Friday 7 November 2008

நிலா! நிலா!

சென்ற முறை அம்மா வீட்டுக்கு போனப்போ, ஒரு பழைய டைரி கெடைச்சுது.
நான் 12th படிக்குறப்போ, என்னோட competitions க்கு prepare பண்ற materials எல்லாம் எழுதி வெக்குற டைரி.
ஒரு on the spot கவிதை போட்டிக்கு எழுதின கவிதை(???).
சந்திராயன் பற்றி படிக்கும் போது இது தான் எனக்கு ஞாபகம் வந்துச்சு...
சின்ன புள்ள தனமா இருக்கு??? ன்னு யாரும் கேக்க கூடாது....சொல்லிட்டேன்.



நிலா
-------
வெள்ளி நிலவே....உன் விருப்பம் போல சிரிக்கிறாய்...
வான்வழி செல்லும் ராஜகுமாரியாய் விண்ணில் பவனி வருகிறாய்...

என்ன மந்திரம் செய்தாய் நீ?
எங்கள் வீட்டு பிள்ளை சோறுண்ண உன்னை கேட்கிறது...

மக்கள் தொகை பெருக்கத்தால்
எங்கள் பூமித்தாய் மட்டும் பாரம் தாங்காமல் நசுங்க...
நீர்,வளி இல்லாததால் நீ மட்டும் சுதந்திரமாய் !!!

ஆர்ம்ஸ்ட்ராங்கும் ஆல்ட்ரினும் தானா?
நாளை யாம் அனைவருமே உன்னில் குடியேறி
வெற்றி கொடிஏற்றத்தான் போகிறோம்....
காத்திரு கவின் நிலவே!
வளர்பிறையாய்!!!
பௌர்ணமியாய்!!!!!!
-------------------------------------------------------




No comments:

Post a Comment