Showing posts with label பொதுவானவை. Show all posts
Showing posts with label பொதுவானவை. Show all posts

Wednesday, 30 December 2009

அப்போ நம்ம உலக பொதுமறைன்னு சொல்றது எல்லாம்?

கன்னட சூப்பர் ஸ்டார் விஷ்ணுவர்தன் இன்று மாரடைப்பால் காலமானார்.

சற்று முன் என்னுடன் வேலை செய்கிற ஒரு பெண்ணும் நானும், அவளுடைய ஆக்டிவாவில் வெளியில் சென்று வந்தோம்.

ஒரு மெயின் ரோட்டில் ரெண்டு பைக்கில் கர்நாடக கொடியுடன் இருவர் ஏதோ கன்னடத்தில் சத்தமாக சொல்லிக்கொண்டே போக, பின்னால் ஒரு திறந்த வேனில், விஷ்ணுவர்த்தன் புகைப்படத்துக்கு மாலை சாற்றப்பட்டு பைக்கை தொடர்ந்து கொண்டு இருந்தது. அந்த தெருவின் கடைகாரர்கள் "பட பட" என்று ஷட்டர்களை இழுத்து விட்டார்கள். எங்களுக்கும் ஏதோ புரிந்தது. சட்டென்று வண்டியை திருப்பி ஆபீஸ் வந்துட்டோம்.

வந்து நேரா லஞ்ச் போனோம். விடுமுறை நாட்கள் என்பதால் வழக்கமான லஞ்ச் மேட்கள் leave. இருக்கிறவங்க எல்லாம் ஒண்ணா சேந்து தான் போய்கிட்டு இருக்கோம். ரெண்டு வடக்கு, ரெண்டு ஆந்திரா, ஒரு தமிழ்-இது நான் , ஒரு கன்னடா, ஒரு மலையாளி என்று ஒரு பாரத விலாசாக இருந்த லஞ்ச் டேபிள்.

நாங்கள் நடந்ததை சொல்லவும், ராஜ்குமார் மறைவின் போது, பெங்களூரில் நடந்த நிகழ்வுகளை நினைவில் கொணர்ந்து, பேச்சு எங்கெங்கோ சென்றது.ஒரு வடக்கர் தான் ஆரம்பித்தார்.

"இதென்ன ஒரு நடிகர், இயற்கையாக இறந்ததற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா?"

ஒரு தெலுங்கரை பார்த்து, "உங்க ஊரிலும் தான் ......ரை, கடவுளாக நினைக்கிறார்கள்".
தெலுங்கர் பதிலுக்கு, " ஏன், உங்க ஊர்ல இல்லையா? ..............னுக்கு உடம்பு முடியாமல் இருந்தப்போ பூஜை எல்லாம் பண்ணீங்க?"

அடுத்த வடக்கர்.

அவருக்கு டார்கெட் நான்.

"உங்க ஊருல ................... துக்கு, ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா, இப்டி தான் கலவரம் பண்வீங்களா?"

"ஒரு மனுஷ உயிர் ஜோக் பண்ற விஷயம் இல்லை"  இது என்னை அடுத்து அமர்ந்து இருந்த மலையாளி. கொஞ்சம் சீரியஸ் ஆயிட்டார்.

இப்படி நடிகர்களில் ஆரம்பித்த பேச்சு, அப்படியே தெலுங்கானா, காவேரியை எல்லாம் தொட்டு, நம்ம திருவள்ளுவரில் வந்து நின்றது.
" சமீபத்துல கூட ஒரு சிலை திறந்தாங்களே...எத்தனை பாதுகாப்பு எத்தனை போலீசு, ஆமா யார் அவர்?"


"யாரோ முனிவராம்" (some saint itseems)

கேட்டவர் தெலுங்கர். பதில் சொன்னவர் கன்னடர்.

இதுக்கு மேல என்னால முடியலை.

"முனிவரா? அவர் யார் தெரியுமா?" ன்னு ஆரம்பிச்சு மூச்சு வாங்க சொல்லி முடிச்சப்போ,

"ச்ச ச்ச 1330 இல்ல, நூத்து பதினஞ்சோ என்னவோ" (hey not 1330 man , some 115 )

(அட பாவி..எனக்கேவா?)....."இல்ல 1330 தான்"  லேசாக அழுகை வந்தது.

"சமீபத்துல நான் கன்னியாகுமரி டூர் போனேன். அங்க கூட அவரோட சிலை கட்டி இருக்காங்க, அதன் உயரம், அடிக்கணக்கில் வந்து அவர் எழுதின பாட்டுகளோட எண்ணிக்கை ன்னு தான் சொன்னாங்க..I am sure its not 1330 feet tall"

"Oh thats 133 feet tall. The 1330 couplets are arranged as 133 parts with 10 couplets each"

"Oh ok"

பதிவின் தலைப்பை ஒரு தரம் படிக்கவும்.

Sunday, 20 December 2009

நீங்கள் இடதா? வலதா?

உன்னை போல் ஒருவன் படத்தில் ஒரு வசனம் வரும். ஒரிஜினலில் இல்லாதது. கமல் காமன்மேனாக நடித்ததால் விளைந்தது.
மோஹன்லால் கமலிடம் சொல்வார்."நீ சொல்லலன்னா கூட உன்னை பற்றி நிறைய விஷயங்கள் எனக்கு தெரியும், .....உன் இடது கை பழக்கம் வரைக்கும்"
"oh எல்லாம் தெரியுமோ? உங்களுக்கு மகாத்மா காந்தி தெரியுமா?"
"அவர் பேரை சொல்ல கூட உனக்கு அருகதை இல்ல"
"ஏன் உங்களுக்கு இருக்கா? இல்ல எவனுக்கு இருக்கு? he was ambidextrous . unfortunately i am in that strand too.எனக்கு இடது வலது பேதம் கிடையாது. ஆனால் அது எழுதறப்போ மட்டும்”.

என்னவோ எனக்கு அந்த மொத்த வசனமும் மிகவும் பிடித்து போனது.

ambidextrous ன்னா என்ன? காந்தியையும் கமலையும் தவிர வேற யாரெல்லாம் ambidextrous?
ஏன் இடது? ஏன் வலது ? இப்படி எனக்குள் சில கேள்விகளை விதைத்த வசனம்.

ambidextrous என்பதற்கு "தன்னுடைய இரு கைகளையும் திறன்பட சம அளவில் உபயோகிக்கும்" என்று பொருள்.சமஸ்கிருதத்தில் 'சவ்யசச்சி' என்று சொல்லுகிறார்கள்.

புராண,இதிகாச காலங்களிலேயே இந்த ambidexterity புழக்கத்தில் இருந்து இருக்கிறது.

மன்மதன் ambidextrous தானாம். சிம்புவை சொல்லலை. என்ன தான் அவர் ரெண்டு கை விரல்களையும் சுற்றி சுற்றி பஞ்ச் டயலாக் பேசினாலும்....நான் சொல்வது காதல் கடவுள் மன்மதன். ரதியுடைய husband.

வால்மீகி ராமாயணத்தில் பாலகாண்டத்தில் விஸ்வாமித்திரர் ராம லக்ஷ்மனர்களுக்கு குமாரசம்பவம் சொல்லுவதாக இருக்கிறது.
தேவர்கள் தங்களுக்கு 'சூரனின் அட்டகாசத்தை ஒடுக்க தேவசேனாதிபதி வேண்டும்' என்று சிவனை வேண்டியதாகவும், அதன் பொருட்டு முருகன் அவதரித்ததாகவும் புராணம் கற்பிக்கும் போது முருகன் ambidextrous என்று சொல்கிறார். அழகில் மாரனையே(மன்மதன் தான் மாரன், 'நின்னையே ரதி என்று...' பாடலில் கூட, பாரதி சொல்வாரே, 'மாரன் அம்புகள் என்மீது மாறி மாறி....') மிஞ்சியதால் முருகனுக்கு 'கு'மாரன் என்ற பெயராம்.பின்னாளில் காளிதாசர் குமாரசம்பவம் எழுதிய போது, தலைப்பை ராமாயணத்தில் இருந்தே தேர்ந்து எடுத்ததாகவும் சொல்கிறார்கள்.

"ska.nda iti abruvan devaaH skannam garbha parisravaat |
kaartikeyam mahaabaahum kaakutstha jvalana upamam ||"
- சர்கம்-37,பாலகாண்டம்.வால்மீகி ராமாயணம்

"And gods called that boy, oh, Rama of Kakutstha, whose glow is like that of flaring fire and who is ambidextrous as 'Skanda' for he slid down from the secretions of a womb.

கம்ப ராமாயணத்தின் பால காண்டத்தில் குமாரசம்பவம் பற்றி இருக்கிறதா என்று தெரிய வில்லை. எனக்கு தெரிந்த வரையில் இல்லை. கேட்டால் சிலர் கம்பர் செய்தது ரீமேக்.மொழி பெயர்ப்பு அல்ல என்று சப்பை கட்டுகிறார்கள்.

Ambidexterity ஆரண்யகாண்டத்தையும் விடவில்லை. ஆரண்ய காண்டத்தில் அகஸ்திய முனிவரை சந்திக்கும் ராமனுக்கு, அகஸ்தியர் எடுக்க எடுக்க குறையாத இரு அம்புக்கூடைகளையும்(Quiver), ஒரு வில்லையும், ஒரு வாளையும் தருகிறார். "அந்த வில் விஸ்வகர்மாவால் டிசைன் செய்யப்பட்டது. 'Quivers full of arrows' பிரம்மனால மகாவிஷ்ணுவுக்கு பரிசாக அளிக்கப்பட்டவை. அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் நடந்த கடுமையானபோரில், இந்த அம்பின் மூலமே மகாவிஷ்ணு அசுரர்களை அழித்து தேவர்களை காத்தார். 'அந்த வாள் இந்திரன் மூலம் என்னிடம் சேர்க்க பட்டது,இவற்றை எல்லாம் ராமனிடம் சேர்க்கவே காத்திருப்பதாக" சொல்கிறார் அகத்தியர். இந்த தெய்வாம்சம் பொருந்திய ஆயுதங்களை உபயோக்கிப்பவன், சவ்யசச்சியாக இருக்க வேண்டுமாம்.கிரேதா யுகத்தில் ராமன் சவ்யசச்சியாக இருந்து இருக்கிறான்.

இந்த ஆயுதங்கள் பற்றிய குறிப்பு கம்பராமாயணத்தில் இருந்து.

இப் புவனம் முற்றும் ஒரு தட்டினிடை இட்டால்
ஒப்பு வரவிற்று என உரைப்ப அரிய வாளும்,
வெப்பு உருவு பெற்ற அரன் மேரு வரை வில்லாய்
முப்புரம் எரித்த தனி மொய்க் கணையும், நல்கா.
- அகத்திய படலம், ஆரண்ய காண்டம், கம்ப ராமாயணம்.

இந்த சவ்யசச்சி அந்தஸ்து பின் துவாரபா யுகத்தில் அர்ஜுனனுக்கு கிடைத்து இருக்கிறது. தன்னுடைய இரு கைகளாலுமே அம்பெய்துவதில் தேர்ந்தவனாக இருந்து இருக்கிறான் அர்ஜுனன்.


புராணத்தில் வில்வித்தை காட்டின அர்ஜுனன் மாத்திரம் ambidextrous இல்லை. கிரிக்கெட் பேட்டை வைத்து வித்தை காட்டுகிறாரே சச்சின்,அவரும் ambidextrous தான். கிரிக்கெட் பேட்டை வலது கையால் பிடித்து விளாசும் இவர், ஆட்டோகிராப் போடுவது இடக்கையாலாம்.'கலியுக அர்ஜுனன்' ?

ambidextrous பற்றி சற்று தெளிந்தது, அதென்ன இடது வலது?

இடது வலது என்ற வார்த்தைகளை நம் அன்றாட வாழ்க்கையில் அடிக்கடி உபயோக்கிறோம்.

Football முதலான விளையாட்டுகளில் left wing என்று இருக்கிறது. ஆரம்ப காலத்தில், வலது காலால் பந்தை விளையாடுபவர்கள் வலது விங்கிலும், இடது காலால் பந்தை உதைப்பவர்கள் இடது விங்கிலுமாக position செய்ய படுவார்களாம்.
அட மனிதர்களை விடுவோம், மரத்திலும் கூட இடது சார்ந்த மரங்கள் இருக்கிறது தெரியுமா? binary மரத்தில்.


Leftist tree என்கிறார்கள். பைனரி ட்ரீயில் s - வேல்யு என்று ஒரு விஷயம் உண்டு. எந்த ஒரு node க்கும் s - வேல்யு உண்டு. அந்த node இலிருந்து, leaf வரைக்குமான தூரம்.அதில் ஒரு கண்டிஷன் கூட உண்டு. வலது node களின், S வேல்யு இடதை விட குறைவாக இருக்கும் பட்சத்தில் அந்த tree, leftist tree என்று சொல்ல படுகிறது. குழப்பமாக இருக்கும் என்று நினைக்கிறேன் :-)

ஈசியா புரியணும்னா இப்படி அர்த்தம் பண்ணிக்கொள்ளலாம், binary tree யின், வலது subtree, இடத்தை விட குள்ளமாக இருப்பின், அது leftist tree .As simple as that .

அரசியலில் இடது சார்ந்த கட்சிகள் யார் (எல்லாம்), என்று நமக்கு தெரியும். ஆனால் அவர்களுக்கு ஏன் இடது என்று பெயர் வந்தது என்று தெரியுமா? பிரெஞ்சு புரட்சிக்கு பிறகு, பாராளுமன்றத்தில், "எல்லாருக்கும் எல்லாமும்" என்ற 'equal rights'
கொள்கை உடையவர்கள் பாராளுமன்றத்தின் இடது புறமாக அமர்ந்ததில் இந்த பெயர் ஏற்பட்டது என்று வரலாறு இருந்தாலும் ஒரு வேடிக்கை கதை கூட சொல்கிறார்கள்.

இங்கிலாந்து நாட்டில் ஒரு ராஜா ஆட்சி செய்து வந்தாராம் அரசருக்கு இரண்டு கைப்பக்கமும் சேனாதிபதி, மந்திரிகள், பிரபுக்கள், ரிஷிகள் முதலாளிமார்கள் எல்லாம் உட்கார்ந்திருப்பார்கள். இந்த சபையில் உழைப்பாளிகள் மற்றும் விவசாயிகளுக்கு இடமில்லை. இந்த நிலையில் அரசியல் உரிமை, நல்ல வாழ்வு வேண்டுமென பெரிய கலகம் வெடித்து ராஜா அரண்மனையை விட்டு வெளியே வரவே வழியில்லை. சரி தொழிலாளிகளும் அரசவையில் பங்கேற்கலாம் என்று உத்தரவிட்டார். உடனே பிரபுக்கள் "ராஜா ராஜா ஒரு சின்ன விண்ணப்பம் நாங்களெல்லாம் சேற்றிலே உழன்று வீச்சமெடுத்த பஞ்ச பராரிகளுடன் எப்படி உட்காரமுடியும்? என்றார்கள் உடனே ராஜா நீங்களெல்லாம் எனக்கு வலதுகைப்பக்கம் அமருங்கள், தொழிலாளிகள் அப்படியே எனது பீச்சாங்கை பக்கமாக இருந்துவிட்டுப்போகட்டும் என்று உத்தரவிட்டாராம்.

இந்த கதை உண்மையிலேயே நடந்ததா என்று தெரியவில்லை.
அது கிடக்கட்டும். பின்னூட்டத்தில் சொல்லுங்கள், நீங்கள் இடதா? வலதா?
அட, நான் கூட காமன் (வு)மென் தான். எழுதுறத பத்தி மட்டும் தான் கேட்கிறேன்.

Friday, 6 November 2009

Alice(s) in wonderland

இன்று காலை கடவுள்களின் பள்ளத்தாக்கு (திரு.தேசிகன் தொகுத்து முன்னுரை எழுதியது) சுஜாதா கட்டுரை தொகுப்பை எடுத்து, கண்ணை மூடிக்கொண்டு ஒரு பக்கம் திறந்தேன். "பெண்களும் நானும்".

பெண் எழுத்தாளர்களுக்கு அறிவுரை, தன்னுடைய அலுவலகத்தில் உடன் வேலை பார்த்த பெண்கள், தன் பாட்டி (இந்த பாட்டி கட்டுரை ஏற்கனவே வேறு எங்கோ படித்த ஞாபகம்) என்று கட்டுரையில் சுவாரஸ்யத்துக்கு குறைவில்லை.

பெண்களிடம் வேலை வாங்க மூன்று விதி முறைகள் இருக்கிறதாம். அவருடைய அனுபவத்தில் சொல்கிறார்.

-பெண் என்பதால் இந்த வேலை வராது என்று முடிவு பண்ண கூடாது.
-பெண்களிடம் உள்ள இயற்கை கோளாறுகளை புரிந்து கொள்ள வேண்டும்.
-பெண்களுக்கு லாஜிக் வராது, எதையும் உணர்வு பூர்வமாக தான் பார்ப்பார்கள். ஈஸ்ட்ரோஜென், ஆண்ட்ரோஜென் பிரச்சனை இது.

முதல் பாயிண்ட் படித்த போது ஒரு சபாஷ் போட்டது மனது.

இரண்டாவதை படித்த போது,(அவர் எந்த இயற்கை கோளாறை :-) சொன்னாரோ)எனக்கு இந்த பதிவை எழுத தோன்றியது.

வேலைக்கு போகும் பெண்களுக்கு என்னுடைய சொந்த/'உடன் பணிபுரிவோரை கவனித்த' அனுபவத்தில் சொல்ல விரும்பும் சில விஷயங்கள்:

- நம் மேலாளரிடமோ,உடன் பணிபுரிவோரிடமோ 'நாம் பெண்' என்ற காரணத்தை வைத்து எந்த சலுகைகளையும் எதிர்பார்க்காதீர்கள். இது நமது குடும்பம் அல்ல. இங்கு நாம் செய்யும் வேலைக்கு மட்டும் தான் சம்பளமே தவிர, நமது உடல்,மன பிரச்சனைகளுக்கு சேர்த்து அல்ல.அப்படி எதிர் பார்த்தோமே ஆனால்,அது நம்மை நாமே தாழ்த்தி கொள்ளுவதற்கு சமம்.

- குழந்தை பெறுவது, மாதா மாத சமாச்சாரங்கள் எல்லாம் நமது anatomy. கடவுள் design பண்ணது. இதெல்லாம் மொத்தமாக சேர்த்து தான் நாம். "இதனால் எல்லாம் என் வேலை பார்க்கும் திறன் குறைகிறது, career growth தடை படுகிறது, ஒரு ஆணுக்கு இந்த பிரச்சனைகள் இல்லை" என்று புலம்பாதீர்கள். மொத்தத்தில் "எனக்கு அங்க வலிக்குது இங்க வலிக்குது" விஷயங்களை எல்லாம் அலுவலகத்துக்கு கிளம்பும் போது செருப்பை மாட்டுவோமே,அப்போதே கழற்றி வைத்து விடுங்கள்.

- அலுவலக மீட்டிங் போது, ஆறரை அடி உயரத்தில் கடுகடு முகத்தோடும்/குரலோடும் ஒருத்தன், வேணும்னே வேணும்னே நம்மள outsmart பண்ணவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு கேள்வி கேக்கும் போது கொஞ்சம் உதற தான் செய்யும். பயப்படாதீர்கள். அதற்கு முதல் தேவையாக technical skillsஐ வளர்த்து கொள்ளுங்கள். எந்த அளவுக்கு அறிவாளியாக இருக்கிறோமோ, அந்த அளவுக்கு தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். எந்த கொம்பனையும் சமாளித்து விடலாம்.சில மாதங்களுக்கு முன் ஒரு பெண் மேலாளருக்கு கீழே வேலை பார்த்தேன். அவங்க சொல்வாங்க,
"If one has to run 100 meters to prove that one can run, a woman has to run 200 meters to prove that she can run".

- "நான் ஒரு பெண்" என்ற consciousnessஐ துடைத்து எறிந்து விடுங்கள்.இந்த நினைப்பு நம்மை பலவீனமாக ஆக்கி விடும்."வெகு உயரத்திற்கு சரசர வென்று போய் விட்ட பெண்களை, வேறு எந்த விதத்திலும் விமர்சிக்க வழி இல்லாத நிலையில்,அவர்களது பர்சனல் விஷயங்கள் படு மலிவாக விமர்சிக்க படலாம்.துளியும் கண்டு கொள்ளாதீர்கள்."ஐயோ நான் ஒரு பொண்ணாச்சே...இப்டில்லாம் பேசறாங்களே" என்று எந்த நிமிடத்தில் concsious ஆகிறீர்களோ, அப்போதே தோற்க ஆரம்பித்து விடுகிறீர்கள்.

-கட்டுரையில் கவர்ந்த இன்னொரு வரி, பெண்களுக்கு 'சுலபக்கோபமும்' ,அழுகையும் வரும். அலுவலகத்தை பொறுத்த வரை சில நேரங்களில் 'சுலபக்கோபம்'நம்மள காப்பாத்தும். ஆனா தப்பு நம்ம மேல இருந்தா, தைர்யமா ஒத்துக்கிட்டு மன்னிப்பு கேட்டுடுங்க. தேவை இல்லாத இடத்தில் செய்யப்படும் விவாதம், கேலிக்குரியதாகி விடும். ஆனா எந்த காரணத்துக்கும் அலுவலகத்தில் அழாதீர்கள். (எங்கயுமே அழாம இருப்பது ரொம்ப நல்லது. ஆனா அது நமக்கு சற்று கஷ்டம் தான்)

-பேறு கால விடுப்பிற்கு பிறகு வேலைக்கு சேர்ந்த முதல் சில மாதங்களுக்கு நம் மனதில் புயல், மழை, சூறாவளி எல்லாம் சேர்ந்து சுற்றி சுழற்றி அடிக்கும். 'வேலைக்கு கண்டிப்பா போகணுமா?' 'குழந்தை சாப்பிட்டுச்சோ இல்லையோ','அம்மாவை தேடுதோ', இந்த மாதிரி மன உளைச்சல் மட்டும் இன்றி, நிறைய உடல் உபாதைகளும் கூட சேர்ந்து பாடாய் படுத்தும். இந்த நேரத்தில் நாம் கடை பிடிக்க வேண்டியது பொறுமை பொறுமை மற்றும் பொறுமை. 'வேலைய விட்டு விட வேண்டும்'என்ற முடிவை இந்த நேரத்தில் தப்பி தவறி கூட எடுத்து விட வேண்டாம். நம் உடல்நிலை, வாழ்க்கை முறை எல்லாமாய் மாறி விட்டதால் ஏற்படும் அயர்ச்சி தான் இது. சில மாதங்களை பொறுமையாக கழித்து விட்டோம் என்றால், அப்புறம் ஒரு தெளிவும் நிதானமும் வந்து விடும். அதுக்கு பிறகும் வேலைய விட தோன்றினால் அது சரியான மனநிலையில் எடுக்கும் முடிவு.

-குடும்பம், குழந்தை என்று ஆன பிறகு , வேலையில் கவனம் செலுத்துவது சவாலான விஷயம். நீங்கள் எவ்வளவு "ambitious " என்பதை பொறுத்து உங்கள் சாய்ஸ் தெரிவு செய்யுங்கள். தெரிவு செய்த சாய்ஸில் தெளிவாக இருங்கள். சில பெண்களுக்கு குடும்பம் வேலை என்று இரண்டையும் சமாளிக்கும் சாமர்த்தியம்/அதிர்ஷ்டம் இருக்கலாம். முடிந்தவரை அந்த சாமர்த்தியத்தை கற்றுக்கொள்ள முயலுங்கள்.முடியாது போனால்,அதற்காக குமையாதீர்கள். ஆனால், நாம் அலுவலகத்தில் எவ்வளவு effort போடுகிறோமோ அதை பொறுத்து தான் உங்கள் உயர்வு நிர்ணயிக்க படும் என்பதில் தெளிவாக இருங்கள். இங்கு எல்லாமே Tit for Tat தான். "I am ambitious"," I am capable" முதலான qualitative விஷயங்கள் மட்டும் வேலைக்கு ஆகாது. செயலில் காண்பிக்க வேண்டும். நமது பர்சனல் காரணங்களினால், ரிசல்ட் காண்பிக்க முடியாது போனால், அதற்கான பலனை எதிர்கொள்ளும் பக்குவமும் வேண்டும். மற்றவர்களோடு ஒப்பிட்டு மூக்கை சிந்த கூடாது.Try to take things easy. Job is just something that brings food to our plate.

-மூன்றாவது பாயிண்ட் (பெண்களுக்கு லாஜிக் வராது, எதையும் உணர்வு பூர்வமாக தான் பார்ப்பார்கள். ஈஸ்ட்ரோஜென், ஆண்ட்ரோஜென் பிரச்சனை இது) படித்த போது, சற்று sarcastic புன்னகை வந்தது. லாஜிக் நல்லாவே வர்ற பெண்களும் இருக்கிறார்கள். உணர்வு பூர்வமாக மட்டுமே பார்க்க தெரிந்த ஆண்களும் இருக்கிறார்கள். பெண்களை கிண்டல் பண்ணி கொண்டே டிவி சீரியல் பார்க்கும் ஆண்களை போலவே.

To all the working women, We all are Alice(s)!There will ofcourse be 'rabit holes', 'drinks that would shrink you', cakes that would grow you', 'riddles with no answers', 'caterpillars', 'dodos', 'King', 'Queen' and many more. Lets Rock it. After all, we are in WONDERLAND you see :-)

Friday, 16 October 2009

Greetings!!!

தீபாவளி நல்வாழ்த்துக்கள்!


சத்தியமாக சற்று முன் நானே செய்த ரசமலாய்.






ரசமலாய் இங்கிருந்து ரெசிப்பி
பார்த்து செய்தது.

நான் ரசமலாய் செய்ய போகிறேன் என்று சொன்னதும் "ஐயோ பாவம் உங்க வீட்டுல எல்லாரும்' என்று வெகுவாக கவலைப்பட்ட சிலருக்காகவும், "எதற்கும் செய்து முடித்த பிறகு ஸ்வீட்க்கு பெயர் வை" என்று மேதாவி ஐடியா கொடுத்தவர்களுக்காவும் இந்த படத்தை உடனே அச்சேற்றி விட்டேன். நானே சற்று பயத்துடன் தான் ஆரம்பித்தேன். ஆனாலும் "சரியாக வரலைன்னா எல்லாத்தையும் ஒண்ணா போட்டு கிண்டி, 'பாசுந்தி' என்று பரிமாறி விடு" என்ற என் தம்பி கொடுத்த தைரியம் கை கொடுத்தது.
வீட்டில் சாப்பிட்டு பார்த்து 'சூப்பர்' என்று சர்டிபிகேட் கிடைத்ததும் விட்டது.

ஒரு கொசுறு தகவல்: நரகாசுரனை வதம் செய்ததை தான் தமிழ் நாட்டில் தீபாவளியாக கொண்டாடுகிறோம். கர்நாடகாவில், மகாபலி பூமியில் மக்களை சந்திக்க வரும் நாளாகவும்(கேரளாவில் மகாபலியின் வருகை ஓணம் பண்டிகையாக கொண்டாட படுகிறது), வட இந்தியாவில் ராமர் அஞ்ஞான வாசம் முடிந்து நாடு திரும்பிய நாளாகவும் தீபாவளியை கொண்டாடுவதாக இன்று தான் அறிந்து கொண்டேன்.
With that, Wishing each of you a very happy, colourful, sweet and safe Deepavali. God Bless.



Saturday, 4 July 2009

The Grand(slam) Finale !

கேட்டது கிடைக்குமா?

அவசர அவசரமா அய்யன்னாருக்கும், சின்ன கருப்பருக்கும் reminder அனுப்பிட்டேன்.

Wishing Federar Super Good Luck.

Friday, 3 April 2009

பாரதிதாசனாரை தலைப்பில் வைத்து கொண்டு இப்டி புலம்பி இருப்பது பெண்ணீய துரோகம் என்று பெண்ணீயவாதிகளிடம் இருந்து என்று கடும் எதிர்ப்பு கிளம்பியதால், முந்தைய பதிவு நீக்க பட்டது.(ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கொசு தொல்லை தாங்க முடியலைப்பா!!!)
படிக்காதவர்கள் பிழைத்தீர்கள்.
:-)

Tuesday, 24 March 2009

'This too shall pass?

நீங்க என்ன சூப்பர் ஸ்டாரா?? இவ்ளோ கேப் விடறீங்க? - ச.ந.கண்ணன்.

அடுத்த பதிவாவது சினிமா, டிவி, சொந்தக்கதைன்னு இல்லாம ஏதாவது உருப்படியா எழுத பாரு. இல்லன்னா தொலைச்சுடுவேன். - சுபா (எனக்கு வேற ஏதும் எழுத தெரியாது டீ)

என்ன பதிவு எழுதுறத நிறுத்திட்டியா? ? திருந்திட்டே போலிருக்கு - இத சொன்னது யாருன்னு நான் சொல்ல வேண்டியது இல்லை.




மெயிலில் நலம் விசாரித்த எல்லா நண்பர்களுக்கும் நன்றி. இணையத்தின் மீது என்னவோ ஒரு boredom கொஞ்ச நாளா...காரணம் தெரியலை. எது எப்படியானாலும் விடாமல் படித்து விடும் சில முக்கியமான பக்கங்களை கூட எட்டி பாக்கலை. பார்க்க வேண்டும் என்ற "urge" கூட ஏற்படாதது எனக்கே ஆச்சர்யம். வாசிப்பே இந்த லட்சணம்னா எழுதுறத பத்தி சொல்லணுமா?

இடைப்பட்ட இந்த நாட்களில் பெரிதாக ஒண்ணும் நடக்கலை. ஒரு மூணு நாள் அம்மா வீட்டுக்கு போயிட்டு வந்தத தவிர. வந்ததும் வைரல் infection இல் குடும்பமே படுத்து எழுந்தோம். முதலில் படுத்தது அவர். கடைசியில் எழுந்தது நான்.

'சிவா மனசுல சக்தி' பாத்தோம். என் மனசுல ஏதும் நிக்கலை.

"ஸ்ரீரங்கத்து கதைகள்" தொகுப்பு, காலை நேர டிராபிக் சிக்னல்களை இனிமையான நிமிடங்களாக மாற்றி கொண்டு இருக்கிறது.

இதுவும் கடந்து போகும் என்று சொல்லுவார்கள். ஆங்கிலத்தில் "This too shall pass" .
இணையத்தின் மீது எனக்கு இருந்த மயக்கம் கடந்து விட்டதா, அல்லது இப்போது ஏற்பட்டு இருக்கும் இந்த அலுப்பு கடந்து போகுமா, என்று தெரிய வில்லை. We shall see.

நீங்க எல்லாம் நல்லா இருப்பீங்கன்னு நம்பறேன். God Bless.

Thursday, 26 February 2009

நான் தனியாள் இல்ல!!!

"அப்டி blog எழுதி நீ என்னத்தை கிழிச்ச்ச்ச? அதுல செலவு பண்ற நேரத்துல இன்னும் கொஞ்சம் standards படிச்சுருந்தாலோ, இன்னொரு scripting language கத்துட்டு இருந்தாலோ, இல்ல அட்லீஸ்ட் MS.Office applications ல எத்தனை மாயாஜாலம் பண்லாம்?? அதெல்லாம் தெரிஞ்சு வெச்சுருந்தாலோ, வேலைக்கு உதவியா இருந்து இருக்கும்"


"வாழ்க்கைல பண்ற எல்லாம் விஷயங்களும் materialistic ஆக, measurable output குடுக்குறதா தான் இருக்கணுமா? நமக்கு பிடிச்ச, நமக்கு satisfaction தர்ற , விஷயங்கள், அது மத்தவங்கள தொந்தரவு பண்ணாத வரைக்கும், பண்றதுல என்ன தப்பு இருக்கு?அப்டியே measurable output தான் வேணும்னா கூட, இங்க வந்ததுல நான் எவ்ளோ நண்பர்களை சம்பாதிச்சுருக்கேன் தெரியுமா?"


"எங்க அவங்கள பத்தில்லாம் சொல்லு பாக்கலாம்"




ஜெயஸ்ரீ
ஏகலைவனுக்கு துரோணர் மாதிரி எனக்கு ஜெயஸ்ரீ. (அதுக்காக டைப் பண்ற வெரலை எல்லாம் வெட்டி அனுப்புன்னு சொல்லிடாதீங்க J!)அதிகமா பேசி பழகிக்காமலேயே இவங்க பதிவுகளை படித்தே, எழுத கத்துக்கிட்டேன்.
இவங்களுடைய 'மீண்டும் ஒரு காதல் கதை'யை படிச்சு, "இப்டில்லாம் கூட எழுத முடியுமா?' என்று மருகி, உருகி இருக்கிறேன்.ஒவ்வொரு முறை அந்த கதையை படிக்கும் போதும்(ஆச்சு இதோட ஒரு முப்பது முப்பத்தஞ்சு முறை), முதல் தடவை படித்த போது கிடைத்த அதே சந்தோஷமும் நிறைவும் கிடைக்கும். நம்மளும் தமிழ்ல எழுதணும் ன்னு எனக்குள்ள ஒரு சின்ன ஆர்வம் துளிர் விட்டுச்சுன்னா அதுக்கு முழுக்க முழுக்க இவங்க தான் காரணம்.முதல் தமிழ் பதிவா அர்ஜுன் பதிவை எழுதி இவங்களுக்கு (இவங்க பதிவிலேயே பின்னூட்டமாய்) அனுப்பிட்டு, "Ultra sound scan result' க்கு காத்திருந்த அதே தவிப்புடன் காத்திருந்தேன். ஒரு smiley யும், "ஆங்கில வார்த்தைகளை குறைத்து கொள்ளுங்கள் " என்ற கருத்தும் மறுமொழியாய் வந்தது. இவங்களுக்கு தனிமடல் அனுப்பிட்டு , பதில் வருமா வருமா என்று நொடிக்கொரு தடவை inbox ஐ refresh பண்ணி பாத்துட்டு இருப்பேன். முதல் மடலுக்கு மூணு நாள் கழிச்சு பதில் வந்தப்போ, "you made my day" ன்னு கத்தணும் போல இருந்துச்சு. யாருக்காவது ரசிகையா இருக்கதுன்னா இது தானா??? ன்னு நெனைச்சுக்கிட்டேன். எனக்கு வரும் தனிமடல்களுக்கு எல்லாம் நான் உடனுக்கு உடன் பதில் எழுதுவதற்கு அன்னைக்கு இவங்க கிட்ட இருந்து எனக்கு பதில் வந்தப்போ நான் அடைஞ்ச சந்தோஷம் தான் காரணம். கொஞ்ச நாள் தாளிக்காமல் இருந்து விட்டு சமீபத்தில் திரும்பி வந்து, எங்கள் வயிற்றில் எல்லாம் பதிவு வார்த்து இருக்கிறார்கள். எனக்கு இட்லிவடை தான் இவர்களை அறிமுகம் செய்து வெச்சது. அதுனால IV க்கு கடமை பட்டுருக்கேன்.:-)சமீபத்தில் "உங்கள் நான் கடவுள் விமர்சனம் படித்து மகிழ்ந்தேன். உங்கள் தமிழில் நல்ல வளர்ச்சி" என்று இவரிடம் இருந்து வந்த மடலை பார்த்து ரஹ்மானுக்கு ஆஸ்கார் அறிவித்த போது துள்ளியதை விட கொஞ்சம் அதிகமாகவே துள்ளியது மனது. பின்ன ?? சும்மாவா??சமீபத்தில் இவங்க "விகடன் வரவேற்பறை" ல வந்தப்போ, "Better late than never" என்று தான் தோன்றியது. She deserves it.



தேசிகன்
ஜெயஸ்ரீயின் பதிவுகளில் அடிக்கடி இவருடைய பெயர் தென்படும். அதனாலேயே இவரை ஏற்கனவே தெரிந்த மாறி உணர்வு, இருந்தாலும் இவரை பற்றி ரொம்ப curious ஆக்கியது இந்த பதிவு தான். ஒரு நாள் ஒரு வேலையாக ஆபீஸ் mail-room க்கு போய், அன்றைக்கு வந்து இருந்த தபால்களில் எனக்கு வர வேண்டியது வந்து இருக்கிறதா என்று பார்த்து கொண்டிருந்த போது, post from NHM to N.Desikan. NHM கிழக்கு மக்கள் ஆச்சே...அப்போ இவர் அந்த தேசிகனா இருக்குமோ என்று மண்டைக்குள் லைட் எரிந்தது. வந்து அவசரமா அவருடைய contact details தேடி, IM ல ping பண்ணி, நீங்க தானா அவர் என்று உறுதி செய்து கொண்டு, "ஓ, நீங்க ஏழாவது மாடியா? நான் மூணாவது..." என்று சந்தித்தும் ஆகி விட்டது. அது வரைக்கும் அவர் ஒரு பதிவர் என்று மட்டுமே நினைத்து கொண்டு இருந்த எனது அறியாமைக்கு , அவரை சந்தித்த பிறகு தான், "He is much more than just a blogger" என்று தெரிந்தது.ஆனால் மனிதர் மிக மிக எளிமை. அவருடைய படைப்புகளை பற்றின பெருமையோ, "சுஜாதா' அவர்களுடன் ,அவர் பகிர்ந்து கொண்ட நெருக்கமான நட்பை குறித்த கர்வமோ துளியும் இல்லை அவரிடம்.

"நீங்களும் பதிவு எழுதுகிறீர்களா? " என்று கேட்டு பதிவு முகவரி வாங்கி கொண்டார். சற்று தயக்கத்துடன் தான் கொடுத்தேன். ஆனாலும் இவர் எங்கே இதை எல்லாம் படிக்க போகிறார், ஒரு courtesy க்காக கேட்டு இருப்பார் என்று தான் நினைத்தேன். ஆனால் என்னுடைய ஒவ்வொரு பதிவையும் படித்து அதை விமர்சித்து குறை நிறைகளை சுட்டி காட்டும் போது உண்மையிலேயே "அட" என்று இருக்கும் Three in one க்கு "Its interesting for a casual reading, but something is missing" என்று சொன்னவர், "கருவாச்சிக்கு" "Not bad" என்றும், கோயில் கொஞ்சம் பதிவுக்கு "one of the good posts, well written with with subtle humour" என்று சொல்லவும்... ஹையா நான் வளர்கிறேனே மம்மி!!!


"5 seater sofa வில் என் மாமியார், அவருடைய ரெண்டு அக்கா, அண்ணன், அண்ணி எல்லாரும் சீரியல் பாக்க இடம் பிடித்து விட, என் மாமனார் Nilkama chair ஐ எடுத்து போட்டு உக்காந்து ஜோதியில் ஐக்கியம் ஆனார். மேகலாவில் இருந்து, சிவசக்தி வரை அசராமல் ரசித்து பார்க்கிறார்கள்" என்று கோயில் கொஞ்சம் பதிவில் நான் எழுதிய வரிகளை 'I am tempted to rewrite this' என்று சொல்லி, "எங்கள் வீட்டு சோபாவில் அன்று தான் மாமியார் உட்பட ஐந்து பேர் சேர்ந்து உட்காரலாம் என்று கண்டுபிடிச்சோம்.மாமியார், அவருடைய ரெண்டு அக்கா, அண்ணன், அண்ணி என்று சோபாவும் சேர்ந்து சீரியல் பார்த்தது. மாமனார் சபாநாயகர் போல் தனி சேரில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்தார். இவர்களை பார்த்து நான் அசந்து போயிருக்க இவர்கள் அசராமல் மேகலாவிலிருந்து சிவசக்தி வரை பார்த்தார்கள்" என்று எழுதி காட்டி அசத்தினார்.

பேசாம இந்த சாப்ட்வேர் ஐ எல்லாம் மூட்டை கட்டி வெச்சுட்டு, "எழுத போங்க, இல்ல வரையுங்க" ன்னு சொன்னா, "இது 'புவ்வா' வுக்கு, மத்ததெல்லாம் பொழுது போக்கு" ன்னு சொல்கிறார்:-)

ச.ந.கண்ணன்.
இட்லிவடையில் எனது ஐந்தாண்டு பதிவை பார்த்து, "யார்டா இது?" என்று என் பதிவை எட்டி பார்த்தவர். கிழக்கில் எழுத்தாளர். அப்போலேர்ந்து தொடர்ந்து எனக்கு "எழுதுங்கள் எழுதுங்கள்" என்று ஊக்கம் கொடுத்து கொண்டு இருப்பவர்.சில நாட்கள் பதிவு போடலன்னா, "அம்மா தாயே, பதிவு பிச்சை போடுங்க" என்ற அளவுக்கு இறங்குவதும், பதிவு பிடிச்சுருந்தா அத ஊரு உலகத்துக்கு எல்லாம் தெரிய படுத்துவதும், பிடிக்கலைன்னா, "Not impressive at all" என்று வெளிப்படையாக குட்டுவதுமாக, என் பதிவின் ஒரு முக்கியமான விமர்சகர். சமீபத்தில் இட்லிவடையிடம் வாங்கி கட்டி கொண்டார். எனக்கு என்னமோ அது கண்ணனுக்கு கிடைத்த விளம்பர வாய்ப்பாகவே தோன்றியது.:-)


இவங்க மட்டுமா?
எந்திரன், சர்வம் என்று ஷூட்டிங் நடந்துக்கிட்டு இருக்க படங்களோட stills, அப்றோம் ஒலகத்துல எந்த நடிகை, நடிகருக்கு கல்யாணம்,காது குத்து, குழந்தை என்று எந்த நல்ல காரியம் நடந்தாலும், அந்த photos எல்லாத்தையும், எங்க இருந்தோ ஆட்டைய போட்டு forward செய்யும் அன்பு சகோதரி ராஜி(ஒரு சினிமா மலர் ஆரம்பிக்க சொல்லி suggest பண்ணிருக்கேன்) , பொறக்கும் போதே காமெராவும் கையுமா தான் பொறந்து இருப்பாங்களோ ன்னு நெனைக்கற மாறி படம் எடுக்கற maddy & truth, அழகாக இருக்கும்/எழுதும் மது, கம்ப்யூட்டர் பத்தி என்ன கத்துக்கிட்டாலும் பகிர்ந்து கொள்ளும் Rethanya, straight பஸ் இருந்தாலும் எறங்கி எறங்கி ஊருக்கு போற கதிர்,(எங்க வீட்டு கதிர் அதுக்கு opposite, straight பஸ் இல்லன்னா அந்த ஊருக்கே போக மாட்டார்), மனைவிய வீட்டுல விட்டுட்டு படம் பாக்க போறதுக்கு பிளான் போடற விஜய், வாலிபர்சங்கம் ன்னு பேர் வெச்சுக்கிட்டு வெறுமனே ஜாலி பண்ணாம, ஆழ் கிணருல விழுந்து இறந்த பையனை பற்றி பதிஞ்ச சரவணன், எல்லாரும் மும்முரமாக நான் கடவுள் விமர்சனம் எழுதும் நேரத்தில்,தான் மட்டும் வித்தியாசமாக விமர்சனம் எழுதின எல்லாரையும் விமர்சிச்ச மணிகண்டன், இப்டி நிறைய பேர்.


"ஒரு கும்பலா தான் கெளம்பி இருக்கீங்க, எப்டியும் போங்க"

Tuesday, 16 December 2008

Airtel Super Singer -2008

அப்போ தான் சாப்பிட்டு முடிச்சு, kitchen ஒதுங்க வெச்சுக்கிட்டோ, மறுநாள் சமையலுக்கு வேண்டிய காய் நறுக்கிட்டோ இருக்குற டைம்.
அர்ஜுன் வேற அப்பப்போ வந்து 'அம்மா தூக்கணும்மா.....தூக்கணும்மா.." ன்னு சொல்லிட்ருப்பான்
நான் நறுக்குறது வெள்ளரிக்காயா இருந்தா....'அம்மா ஒரு துண்டு குடுங்க பிள்ளைக்கு' ன்னு கேக்க வேண்டியது.....
அவன ஏதாவது சொல்லி ஹால் க்கு அனுப்பி வெச்சா...கொஞ்ச நேரத்துல அவங்க அப்பா கூடவோ ஆச்சி கூடவோ சண்டை போட்டு...ஊ ன்னு கத்திக்கிட்டு kitchen க்கு ஓடி வருவான். அவனுக்கு யார் கூடவாவது சண்டைன்னா உடனே அம்மா ஞாபகம் வந்துடும்...:-)

இதை எல்லாம் சமாளிச்சுக்கிட்டே......ஆனாலும் ஒரு கண்ணையும்(kitchen ல இருந்து பாத்தா டிவி ஓரளவுக்கு தெரியும்) ரெண்டு காதையும் டிவி பக்கம் வெச்சு, நான் விடாம follow பண்ற ஒரு/ஒரே program - Airtel Super Singer - 2008.


அர்ஜுன் பொறந்து maternity break ல இந்தியா வந்தப்போ, Airtel Super Singer ஜூனியர் எல்லா episodeம் பாத்து, அது பத்தாதுன்னு retelecase பாத்து, அதுவும் பத்தாதுன்னு youtube ல பாத்து.....இப்போ யாரு எந்த round ல என்ன பாட்டு பாடினான்னு கூட மறக்காம சொல்லுவேன்.
கிருஷ்ணமூர்த்தி யும் , விக்னேஷ் ம் finale ல பாடின 'சங்கீத ஜாதி முல்லை' ,
'வந்தாள் மகா லக்ஷ்மியே' இந்த ரெண்டு performance ஐயும், இப்போ பாத்தா கூட எனக்கு கண் கலங்கிடும்....:-) (கண் கலங்குறதுக்கு smiley போடறது எல்லா ரொம்ப டூ மச்)

அதே effect ல, Airtel Super Singer -2008 ம் பாக்க ஆரம்பிச்சு, இப்போ பத்து போட்டியாளார்கள் மிஞ்சி இருக்குற வரைக்கும் follow பண்ணியாச்சு. இதுல என்னன்னா, வீட்டுல இன்னொரு டிவி க்கு DTH போன சண்டே தான் வந்துச்சு....so இது வரைக்கும் உள்ள எல்லா episode க்கும் strong competition இருந்துச்சு....அபியும்,செந்தமிழ் அரசியும் ...
எப்போடா break வரும் ன்னு பாத்துட்டு இருந்து, உடனே 'please விஜய் டிவி மாத்துங்கன்னு kitchen ல இருந்து கத்தி, மாத்த வெச்சா, சில நேரம் correct ஆ அங்கேயும் chinmayi சிறிய விளம்பர இடைவேளைன்னு சொல்லுவாங்க....
'அட ச்ச' ன்னு இருக்கும்.....

எனக்கு ரவி,ரேணு, பிரசன்னா, Rohit இவங்க நாலு பேரும், இதே ஆர்டர் ல favourite.

ஜூனியர் பாக்குறப்போ, எல்லா குழந்தைகளுமே ரொம்ப நல்லா பாடுற மாறி இருந்துச்சு..irunthaalum கிருஷ்ணமூர்த்தி, Vidyalakshmi (அதே ஆர்டர் ல) favorite. Krish டைட்டில் win பண்ணாரு. இந்த முறை ரவி win பண்றாரான்னு பாக்கலாம்.








Wednesday, 29 October 2008

ஒரு ரெண்டு நாளைக்கு முன்னாடி BMTC பஸ் ல ஏறினேன். நான் எறங்க வேண்டியது just ரெண்டு stops தள்ளி. 5Rs டிக்கெட் cost. கண்டக்டர் கிட்ட அஞ்சு ரூபாவை நீட்டுனேன். அவரு டிக்கெட் குடுப்பாருன்னு எதிர் பாத்தா , ரெண்டு ரூபா மீதி குடுத்துட்டு பேசாம போய்ட்டாரு. 'ஒரு வேளை, சாதா பஸ், ஸ்பெஷல் பஸ் மாறி இருக்கும் போல....இந்த பஸ் ல மூணு ரூவா தான் டிக்கெட் போல' ன்னு நெனச்சுட்டு 'அவர் அவசரத்துல டிக்கெட் குடுக்காம போயிட்டாரோ என்னவோ, செக்கிங் ஏதும் வந்துற போறாங்க' ன்னு தவிப்பா இருந்தேன். நடுவுல ஒரு சிக்னல் ல கொஞ்சம் பேரு ஏறினாங்க. அவங்களுக்கு டிக்கெட் குடுக்க வந்தப்போ தான் கவனிச்சேன். யாருக்குமே அந்த ஆளு டிக்கெட் குடுக்கலை....என் stopping பேரு சொல்லி டிக்கெட் கேட்ட எல்லாருக்குமே, 2Rs மீதி குடுத்துட்டு போய்ட்டாரு.அப்போ தான் எனக்கு மேட்டர் வெளங்கிச்சு....அதாவது அந்த அஞ்சு ரூவாக்கு கணக்கு இல்ல......no ticket. 60-40 ன்னு அவரா ஒரு (அ)நியாய கணக்கு போட்டு மூணு ரூவா அவருக்கு, ரெண்டு ரூவா passenger க்கு பிரிச்சு குடுக்குறாரு. எனக்கு தாங்கலை...


BMTC பஸ் ல பயணம் செய்றது எதுக்கு சமம் ன்னு அதுல பிரயாணம் பண்ணவங்களுக்கு தான் தெரியும்.2002 செப்டம்பர் ல இருந்து 2004 மே வரைக்கும், BTM ல வாசம். ஆபீஸ் domlur ல...அப்போல்லாம் ஆட்டோ என்பது எனக்கு அவசரத்துக்கு மட்டும். அதோட, ரிங் ரோடு ல ஆட்டோ ல தனியா போகாதேன்னு நெறைய பேரு அட்வைஸ் பண்ண போக, கஷ்டமா இருந்தாலும் எப்போதும் BMTC யிலேயே போவது வழக்கம்,
201G,205,411,412 இந்த பஸ் ல எல்லாம் ரெண்டு வருஷம் travel பண்ணதுல BMTC conductors கிட்ட நெறைய கசப்பான அனுபவங்கள் எனக்கு உண்டு.....அதுனால அந்த கண்டக்டர் கிட்ட ஏதும் கேக்குறதுக்கும் திகிலா இருக்கு.....ஆனா அத அப்படியே விட்டுட்டு போறதுக்கும் மனசு இல்ல...அந்நியன் கிளைமாக்ஸ் ல சுஜாதா எழுதின மாறி, இப்படி டெய்லி அஞ்சு அஞ்சு ரூவாயா.....etc etc...government ஐ ஏமாத்தினா.....அப்டின்னு மனசுக்குள்ள குமுறிட்டேன். next ஸ்டாப் வந்துச்சு, அதுக்கு அடுத்த ஸ்டாப் ல நான் எறங்கனும். இந்த stop ல ஏறினவங்களுக்கு ticket குடுக்க அந்த ஆளு வந்தாரு. அவரு குடுத்த ரெண்டு ரூவாயை எடுத்து அவர்கிட்ட நீட்டி,"பேடா, நன்கே 5Rs ticket கொடி"ன்னு சொன்னேன். நான் கேட்பதாய் நெனச்சு மனசுக்குள்ளயே சொல்லிக்கிட்டேனா இல்ல அவருக்கு கேக்கலையா தெரியலை..... கேட்டதையே காதுல வாங்காத மாறி போயிட்டாரு....எனக்குள் இயலாமை பொங்கியது.....ஆனா உண்மையில் என்ன செய்வதென்று தெரியலை....எனக்கு இதற்கு முன் ஏற்பட்ட BMTC அனுபவங்கள் என்னை ஏதும் பேச விடவில்லை...பேசாமல் இறங்கி வந்துட்டேன். ஆனால் மனதில் இன்னும் லேசான வருத்தம் இருக்க தான் செய்கிறது.

டென்மார்க் போறதுக்கு முன்னாடி நான் கூட, fake medical bills எல்லாம் submit பண்ணிருக்கேன், tax exemption காக. ஆனா அங்க உள்ள system பார்த்துட்டு(அப்படி ஒரு trust..... government வந்து யாரையும் tax கட்டுங்கன்னு கேக்குறதில்ல...மக்கள் லாம் அவங்களே ஒழுங்கா கட்டுறாங்க... அதுனால தான் அவ்ளோ பணக்கார நாடா இருக்காங்க....) நானும் அவரும் முடிவு பண்ணோம், இனி எந்த காரணத்துக்காகவும் 'ஒரு சல்லி காசு ஏமாத்தக் கூடாதுன்னு'.

எங்க things லாம் சென்னை ல இருந்து பெங்களூர் move பண்றப்போ, packers and movers கேட்ட மொத கேள்வி, "பில் எவ்வளவு ரூபாய்க்கு வேணும்?"
"உள்ள amount க்கு குடுங்க, எக்ஸ்ட்ரா ஏதும் போட வேணாம்" ன்னு சொன்ன எங்களை "சரியான கேனையனா இருப்பாய்ங்க போலிருக்கு" ங்குற மாறி ஒரு பார்வை பார்த்தாங்க...

furnitures வாங்க போனா, "bill இல்லாம தரோம், அப்போ நீங்க VAT pay பண்ண வேணாம்...ஆனா guarantee க்கு எந்த problem ம இல்லாம பாத்துக்குறோம்" ன்னு சொல்லுறாங்க...
"வேணாம், VAT குடுத்தே வாங்கிக்கிறோம், bill போடுங்க" ன்னு சொன்னா எரிச்சலா பாக்குறாங்க.

எலக்ட்ரானிக்ஸ் கடைல ,"cash pay பண்ணுங்க, discount தரோம் " ன்னு சொல்லுறாங்க. "card ல pay பண்றோம், discount வேணாம்" ன்னு சொன்னா, "லூசாய்ய்யா நீ" ன்னு கேக்காம பாக்குறாங்க....

"எல்லாரும் tax கட்டிண்டு தான் இருக்கா, அவஸ்தை பட்டுண்டு தான் இருக்கா"
"எல்லாரும் செய்றதுனால தப்பு சரியா ஆயிடாது நந்தினி"

எனக்கு மிக மிக பிடித்த சுஜாதாவின் வசனம். அட்லீஸ்ட் நம்ம ஒழுங்கா இருக்கணும், மத்தவங்களை மாத்த முடியாட்டியும்.

Wednesday, 22 October 2008

Long live இட்லிவடை!!!

நான் follow பண்ற பதிவுகளில் முதலிடத்தில் இருக்கும் இட்லிவடைக்கு வெற்றிகரமான ஐந்தாண்டு நிறைவு...
அதை முன்னிட்டு நான் அவங்களைப் பத்தி என்ன நெனைக்குறேன்னு கேட்டாங்க....நம்மளை மதிச்சு கேக்குறாங்களேன்னு நானும் கடகடன்னு எழுதி குடுத்துட்டேன்...
என்ன எழுதினேன்னு பாக்க இங்க போங்க.

Thursday, 14 August 2008

"தாயின் மணிக்கொடி பாரீர்" நல்லா பாடணும்..."கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர், எங்கும் காணரு வீரர் பெருந்திரள் கூட்டம்" கூட்டம் ல சுதி சரி இல்லன்னு, பாவம் பாட்டு டீச்சர் எத்தனை வாட்டி சொல்லி குடுத்தாங்க....
கட்டி வெச்ச கொடி மேல போனதும் ஒழுங்கா அவிழ்ந்துக்குமா... பட்டொளி வீசி பறக்குமா....கொடிக்குள்ள வெச்ச பூ எல்லாம் அழகா கீழ உதிருமா ...
ஸ்கூல் Salute ல, order சொல்றப்போ கை வந்து டிரஸ்/கால் ல அடிக்குற மாறி சத்தம் வர கூடாது, gentle ஆ பண்ணனும் னு PT மிஸ் சொன்னது மறந்துட கூடாது.கம்பத்துக்கு கீழ போட்ட கோலம் அழியாம இருக்கணும்... marching பண்றப்போ நான் left-right கரெக்ட் ஆ வெப்பேனா... என் கிளாஸ் புள்ளைங்க எல்லாம் கரெக்ட் ஆ march பண்ணுமா... அம்மா ஸ்கூல் ல என்ன ஸ்வீட் குடுத்து இருப்பாங்க... அப்பா ஸ்கூல் ல என்ன ஸ்வீட் குடுத்து இருப்பாங்க... function முடிஞ்சு பெஞ்ச் லாம் arrange பண்ணிட்டு நான் வீட்டுக்கு போயி சேருரதுக்குள்ள அந்த dog (என் தம்பி) எல்லா ஸ்வீட்டையும் முடிச்சுடுவானா..... இப்படி பலவிதமான டென்ஷன் இருக்கும்.இது அஞ்சாவது படிச்சு முடிக்குற வரைக்கும்!

கொஞ்சம் வளர்ந்து, ஒரு ஆறாவது முதல் பன்னிரெண்டாவது படிக்குற வரைக்கும் ஸ்கூல் ல நடக்குற பேச்சு போட்டி, கட்டுரை போட்டிகளில், 'என்னை கவர்ந்த தலைவர்' , 'எனக்கு மிகவும் பிடித்த கவிஞர்' , 'எதிர் கால இந்தியாவில் நான்' ... இன்ன பிற தலைப்புகளில் நம்ம தெறமை காட்டி இருக்குறதுக்கு பரிசு கெடைக்குமா, கண்டிப்பா கெடைக்கும்... ஆனா first price கெடைக்குமா....இன்னைக்கு hostel ல ஏதாச்சும் ஸ்பெஷல் லஞ்ச் இருக்குமா... இல்ல... எப்போதும் போல தானா...
இப்டி கவலைகள்.


"ரோகிணி காம்ப்ளெக்ஸ் ல கிடைக்கலைன்னா ஆட்டோ பிடிச்சு அபிராமி போனா atleast black ல சர்வ நிச்சியமா வாங்கிடலாம், warden அதே படத்துக்கு வந்து தொலச்சுட கூடாது" இது கல்லூரி வாசல்.

Corporate world ல அடி எடுத்து வெச்ச நாளா , "monday இல்லாட்டி friday ல வந்தா நல்லா இருக்கும், ஊருக்கு போலாம் மூணு நாளைக்கு, KPN ல டிக்கெட் வாங்குறதுக்குள்ள உயிரே போய்டும்.....try பண்லாம்...., பாப்பையா ஐயா எந்த தலைப்பு வெச்சுருக்காரோ தெரியலை... ராஜா பேசுறப்போ கரண்ட் போய்ட கூடாது...என்ன படத்தை போடுறானோ என்னவோ..."

ஆனா சமீப காலமா "கடவுளே, எங்க நாட்டுல எங்கயும் குண்டு வெடிச்சுட கூடாது, காப்பாத்துப்பா சாமீ!!!" இந்த பயம் கலந்த சிந்தனை தான் மனசுல ஓடுது......டிவி ல ஏதாவது flash news வந்தா கூட 'பக் பக்' னு மனசு பதறுது.

62 ஆவது சுதந்திர தினம்.
"இந்தியா பொருளாதாரத்துல முன்னேறணும், வல்லரசாகனும், அந்நிய செலாவணி பெருகணும்..."
இப்டின்னு பெரிய கனவு எல்லாம் எனக்கு இல்லவே இல்ல....அந்த கனவு எல்லாம் காணுறதுக்கு நெறைய பெரியவங்க இருக்காங்க....என் கனவு, வேண்டுதல் எல்லாம் இப்போதைக்கு ஒண்ணே ஒண்ணு தான். "எங்க நாடு அமைதியான நாடா இருக்கணும்"

தாய் மண்ணே வணக்கம்!!!

Friday, 11 July 2008

Roger Vs Nadal

எட்டாவது படிக்குறப்போ, Chris Evert பத்தி ஒரு lesson,

அப்றோம் காலேஜ் first year ல என் room-mate ஆர்த்தி Pete Sampras ஐ தீவிரமா love பண்ணா.

"ஸ்டெபி ொம்ப அழகா இருக்காளே, oh அவளுக்கும் மொட்டை மண்டை அகாசி க்கும் love ஆ?"

அதுக்கு அப்றோம் கம்பெனி ல பக்கத்து cubicle பையன் screen saver ல மரியா ஷரபோவா பாத்து, "அட, நெடு நெடு ன்னு என்னமா இருக்கா??"

அப்புறம் ஒரு வாட்டி கம்பெனி outing போன club ல டென்னிஸ் கோர்ட் இருக்க போயி, அந்த bat...(Grrrrrrrr அது ராக்கெட், அப்டின்னு எங்க ஆளு மொறச்சுகிட்டே சொல்லுற மாறி ஞாபகம் வருது) தூக்கி பாத்து, இத வெச்சு எப்டி தான் வெளாடுறாய்ங்களோ ன்னு பெரு மூச்சு.

எனக்கும் டென்னிஸ்க்கும் இவ்ளோ தான் சம்பந்தம்.

அப்றோம் என்னத்துக்கு இப்புடி ஒரு heading....எல்லாம் ஒரு வெளம்பரத்துக்கு தான்.

இந்த தலைப்பைப் பாத்துட்டு யாராச்சும் நான் மேட்ச் பத்தில்லாம் எழுத போறேன்னு நெனச்சா, "அண்ணா.....அது நான் இல்லீங்கோ....எனக்கு அதெல்லாம் தெரியாது"

ஊருல எல்லாருக்கும் நல்லா தெரிஞ்ச கிரிக்கெட்டே நமக்கு சரியா தெரியாது.
ஏதோ பந்து உருண்டு உருண்டு கோட்டுக்கு வெளிய போனா நாலு ரன், அதுவே பறந்து போச்சுன்னா ஆறு ரன், batsman பின்னாடி நட்டு வெச்சுருக்குற மூணு குச்சிய தட்டி விட்டுடுச்சுன்னா அந்த ஆளு out. இப்டி உல்லுல்லாயி மேட்டர் வெச்சே மேட்ச் பாக்குற ஆளு நான். என் வீட்டுகாரரும் நெறைய வாட்டி, long on, long off, mid on, mid off, googly, dhoosra, இப்டின்னால்லாம் என்னன்னு சொல்லி குடுத்துருக்காரு.நானும் ஏதோ 2 marks answers மாதிரி மனப்பாடம் பண்ணி வெச்சுருக்கேன். ஆனா ஒருத்தன் googly போட்டா, அது googly தான்னு கண்டு பிடிக்கல்லாம் தெரியாது.Googly,dhoosra லாம் அப்புறம்....மொதல்ல அவன் leg spin போடறானா, off spin ஆ ன்னு கண்டு பிடிக்கவே CPU utilization 90% ஆயிடும், அப்றோம் அவன் மாத்தி போட்டுருக்கான்னு என் சிற்றறிவுக்கு எட்டுறதுக்குள்ள ஓவர் முடிஞ்சுடும்...:-(

என்னைக்காச்சும் அவரோட friends லாம் கிரிக்கெட் பாக்க வந்து, எல்லாரும் எதாச்சும் technical matters பேசிக்கிட்டே பாக்கும் போது, நான் தோனிக்கு இந்த hair style நல்லா இருக்கா.... இல்லாட்டி முன்னாடி நெறைய தலை முடி இருந்ததே better ஆ ன்னு யோசிச்சுக்கிட்டு இருப்பேன்.... மனசுக்குள்ள மொத தடவையா customer meeting attend பண்ண போற மாறி ஒரே திகிலா இருக்கும்....யாராச்சும் என்கிட்டே எதாச்சும் கிரிக்கெட் technique பத்தில்லாம் பேசிடுவாங்களோன்னு....

கிரிக்கெட்டே இப்டின்னா டென்னிஸ் பத்தி நான் சொல்லவே வேணாம்.

இப்டி பட்ட என்னைய நெறைய பேரு ஏகத்துக்கு உசுப்பி விட்டுடாங்க.

"இவிங்க ரெண்டு பேரும் செம rivals, இவன் அவனை clay court ல ஜெயிக்க முடியாது, அவன் இவனை grass court ல அடிச்சுக்க முடியாது....இவன் வேற 5 வாட்டி wimbledon titles வாங்கிட்டான், இந்த முறையும் வாங்கனும்னு செம வெறியோட வெளாடுவான், அவன் french open ல clay court ல தான் வாங்கிருக்கான், first wimbledon டைட்டில், அதுவும், இவனை grass court ல ஜெயிச்சு வாங்கணும்னு முடிவோட வெளாடுவான், செம மேட்சா இருக்க போகுது....cant wait. " - அவர்.

"Can Roger do it again?" - UK ல இருக்க friends லாம் வெச்ச orkut status.

இதெல்லாம் பாத்து நான் ரொம்பவே உசுப்பேரிட்டேன்.

இந்த மாட்சை பார்த்தே தீரனும் டா ன்னு ஒரு கொலை வெறி வந்துடுச்சு!

Sunday. 6th July.

எங்க ஆளுக்கு அவர் கிளப் ல கிரிக்கெட் மேட்ச். மொதல்ல போக வேணாம் னு இருந்தவரு, திடீர்னு மெம்பெர்ஸ் கொறையுது ன்னு சொல்லி கெளம்பிட்டாரு.
. "கண்டிப்பா பாரு, செம மேட்ச், தூங்கிட்டு கோட்டை விட்டுடாதே" ன்னு அன்பா(?) சொல்லிட்டு போனாரு.
நானும் எங்க டைம் ல ஒரு மூணு மணிக்கு டிவி ய on பண்ணி பாத்தேன். ஒரே புள்ளி.....எந்த சேனல் லையும் ஒண்ணுமே தெரியலை.
எங்க ஊருல எல்லாம் கேபிள் டிவி ஆபீஸ் ல பவர் கட் ணா தான் இப்டி ஆகும்.
என்ன கொடுமை இது ன்னு சரவணனை கேட்டுட்டு, சோகமா இருந்தேன்,

அவர் கிரிக்கெட் மேட்ச் முடிஞ்சு அரக்க பறக்க ஓடி வந்தாரு....

"என்ன டீ மேட்ச் பாக்கலையா?"
"டிவி ல ஒண்ணுமே தெரியலை"

அவரு டிவி ய on பண்ணி பாத்துட்டு (அப்போவும் ஒண்ணும் தெரியலை), ஒரு circastic body language ல....எதையோ குனிஞ்சு குனிஞ்சு கட்டில்க்கு கீழ தேடினாரு......

'என்னடா...டிவி தெரியலைன்னா கீழ தேடுறாரு..ரொம்ப வெய்யில கிரிக்கெட் ஆடி இப்டி ஆயிடிச்சோ' - என் மனசாட்சி...அவருக்கு கேக்காது

(ரொம்ப மெதுவா) "ஏங்க ரிமோட் தேடுறீங்களா.....?"

....பாத்தா கட்டில்க்கு கீழ இருக்குற socket ல இருக்க வேண்டிய கேபிள் அவிழ்ந்து விழுந்துருக்கு.. அதை எடுத்து அவர் சொருக, டிவி ல Roger Vs Nadal.

"இது கூட தெரியலை....உனக்கெல்லாம் wimbledon பாக்குறது ஒண்ணு தான் கொறைச்சல்" - அவரோட பார்வை.

"எங்க ஊருல எல்லாம் ஜன்னல் வழியா கேபிள் வந்து டிவி க்கு பின்னாடி சொருகுவோம், இங்க என்ன கட்டில் க்கு கீழ இருக்கு, chaos theory மாதிரி கட்டில்க்கு கீழ ஏதோ பிரச்னை ஆகி, டிவி ல புள்ளி ....இதெல்லாம் எனக்கு என்ன தெரியும்?" - நான்.

'மத்தது எல்லாம் தெரியுமாக்கும்' - இது அவரோட மனசாட்சி. ஆனா எனக்கு கேட்டுடுச்சு.

அப்ப நல்ல நேரத்துக்கு மழை வந்து ஆட்டம் தடை பட்டு மீண்டும் நடக்க ஆரம்பிச்சுருந்துச்சு....

What a come back Roger!
From no where, he was having a bash.

ரொம்ப interesting ஆ பாத்துட்டு இருந்தோம்.

"எங்க Ace ன்னா என்னன்ன்னு சொல்லு பாக்கலாம்....ரொம்ப பெருமையா wimbledon finale பாக்குறே" - வேற yaaru....

"Phew , A serve that the receiver is unable to reach" - சொல்லிட்டோம் ல....
எந்த காலத்துலயோ டென்னிஸ் பாத்தது ஞாபகம் வெச்சு சொல்லிட்டோம் ல...

"volley ன்னா???" - அவரே தான்

"அர்ஜுன் முழிச்சுட்டா மாறி இருக்கு, இருங்க வரேன்" - பே பே னு முழிக்குறதோட, இன்னொரு version.

"A tennis return made by hitting the ball before it bounces" - புரிஞ்சுகிட்டு அவரே சொல்லி குடுத்துட்டாரு.infact நான் answer பண்ணி இருந்தா பயங்கர அதிர்ச்சி ஆயிருக்கும் அவர்க்கு.
ACE கே ஒரு light jerk நோட் பண்ணேன்.

இப்படியா பாத்துட்டு இருக்கப்போ,
I have fallen all in love with Federer.

எவ்ளோ composed ஆ இருக்காரு....கொஞ்சம் கூட டென்ஷன், emotion லாம் வெளிய காட்டாம.....சூப்பர்.

போராடி போராடி Nadal ஜெயிச்சு கீழ விழுந்து சந்தோஷ படுறாரு.
மின்னல் மாறி அத்தனை காமிராக்களும் flash பண்ணுது..... சனிக்கிழமை wiliams sisters match க்கு avlova மின்னின மாறி ஞாபகம் இல்ல...
எனக்கு ஒரே feelings. ஆனா quiet ஆ போயி தண்ணி குடிச்சுட்டு presentation க்கு வந்த Roger, நாலரை மணி நேர போராட்டம் தோல்வியில் முடிந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லாம "Nadal is a deserving champion" னு சொன்னது...Hats off.
ஆனா Nadal அவரோட spanish உச்சரிப்புல அழகா சொன்ன மாறி "Roger is THE champion".

ஏற்கனவே நான் டோனி டோனி னு பண்ணுற அளப்பரைல எங்க ஆளு காதுல ஒரு chimney மாட்டலாம் போல பொகையா வரும், நான் இப்டி அடுத்தது ஒண்ணு ஆரம்பிக்க போறேன்னு தெரிஞ்சு இருந்தா அவரு இந்த மேட்ச் பத்தி என்கிட்டே சொல்லியே இருக்க மாட்டாரு.....:-)

நான் எங்க குல தெய்வம் அய்யனார் கிட்டயும், சின்ன கருப்பர் கிட்டயும் ஒரு application போட்டுட்டேன், "Next wimbledon ல Roger தான் ஜெயிக்கணும்"

Friday, 30 May 2008

Vaccinations - A Study

Arjun was born in Denmark and travelled to India and then relocated to Sweden.
I was greatly confused about his vaccination schedules. And I have been receiving questions from my friends, who are new mothers, whose children are born abroad, and travelling/relocating to India or the other way, about the same. I have been questioned by a fellow traveller in the flight also about this. I have discussed quite a lot with doctors in India, Denmark and Sweden and also read about this in the web and I capture my learnings here for the betterment of fellow mothers and also my future reference.

The vaccinations are more or less similar in India, Sweden and Denmark except that there are some extra ones in India. Also the age at which they vaccinate in India is different.

Let me state the abbreviations the doctors use.

D - diphtheria
P - wooping cough
T - Tetanus
OPV/IPV - Oral Polio Vaccine / injectable Polio Vaccine
Hib - Influenza Type B(Known as meningitis in the Europe, which is actually the name of the disease)
MMR - Mums, Measels, Rubella
Hep B - Hepatitis B


A child born in India is given BCG at birth.This is a vaccination against tuberculosis, commonly known T.B and also she is given the first dosage of hep B vaccination at 2 weeks.

In India, there are two types of injections available.
Easy four and Easy five.

Easy four: DPT+Hib
Easy five: DPT+Hib+Hep B

Its so easy that one need not receive too many pricks, but just one prick but all the four/five vaccines. In our childhood, it was known as 'Triple Antigen-Muthaduppu oosi' which was DPT.

Ideally a kid must receive three doses of DPT, Hep B and Hib,by one year.

So a kid that received BCG and Hep B respectively at birth and 2 weeks, will receive one easy five when 45days old, one more easy five at 75 days and one easy four at 105days old, which makes 3 doses of DPT, Hep B and Hib. And each vaccination is also associated with a OPV.Now a days they recommend one dosage of IPV atleast.The doctors make sure each vaccine is given at one month interval at the least.

The same scenario is handled a bit differently in Denmark and Sweden.They dont give the vaccinations at such young age.The first vaccine itself start when the child becomes three months old. In Denmark they claim that there is no Hep B virus and so there is no vaccination for that. But they dont have this easy four, easy five concepts. They prick twice, once for DPT+IPV and once for Hib, I mean meningitis.
And if you want to order Hep B yourself, then one more prick. And there is no BCG vaccine also.You need to order it yourself, if you want. And this DPT+IPV,Hib are repeated at 6 months and 1 year.
In Sweden also the vaccinations are given at 3 months, 6 months and one year but sweet people, just one prick for all the six, DPT+IPV+Hib+Hep B.
In Sweden, they also have BCG vaccine at 6 months old.

Now coming to MMR, in India they recommend a vaccination only for 'measels' at 9 months and a MMR vaccine at 15 months. But in Denmark and Sweden, they give only MMR at 18 months.

Say a child is travelling to India for a vacation before she is given MMR and she is older than 9 months, then its better she gets a measles vaccine as soon as she lands in India.

There are optional vaccinations for chicken pox at one year, typhoid and Hep A at 2 years in India.

So depending on where are you at what age, we must plan the vaccinations for our children.

I would like to add two things.
A reiteration that Hib and meningitis are one and the same. Why I reiterate, is because a friend of mine relocated from India to UK, when her son was one year old, that means he received 3 doses of Hib already, did not know they are the same, ended up giving three more doses of meningitis in UK.Ideally repeating the vaccine must not cause any issue, however it costs our kids one more prick and lots of pain.

And since all the three doses of DPT+OPV are given at so young age for Indian children, its recommended that they receive a DPT booster dose(triple antigen-muthaduppu oosi)+OPV at 18months and another booster of DPT at 5 years. But in Denmark and Sweden they give the DPT booster at 5years, as the children have received the third DPT+IPV dose itself at 1 year. Now, a case, which ideally triggered me to write this post, a friend of mine who is living in Denmark, who may probably relocate to India, who has a one year old son, she asked me about what all vaccinations she would have to give in India.
Since her son has received the third DPT dose itself at one year unlike kids in India who would receive the third dose when 105 days old, she has to discuss about whether to give a booster at 18 months or the booster is enough at 5 years old itself.

Chickenpox

Incidentally or coincidentally, I happened to have few discussions and readings about this of late. Just capturing the learnings here.

Its defined as the following.
'An acute contagious disease caused by herpes varicella zoster virus; causes a rash of vesicles on the face and body'.

I live in Sweden and this HVZ virus seems quite common here. I was alarmed when our colleague Naveen and his 7 months old daughter got infected. Subsequently we travelled to India and I discussed with two paediatricians about giving the vaccination to Arjun. One of them practicing in a town nearer to my native village, 17 years of experience in Paediatrics,did not recommend the vaccine. The reason he stated was, "all my patients are from rural area and very poor, chicken pox vaccine is expensive(1600INR), this disease is not a dangerous one, it may occur just once in a lifetime, so I dont say this is a mandatory one". The other paediatrician is in Chennai and he instantly said, "go for it, as you say this virus is common in Sweden".

My friend Sushila stated, she read in a weekly that cleanliness can prevent this. But I dont agree. As per what I know, this virus can quickly spread via the air. If an infected person sneezes or coughs, and the one who gets exposed to it can get infected.

Ideally the vaccination must prevent this disease. But, my friend Sireesha's 2 years old son has got infected beyond being vaccinated. Her doctor answered her, "one in 100 children may get it, inspite of the vaccination". So, vaccination does not guarentee you 100%. And noramlly once someone gets infected by this virus, their body develops antibodies and hence becomes immune to the virus for lifetime. But I read in the web that some may get it more than once too.

And in India, we associate this with 'Goddes Amman', and all what we do in the name of God, actually prevents the virus to spread out and also decreses the intensity of the disease.
1.We restrict the infected one at home, we dont let visitors.
2.Neem leaves bed
3.Tender coconut drink
4.Once the boils start healing,give bath with turmeric water.

I feel the kids must get the vaccination and also we must practice cleanliness and we may prevent this.

Monday, 26 November 2007

Knife and Fork!!!

That was my first travel abroad, 16 January 2005 to Paris.
I was flying Emirates. The trays were served. I was quite hungry, did not mind or rather did not know about any eating manners. Just took the spoon and started to eat the rice. The man next to me, we got introduced to each other when the flight took off, seems he is basically an Indian but settled in France for about 17 years ago. He was fully loaded, however he managed to advice me.

He: Is this your first travel to Europe?
Me: Its my first travel outside India.
He: That explains. You must not eat with spoon,use fork and knife. When you share the table with your western colleague, dont eat with spoon, you will set a bad example about Indians...

Shame on me, I did not know this till he told me. But how can I suddenly learn?
I started observing people how they eat.Knife in which hand and fork in which hand, how they cut the meat, how they manage with the little left overs in the knife and so on...slowly learnt it.

Now I am very comfortable with this, but I think of THAT man with thanks whenever I eat with knife and fork so comfortably.

Wednesday, 21 November 2007

CLOUD 9

I am in cloud 9, to see the comments about my blog.
I am very much motivated.

By the way, what is this "In Cloud 9".
I did not know what it means, until I read "Hai Madan" in last weeks AV.
Generally the clouds can be at a maximum height of 8 miles. So when we want to express some high, happy feeling, we say, I am in cloud 9, like beyond the possible height of clouds.
Americans introduced this word to English in 1965.

I liked this, and hence this info sharing.
Could be a repeat for some of you though.

Thursday, 15 November 2007

My first blog...

This is my first blog.
Got really inspired by Chinmayee's WhatToNameIt, and thought, why not me???
I dedicate my first blog to her with gratitude, and perhaps I inherit her style of writing too...
I am curious, how well my blogspot would grow...:-)