Wednesday 29 October 2008

ஒரு ரெண்டு நாளைக்கு முன்னாடி BMTC பஸ் ல ஏறினேன். நான் எறங்க வேண்டியது just ரெண்டு stops தள்ளி. 5Rs டிக்கெட் cost. கண்டக்டர் கிட்ட அஞ்சு ரூபாவை நீட்டுனேன். அவரு டிக்கெட் குடுப்பாருன்னு எதிர் பாத்தா , ரெண்டு ரூபா மீதி குடுத்துட்டு பேசாம போய்ட்டாரு. 'ஒரு வேளை, சாதா பஸ், ஸ்பெஷல் பஸ் மாறி இருக்கும் போல....இந்த பஸ் ல மூணு ரூவா தான் டிக்கெட் போல' ன்னு நெனச்சுட்டு 'அவர் அவசரத்துல டிக்கெட் குடுக்காம போயிட்டாரோ என்னவோ, செக்கிங் ஏதும் வந்துற போறாங்க' ன்னு தவிப்பா இருந்தேன். நடுவுல ஒரு சிக்னல் ல கொஞ்சம் பேரு ஏறினாங்க. அவங்களுக்கு டிக்கெட் குடுக்க வந்தப்போ தான் கவனிச்சேன். யாருக்குமே அந்த ஆளு டிக்கெட் குடுக்கலை....என் stopping பேரு சொல்லி டிக்கெட் கேட்ட எல்லாருக்குமே, 2Rs மீதி குடுத்துட்டு போய்ட்டாரு.அப்போ தான் எனக்கு மேட்டர் வெளங்கிச்சு....அதாவது அந்த அஞ்சு ரூவாக்கு கணக்கு இல்ல......no ticket. 60-40 ன்னு அவரா ஒரு (அ)நியாய கணக்கு போட்டு மூணு ரூவா அவருக்கு, ரெண்டு ரூவா passenger க்கு பிரிச்சு குடுக்குறாரு. எனக்கு தாங்கலை...


BMTC பஸ் ல பயணம் செய்றது எதுக்கு சமம் ன்னு அதுல பிரயாணம் பண்ணவங்களுக்கு தான் தெரியும்.2002 செப்டம்பர் ல இருந்து 2004 மே வரைக்கும், BTM ல வாசம். ஆபீஸ் domlur ல...அப்போல்லாம் ஆட்டோ என்பது எனக்கு அவசரத்துக்கு மட்டும். அதோட, ரிங் ரோடு ல ஆட்டோ ல தனியா போகாதேன்னு நெறைய பேரு அட்வைஸ் பண்ண போக, கஷ்டமா இருந்தாலும் எப்போதும் BMTC யிலேயே போவது வழக்கம்,
201G,205,411,412 இந்த பஸ் ல எல்லாம் ரெண்டு வருஷம் travel பண்ணதுல BMTC conductors கிட்ட நெறைய கசப்பான அனுபவங்கள் எனக்கு உண்டு.....அதுனால அந்த கண்டக்டர் கிட்ட ஏதும் கேக்குறதுக்கும் திகிலா இருக்கு.....ஆனா அத அப்படியே விட்டுட்டு போறதுக்கும் மனசு இல்ல...அந்நியன் கிளைமாக்ஸ் ல சுஜாதா எழுதின மாறி, இப்படி டெய்லி அஞ்சு அஞ்சு ரூவாயா.....etc etc...government ஐ ஏமாத்தினா.....அப்டின்னு மனசுக்குள்ள குமுறிட்டேன். next ஸ்டாப் வந்துச்சு, அதுக்கு அடுத்த ஸ்டாப் ல நான் எறங்கனும். இந்த stop ல ஏறினவங்களுக்கு ticket குடுக்க அந்த ஆளு வந்தாரு. அவரு குடுத்த ரெண்டு ரூவாயை எடுத்து அவர்கிட்ட நீட்டி,"பேடா, நன்கே 5Rs ticket கொடி"ன்னு சொன்னேன். நான் கேட்பதாய் நெனச்சு மனசுக்குள்ளயே சொல்லிக்கிட்டேனா இல்ல அவருக்கு கேக்கலையா தெரியலை..... கேட்டதையே காதுல வாங்காத மாறி போயிட்டாரு....எனக்குள் இயலாமை பொங்கியது.....ஆனா உண்மையில் என்ன செய்வதென்று தெரியலை....எனக்கு இதற்கு முன் ஏற்பட்ட BMTC அனுபவங்கள் என்னை ஏதும் பேச விடவில்லை...பேசாமல் இறங்கி வந்துட்டேன். ஆனால் மனதில் இன்னும் லேசான வருத்தம் இருக்க தான் செய்கிறது.

டென்மார்க் போறதுக்கு முன்னாடி நான் கூட, fake medical bills எல்லாம் submit பண்ணிருக்கேன், tax exemption காக. ஆனா அங்க உள்ள system பார்த்துட்டு(அப்படி ஒரு trust..... government வந்து யாரையும் tax கட்டுங்கன்னு கேக்குறதில்ல...மக்கள் லாம் அவங்களே ஒழுங்கா கட்டுறாங்க... அதுனால தான் அவ்ளோ பணக்கார நாடா இருக்காங்க....) நானும் அவரும் முடிவு பண்ணோம், இனி எந்த காரணத்துக்காகவும் 'ஒரு சல்லி காசு ஏமாத்தக் கூடாதுன்னு'.

எங்க things லாம் சென்னை ல இருந்து பெங்களூர் move பண்றப்போ, packers and movers கேட்ட மொத கேள்வி, "பில் எவ்வளவு ரூபாய்க்கு வேணும்?"
"உள்ள amount க்கு குடுங்க, எக்ஸ்ட்ரா ஏதும் போட வேணாம்" ன்னு சொன்ன எங்களை "சரியான கேனையனா இருப்பாய்ங்க போலிருக்கு" ங்குற மாறி ஒரு பார்வை பார்த்தாங்க...

furnitures வாங்க போனா, "bill இல்லாம தரோம், அப்போ நீங்க VAT pay பண்ண வேணாம்...ஆனா guarantee க்கு எந்த problem ம இல்லாம பாத்துக்குறோம்" ன்னு சொல்லுறாங்க...
"வேணாம், VAT குடுத்தே வாங்கிக்கிறோம், bill போடுங்க" ன்னு சொன்னா எரிச்சலா பாக்குறாங்க.

எலக்ட்ரானிக்ஸ் கடைல ,"cash pay பண்ணுங்க, discount தரோம் " ன்னு சொல்லுறாங்க. "card ல pay பண்றோம், discount வேணாம்" ன்னு சொன்னா, "லூசாய்ய்யா நீ" ன்னு கேக்காம பாக்குறாங்க....

"எல்லாரும் tax கட்டிண்டு தான் இருக்கா, அவஸ்தை பட்டுண்டு தான் இருக்கா"
"எல்லாரும் செய்றதுனால தப்பு சரியா ஆயிடாது நந்தினி"

எனக்கு மிக மிக பிடித்த சுஜாதாவின் வசனம். அட்லீஸ்ட் நம்ம ஒழுங்கா இருக்கணும், மத்தவங்களை மாத்த முடியாட்டியும்.

1 comment:

  1. Who knows where to download XRumer 5.0 Palladium?
    Help, please. All recommend this program to effectively advertise on the Internet, this is the best program!

    ReplyDelete