பதில் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லுங்கள். இதை விட நல்ல கேள்விகள் இருந்தாலும் அனுப்புங்கள்.
கூகிள் பண்ண கூடாதுன்னு எந்த விதி முறையும் இல்லை:-)
பின்னூட்டங்கள் பிறகு பிரசுரிக்கப் படும்.
பரிசாக புத்தகம், CD ஏதும் அனுப்பி வைக்க மாட்டேன்.
1.அயன் படம் பாத்துட்டீங்களா? அட இது கேள்வி இல்லை.
"அயன்" அப்டின்னா உண்மையான அர்த்தம் என்ன? "சூர்யா" என்ற பதிலும், அந்த படத்தின் டைரக்டர் சொன்ன மாதிரி "பலம் பொருந்தியவன்" அப்டின்னு உதார் விடுற அர்த்தமும், தப்பு என்று இப்போவே சொல்லிக்கறேன்.
மகாபாரதம் படித்து/பார்த்து இருப்பீர்கள். அதில் இருந்து சில கேள்விகள்.
2.பீஷ்மரின் இயற்பெயர் என்ன? "முகேஷ்" என்ற பதில் செல்லாது.
3.ஊர்வசியின் சாபத்தால் அர்ஜுனன் பெண்தன்மையை அடைந்து விடுகிறான். அப்டியா என்று கேட்பவர்கள் அடுத்த கேள்விக்கு போய் விடலாம். அப்போ
அவன்(ள்), எந்த பெயரால் அழைக்க படுகிறான்(ள்)?
4.பாண்டுவின் இரண்டாவது மனைவி பெயர் என்ன? (நல்ல வேளை, இவராவது அண்ணன் மாதிரி ஆட்டம் போடாம , ரெண்டோட நிறுத்தினாரு)
5.கடோத்கஜனோட அப்பா பேர் எல்லாருக்கும் தெரியும் ன்னு நம்பறேன். அம்மா பேர் என்ன??
6.துரோணரின் மகன் பெயர் என்ன?இது ரொம்ப சுலபமான கேள்வி தான், ஆனாலும் ஒரு குட்டி க்ளூ. மகாபாரதத்தில் ஒரு யானைக்கும் அதே பெயர் உண்டு.
Tuesday 28 April 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment