Friday 1 May 2009

கொஞ்சம் தாமதமான நன்றி

கண்ணன் 'அபியும் நானும்' பற்றி என்ன நெனைக்குறீங்கன்னு கேட்டு நான் எழுதிக்குடுத்த நாலு வரிகள்.




அபியும் நானும் படம் பத்தி நான் எழுதினா, அது ரொம்ப biassed ஆக இருக்கும். காரணம் -



1.அப்பாக்கும் மகளுக்கும் உள்ள உறவை சொல்ற படம்.

2.ராதாமோகன்.

3.டூயட் மூவிஸ்.

4. த்ரிஷா.



ஆனா அந்த படத்த பத்தி நெனச்சதும் சட் ன்னு எனக்கு ஞாபகம் வந்த மூணு விஷயங்கள்.



1.'மூங்கிலை விட்டு பிரிந்த பிறகு பாட்டுக்கும் மூங்கிலுக்கும் என்ன உறவு' 'மகள் தனியறை புகுந்த போது ஒரு பிரிவிற்கு ஒத்திகை பார்த்தேன்' என்று தன்னால் மட்டும்தான் இப்டி எல்லாம் எழுத முடியும் என்று நிரூபித்து இருக்கும் கவிஞர் வைரமுத்துவின் வரிகளும், 'அம்மா பத்தின பாட்டுன்னா கே.ஜே. யேசுதாஸ் அவர்கள் உங்க எல்லார் ஞாபகத்துக்கும் வர்ற மாதிரி, பொண்ணு பத்தின பாட்டுன்னா என் ஞாபகம் வரணும்' ன்னு ஒரு முடிவோட அந்த பாட்டை பாடி இருக்குற மதுபாலகிருஷ்ணன் குரலும்.



2. "எனக்கு பிகினி மட்டும் தான் டிசைன் பண்ண தெரியும்னு நெனைக்காதீங்க, இப்டி அழகா அம்சமா டிரஸ் டிசைன் பண்ணுவேனாக்கும்" என்று (பில்லா புகழ்) அனு வர்தன், த்ரிஷாக்கு டிசைன் பண்ணி இருக்கும் costumes.



3. "Children grow up, Sometimes parents must too" என்ற பொருத்தமான caption.



அவருடைய 'விமர்சனத்தில்' லிங்க்கியிருந்தார். அன்றைக்கே நன்றி சொல்லணும்ன்னு நெனச்சு விட்டு போனது.

No comments:

Post a Comment