஆனால் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் blah blah blah.
(அட அதுக்காக திட்டின உங்களை எல்லாம் வேதாளம்ன்னு சொல்லுறதா நீங்களே நெனச்சுகிட்டா அதுக்கு நான் பொறுப்பில்ல)


ஜிகிர்தண்டா குடித்து ஒரு வழியா ஆகியிருந்த வயிறோடு, மதுரைய விட்டு கெளம்பும் போது மணி 11:30. திருப்பரங்குன்றம் cross பண்ணும் போது கதிர் திடீர்னு "நானும் அப்பாவும் அர்ஜுனை பாத்துகிட்டு கார்லயே இருக்கோம், நீயும் அம்மாவும் வேணா மேல கோவில்க்கு போயிட்டு வாங்க" ன்னார். "பன்னிரண்டு மணி வெய்யில்ல மலை மேல ஏறணுமா? நடை வேற சாத்திருப்பாங்க, இங்க இருந்தே கோவிலை பாத்து கும்பிடு போட்டுட்டு கெளம்பலாம்" ன்னு சொல்லிட்டோம். "அவ்ளோ தானா உங்க பக்தி?" ன்னு கெளம்பிட்டார். ஆனா முருகனுக்கு செம கடுப்பா ஆகியிருக்கணும். பின்னாளில் நல்லா பழி தீர்த்து கொண்டார். சரி அந்த கதை அப்புறம்.

கதிருக்கு abroad ல கார் ஓட்டலைன்னு எப்போவுமே இருந்த மனக்குறை, மதுரை - திருநெல்வேலி சாலையில் தீர்ந்தது. Four Lane அருமையாக போட்டு இருக்கிறார்கள். நடுநடுவே பழுது பார்க்குறதுக்காக அமைத்து இருக்கும் 'take diversion' களையும், "நீங்க எப்டி ரோடு போட்டு ரூல்ஸ் போட்டு வைத்தாலும், நாங்க எங்களுக்கு பிடிச்ச பக்கம் தான் ஓட்டுவோம்" என்று எதிரில் வரும் 'two-wheeler' களையும்,ஹைவேசில் சர் சர்ன்னு போகும் வண்டிகளை கொஞ்சமும் சட்டை பண்ணாமல், cross பண்ற தைர்யசாலிகளையும் மட்டும் மன்னிச்சுடனும்.

அங்கங்கே பதநீர் விற்றுக்கொண்டு இருப்பதை பார்த்து அம்மா,அப்பா, புள்ளை என்று மூணு பேரும் குஷி ஆயிட்டாங்க. 'நம்மளும் குடிக்கலாம்' என்று ஒரு மரநிழலில் நிறுத்தி, இறங்கியாச்சு. பனை ஓலையில் கப் (தொன்னை மாதிரி அல்ல) செஞ்சு, அதுல பதநீர் ஊற்றி , அதில் நுங்கு போட்டு தந்தார் ஒருத்தர். நாங்கள் இருந்த அந்த பத்து நிமிஷத்தில் கிட்டத்தட்ட முப்பது பேருகிட்ட வியாபாரம் பண்ணார். 'எனக்கு நுங்கு மட்டும் போதும், பதநீர் வேணாம்' என்று சொன்ன என்னை குடும்பமே கட்டாயப்படுத்த(விதி வலியது) ,அதையும் குடித்து வைத்தேன். வயிற்றுக்குள் ஒரு chemical reaction நடந்தது.
1/4 glass ஜிகிர்தண்டா + 1 பனை ஓலை கப் பதநீர் -> தலை சுற்றல், வயிற்று வலி. ஆனா எனக்கு மட்டும் தான். மத்தவங்க எல்லாம் தெளிவா தான் இருந்தாங்க.

கயத்தாரில் ஒரு ஐந்து நிமிஷங்கள் நிறுத்தி கட்டபொம்மன் சிலையை பாத்துட்டு கெளம்பினோம். நடிகர் சிவாஜி கணேஷன் தான் அந்த இடத்தை வாங்கி, கட்டபொம்மனுக்கு சிலை அமைத்ததாக எழுதி வைத்து இருக்கிறார்கள். சிலைக்கும் அவரே தான் மாடல் ஆக இருந்து இருப்பார் போலும்.முன்பெல்லாம் அந்த இடத்துக்கு வருபவர்கள் அஞ்சலி செலுத்தும் விதமாக அங்கே ஆளுக்கு ஒரு கல்லை போட்டு விட்டு போவார்களாம். 'அதுவே ஒரு மலை மாதிரி குவிந்து இருக்கும்' என்று என் மாமனார் சொன்னார்.திருநெல்வேலியில் லஞ்ச்.
அர்ஜுன் தான் பாவம் வழியெல்லாம் உடல்நிலை அவனை படுத்து எடுத்துடுச்சு. அதிலும் திருநெல்வேலியில் ரொம்பவே சிரமப்பட்டான்.அப்றோம் ஊருல எல்லார் வீட்டுக்கும் அல்வா பாக்கெட். சுட சுட கிடைக்குது.அரை கிலோ பாக்கெட் முப்பத்தஞ்சு ரூபாய். சென்னையில அதே பாக்கெட் எழுபது ரூபாயாம்.

திருநெல்வேலி - நாகர்கோயில் ரோடு வந்து ஒரு மர்ம நாவல் மாதிரி. பயங்கர திருப்பங்கள் நிறைந்தது. கொஞ்சம் பயமா இருந்தது.
"நம்ம ஊர்காரங்க மட்டும் கவர்மென்ட் கேட்டா நிலத்தை குடுக்காம கேஸ் போட்ருவாங்க, எல்லா மொள்ளமாரித்தனமும் தெரிஞ்சவங்க, அதான் இங்க மட்டும்
இன்னும் two Lane ஆகவே இருக்கு."
(கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த மொள்ளமாரித்தனம் பத்தில்லாம் தெரிஞ்சுருக்கலாம். too late) - மனசுல தான் நெனச்சேன், பின்ன இதெல்லாம் வெளியவா சொல்ல முடியும்?

வழியில் 'முப்பந்தல்' ன்னு ஒரு ஊரு. பெரிசா ஒரு அம்மன் சிலை வெச்சு இருக்காங்க, சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மூவரும் சேர்ந்து பந்தல் போட்டு பொங்கல் வெச்சதுனால அந்த பேருன்னு, என் மாமனார் சொன்னார்.

ஆராமுழி. ஆரல்வாய்மொழிய அப்டி தான் சொல்றாங்க. இந்த பேர கேட்டதும்,இந்த ஊரை பத்தி தெரிஞ்சவங்களுக்கு சில்ன்னு காத்து வந்துருக்கணுமே?? அட்லீஸ்ட் நெனைக்கும் போது எனக்கு சில்ன்னு இருக்கு.
Windmills.
ஏதோ நாத்து நட்டு வெச்ச மாதிரி, கண்ணுக்கு எட்டின தூரம் வரைக்கும் நூத்துக்கணக்குல வெள்ளை வெளேர்ன்னு ஒயரமா, உச்சில பெரிய fan சுத்திட்டு, eye candy தான் போங்க. சுபா, நம்ம இத 'ஆர்ம்ச்டர்டாம்' போயி பாத்தோம், நம்ம ஆராமுழியிலேயே என்ன சூப்பரா இருக்குடீ?southside travel பண்றவங்க கண்டிப்பா ஒரு வாட்டி இந்த ஊருல எறங்கி பாத்துட்டு போங்க.

ஒரு அஞ்சு மணிக்கெல்லாம் நாகர்கோவில்ல கதிரோட சித்தப்பா வீட்டுக்கு போய் சேந்தோம், அவரோட மகனுக்கு தான் கல்யாணம். பாத்ததும் எல்லாரும் கதிரை பாத்து "இவ்ளோ தூரம் டிரைவ் பண்ணி வந்துட்டியே" ன்னு கேட்டுட்டு, அடுத்து என்னை பாத்து "என்ன போனமுறை பாத்ததுக்கு வண்ணம் வெச்சுட்டியே" ன்னு கேட்டாங்க. :-(
இதுக்கு எதுக்கு சோக smiley? கலர் ஆகிருக்கேன்னு தான சொல்றாங்க? ன்னு நெனைச்சா நீங்க ஒரு அப்பாவி. வண்ணம் வெச்சுருக்கதுன்னா வெயிட் போட்டுருக்கதுன்னு அர்த்தம். அங்கே refresh பண்ணிட்டு, "வா நான் உனக்கு எங்க ஊரை சுத்தி காட்டுறேன்" ன்னு கதிர் என்னை கூட்டிட்டு கெளம்பினார். அவர் படிச்ச ஸ்கூல், மாமியார் படிச்ச ஸ்கூல், நாத்தனார் படிச்ச காலேஜ் என்று கதிர் தனியாக Sight-Seeing பண்ண இடங்களின் Site-Seeing...

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ...

-இன்னும் பயணம் (கோவளம், மருங்கூர், சுசீந்திரம்)





Saturday 4 July 2009

பெங்களூர் to கன்னியாகுமரி - 1

மதுரை பதிவர்கள் ரொம்பவே கொடுத்து வைத்தவர்கள். பதிவு முடியும் முன் காரணத்தை சொல்லி விடுகிறேன்.




20-June-2009
காலையில் ஐந்து மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பி விட வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் எல்லாரும் இரவு தூங்க போனோம். ஆனால் கிளம்பும் போது மணி 6:23.
கதிரை நான் இதற்கு முன்னால், இவ்வளவு உற்சாகமாக பார்த்தது இல்லை. அர்ஜுன், அத்தை மாமா என்று நாங்கள் எல்லோருமே படு சந்தோஷமாக கிளம்பினாலும், எனக்கு 'முதல் முறை இவ்வளவு லாங் டிரைவ் போறோமே' என்று லேசான ஒரு பயம் இருந்ததை ஒத்துக்கணும். ஓசூர் தாண்டி, அடையார் ஆனந்த பவன் சேரும் போது 8 மணி. அப்போதே பயங்கர கூட்டம். NH இல் பயணிக்கும் எல்லாரும் பசிக்கலைன்னாலும் இங்க சாப்பிடுவார்கள் போலும். தமிழ் நாட்டு டிபன் என்றதும் ஒரே குஷி. இட்லி, பூரி, பொங்கல், வடை, தோசை, காபி என்று பிடி பிடித்து விட்டோம். அங்கே குழநதைகள் விளையாட சறுக்கு, ஊஞ்சல் எல்லாம் வைத்து ஒரு play area, washroom வசதி என்று நல்ல ambience இருக்கிறது. சற்று ரிலாக்ஸ் ஆனதற்கு பிறகு, அங்கிருந்து கிளம்பும் போது மணி ஒன்பது.

ஓசூர்-கிருஷ்ணகிரி வழியில் அரளிப்பூ, ஆவாரம்பூ என்று கலர் கலராக வளர்த்து வைத்திருக்கிறார்கள். பார்ப்பதற்கு வெகு அழகாக இருந்தாலும், விஷச்செடியை இப்டி நடுரோட்டில் வைத்து இருக்கிறார்களே என்று நினைத்தேன், சமீபத்தில் ஒரு பத்திரிக்கையிலும் யாரோ இதே கவலையை வெளியிட்டு இருந்தார்கள். வழியில் சுங்கசாவடி என்று இரண்டு இடத்தில் வசூல். இன்னும் இரு இடங்களில் toll booth ரெடி ஆக வில்லை. construction நடந்து கொண்டு இருக்கிறது.
'ரோட்டுல போறதுக்கு கூடவா காசு குடுக்கணும்' என்று அங்கலாய்த்தார் என் மாமியார்.
இத்தனை booth லையும் குடுக்குற காசுக்கு ஒரு train ticket வாங்கிடலாம் போலும் - கணக்கு சொன்னார் மாமனார்.
'T R Baalu, செஞ்ச நல்ல காரியம் இந்த ரோடு தாம்பா, ஏதோ நம்ம ஸ்டேட் க்கு செஞ்சதை கொஞ்சம் வெளிலையும் செஞ்சிருந்தா நல்ல பேரு வாங்கிருக்கலாம்' - இது கதிர்.

லாரி மேல லாரி பாத்து இருக்கீங்களா? நான் பாத்தேன். ரெண்டு லாரி லோடு ஆடுகள். நெருக்கமா ஒண்ணு மேல ஒண்ணு இடிச்சுகிட்டு, நிக்குதுங்க.
'நீங்க மனுஷங்க போற ஜீப் படம் போட்டா, நான் ஆடு போற லாரி படம் போடுவேன்' ன்னு படம் காட்டுறதுக்காக ஒரு போட்டோ எடுத்தேன். படம் தெளிவா வரலை:-(
'இதை பாக்குறப்போ, சைவமா மாறிடணும் ன்னு தோணுது' ன்னு கதிர் சொல்றார்.
'உணவுப்பழக்கம் வேற உணர்வு வேற' என்று எங்கோ படித்தது ஞாபகம் வந்தாலும், அதை justify பண்ண தோன்றவில்லை. இதே மாதிரி, மாடு போற லாரி, எருமை மாடு (இதையும் சாப்பிடுவாங்களா?) போற லாரி என்று எல்லாம் பாத்தாச்சு அன்னைக்கு.

வெய்யில் ஏற ஏற முன் சீட்டில் இருந்த எனக்கு காட்சி பிழை. கானல் நீர் தெரிகிறது. சட்டென்று கானல் நீருக்கு ஆங்கில வார்த்தை மறந்து போச்சு. வழக்கமாக ஆங்கில சந்தேகங்கள் கேட்கும் இரண்டு,மூன்று நண்பர்களுக்கு sms அனுப்பினேன். சட்டென்று பதில் வந்தது. 'இது கூட தெரியாதா' என்று நினைக்கும் ஆங்கில புலவர்களும், ''அது என்ன வார்த்தை' என்று கூகிள் பண்ணுபவர்களும், பின்னூட்டத்தில் answer சொல்லுங்க.

சேலம், கரூர் வழியா திண்டுக்கல் சேரும் போது மதிய உணவுக்கான நேரம். Bypass ஹோட்டல்களில் சாப்பிட விருப்பமில்லை. அதனால் ஊருக்குள் போனோம். கொஞ்சம் நெருக்கடியான ஊர் தான். இது வரை நல்லா இருந்த ரோடு, திண்டுக்கல் - மதுரை வழியில் மட்டும் மோசம். ஒரு வழியாக மதுரையை சேர்ந்த போது 4:30.

அன்று மதுரையில் தங்கி செல்வதாக இருந்ததால் ஒரு lodge எடுத்து, குளித்து கிளம்பி மீனாக்ஷி அம்மனை பார்க்க போனோம். அன்று பிரதோஷமாக இருக்கவே, செம கூட்டம். வெளியில் பார்வதி யானை, படு அலங்காரமாய் போஸ் குடுக்கிறது. சின்மயி பதிவில் பார்வதியைப் பற்றி ஒரு முறை படித்து இருக்கிறேன். Affordable ஆக இருந்து இருந்தால் கண்டிப்பாக ஒரு யானை வளர்த்து இருக்கலாம். அவ்ளோ பிடிக்கும்.

சுந்தரேசர் சன்னதியில், நிற்க இடமில்லை. 'என்னதான் மதுரை என்றாலும் சுந்தரேசர் சன்னதியில் ஒரு fan கூடவா வைக்க கூடாது? எல்லா fan ஐயும் மீனாக்ஷி கிட்டயே போட்டிருக்கிறார்கள்' வேர்த்து கொட்டியபடி புலம்பியவர் உள்ளூராக தான் இருக்கவேண்டும். பெங்களூர் Bannerghatta ரோட்டில், ஒரு miniature மீனாக்ஷி அம்மன் கோவில் போய் இருக்கிறேன், ஆனால் மதுரை மீனாக்ஷியை பார்ப்பது முதல் முறை. பல நாள் ஆசை நிறைவேறியது. பொற்றாமரை குளத்தில், தாமரை மட்டும் தனியே நிற்கிறது. தண்ணீர் இல்லை.கேள்விப்பட்ட மாதிரியே நிறைய பேரு 'வடக்கு வாசல் எப்டி போகணும்?' 'தெற்கு வாசல் இதுவா?' என்று கேட்டபடி சுற்றி சுற்றி அலைந்து கொண்டு இருந்தார்கள். ஆயிரம் கால் மண்டபத்தில் கோவிலின் மாதிரி ஒன்று இருக்கிறது. நிறைய கால்(தூண்)களில் இருந்து சிலைகள் பெயர்ந்து, கீழே படுத்து இருக்கின்றன. அங்கு இருக்கும் நந்தியின் காதில், மக்கள் வரிசையில் நின்று வேண்டியதை சொல்கிறார்கள். ஒரு பெண்மணி ஒரு கையால் நந்தியின் ஒரு காதை மூடிக்கொண்டு, இன்னொரு காதில் ஏதோ சொன்னார். நந்தியும் வாய் மூடி எல்லாத்தையும் கேட்டு கொள்கிறது. மண்டபத்தை சுற்றி நிறைய கடைகள்.
'தாழம்பூ குங்குமம் கிடைக்கும்' என்று கடைக்கு கடை கூவுகிறார்கள். அப்டின்னா என்னன்னு
தெரியலை. நின்னு கேக்க நேரம் இல்லாம வந்துட்டேன். தெரிஞ்ச யாராவது சொல்லுங்க.

பிறகு முருகன் இட்லி சாப்பிட்டு , ஜிகிர்தண்டா குடிப்பதாக போட்டிருந்த திட்டம், அர்ஜுனுக்கு உடம்பு சரி இல்லாமல் போகவே, கைவிடப்பட்டு, கோவில் பக்கத்தில் இருந்த ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு ரூம்க்கு திரும்பிவிட்டோம்.

மறுநாள் காலை திருமலை நாயக்கர் மஹால். பாம்பே, குரு பாடல்களுக்கு பிறகு, கட்டாயம் இந்த இடத்தை பார்க்க வேண்டும் என்று தோன்றிக்கொண்டே இருந்தது. 'அர்ஜுனை அலைக்கழிக்க வேண்டாம், நாகர்கோவிலுக்கே போய் விடலாம்', என்று
சொன்ன கதிரிடம், 'மஹால் மட்டும் போய்விட்டு ஊருக்கு போகலாம்' என்று கெஞ்சி, சாதித்தேன். சும்மாவா மணிரத்னம் location செலக்ட் பண்ணுவார்? இந்த மஹால் அவ்வளவு அழகு. ஆனால் இப்போது புதுப்பிக்கும் வேலை நடந்து கொண்டு இருக்கிறது. 'எங்க government இருக்கும் வரை சுற்றுலாத்துறைக்கு நல்லது' என்று மாமனார் சொல்லிக்கொண்டார். 'இன்னும் ஆறு மாசம் கழிச்சு வாங்க சார், அதுக்குள்ள ஒலி ஒளி காட்சி எல்லாம் மறுபடி ரெடி ஆயிடும்' என்று ஒருவர் சொன்னார். வெளியில் வந்தால் ஒரு கடையில் ஜிகிர்தண்டா கிடைக்கும் என்று போர்டு போட்டு இருந்தது. வாங்கி குடித்தோம். மதுரை மக்களே, இதற்கா இவ்வளவு பில்டப்? குளிர்ந்த பாலில், ஷர்பத், பாதாம் பிசின் என்று ஒன்று (பாதாம் மரத்தில் இருந்து எடுப்பதாம், transparent ஆக கொழ கொழன்னு இருக்கு)கலந்து, ஏகத்துக்கு சக்கரை,ice போட்டு தருகிறார்கள். என்னால் குடிக்க முடியலை. மஹால் வாசலில் ஒரு பாட்டி, பாசி, ஊசி, மணி, மாலை எல்லாம் வைத்துக்கொண்டு கதிர் கிட்ட, 'நீ என் பேரன் மாதிரி, ஏதாவது போனி பண்ணிட்டு போ' என்று விடாபிடியாக படுத்த, கதிர் ரெண்டு மோதிரம் வாங்கி எனக்கு ஒண்ணு, மாமியார்க்கு ஒண்ணும் குடுத்தார். பின்னாளில், ஊரில் எல்லாரிடமும், அது எங்கள் குடும்ப மோதிரம் என்று பீற்றிக்கொண்டோம். இப்படியாக மதுரையை விட்டு கிளம்பியாச்சு.
ஆங், மறக்கலை, மதுரையில் பெண்கள் வெகு அழகு. நெற்றியில் அடர்ந்த நிறத்தில் குங்குமம், தலை நிறைய மல்லிப்பூ வைத்து, எந்த நேரமும் பளிச் என்று இருக்கிறார்கள்.

-தொடரும்.