Wednesday 2 April 2008

நான் கதை கேட்ட கதை...

நான் சின்ன புள்ளயா இருக்கப்போ கொஞ்சம் தில்லாலங்கடி யா தான் இருந்து இருக்கேன். இது எங்க சித்தப்பா என்னிடம் பகிர்ந்து கொண்ட என் சிறு வயது நிகழ்வுகளில் ஒன்று.

எனக்கு ஒரு நாலு வயசு இருக்குமாம்.
அப்பல்லாம் எனக்கு கதை கேக்க ரொம்ப பிடிக்குமாம்.
எல்லா பிள்ளைங்களும் மாதிரி தான்.
எனக்கு சில நேரத்துல கதை சொல்றது எங்க சித்தப்பா.
எனக்கு கதையில கிளைமாக்ஸ் 'அப்புறமா எல்லாரும் சந்தோஷமா இருந்தாங்களாம்" அப்டி இருக்கணுமாம். அப்டி இல்லன்னா ரொம்ப சோகமா சமயத்துல அழுவ கூட ஆரம்பிச்சுடுவேனாம்.
இப்போ கூட எனக்கு anti-climax உள்ள படங்கள் பாத்தா கடுப்பா இருக்கும். என்னடா இப்டி முடிஞ்சுடுச்சே னு நெனைப்பேன்.

எங்க சித்தப்பா இத நோட் பண்ணிக்கிட்டே இருந்து இருக்காரு...அவருக்கு சின்ன புள்ளங்களை அழுவ வெக்குறதுன்னா ரொம்ப இஷ்டமாம்.
ஒரு நாளு அவருக்கு யாரும் கெடைக்காம, என்னைய வெச்சு காமெடி பண்லாம் னு
ஒரு மெகா பிளான் பண்ணி(??) , எனக்கு பாட்டி வடை சுட்ட கதை சொல்லி இருக்காரு.
அந்த கதை உங்க எல்லாருக்கும் தெரியும்ங்கரதுனால நான் நேரா மேட்டர் க்கு வரேன்.

climax ல "நரி வடைய தூக்கிட்டு போயிடுச்சாம். காக்கா ரொம்ப சோகமா இருந்துச்சாம்" அப்டின்னு சொல்லிட்டு என் மொகத்தையே பாத்துட்டு இருந்து இருக்காரு அவரு. நான் எந்த நேரமும் ராகத்தை ஆரம்பிச்சுடுவேன்..enjoy பண்லாம் னு நெனச்சுட்டே இருந்தாராம். பின்னாளில் இணைய ஏடுகளில் இடம் பெறப் போகும் இந்த நிகழ்வுக்கு( யப்பா... என்னா பில்ட் அப்பு...!!!) எங்க அப்பா, பாட்டி னு audience வேற...எல்லாரும் suspense ஓட என் மூஞ்ச பாத்துட்டே இருந்தாங்களாம்.
நான் என்ன பண்ணேன் தெரியுமா????
.
.
.
.
.
'அப்புறம் அந்த நரி சந்தோஷமா இருந்துச்சாம்' அப்டின்னு சொல்லிட்டு எந்திரிச்சு போயிட்டேனாம்.
அன்னிலேர்ந்து எங்க சித்தப்பா எனக்கு கதை சொல்றதையே விட்டாராம்.

No comments:

Post a Comment