Monday 16 February 2009

பட்ட கால்லயே படும்.

வெள்ளிக்கிழமை பெப்ரவரி 13 காலை 9:30

உலகத்தின் பெரும்பாலான கதவுகள் தள்ளி திறக்கும் விதத்தில் தான் இருக்கும். எங்க அலுவலகத்தின் ஓர் கதவு, அதுவும் கண்ணாடி கதவு, அதுக்கு மட்டும் விதி விலக்காக இழுத்து தொறக்கற மாறி வெச்சுருக்காங்க.
அந்த விதிவிலக்கு எனக்கு விதியாக போனது...

ஒரு மீட்டிங் க்கு நேரமாகிவிட்ட அவசரத்தில், வேகமாக நான் அந்த கதவ இழுக்க போக, டக் ன்னு ஒரு சத்தம், எங்கோ எதுவோ வலிப்பதை மாறி ஒரு உணர்வு. இருந்தாலும் பின்னாடி வந்தவங்களுக்கு எல்லாம் அங்க எந்த சம்பவமும் நிகழாத மாறி ஒரு feel குடுத்துக்கிட்டே நான் என் desk க்கு வந்து சேந்து குனிஞ்சு பாத்தா....,ஐயய்யோ என்னது இது ஒரே செவப்பா இருக்கு.என் வலது கால் பேரு விரல் நகம் பெயர்ந்து ரத்தம் வழிஞ்சுக்கிட்டுருக்கு.... கதவின் கீழ் முனை இடிச்சுருக்கு. உடனே கெளம்பி மெடிக்கல் ரூம் போனேன்.
"A glass door hit me....etc etc..."
"Its bleeding badly, u better take A TT shot"

என்னது ஊசியா? அர்ஜுன் பொறந்த அப்றோம் அந்த பக்கமே போனது இல்லையே.சரி வேற வழி இல்ல,
"Ok you give it"

நர்ஸ் ஊசி போட்டு காலில் கட்டு போட்டு விட்டு, "you better check the condition of the nail tomorrow" ன்னு சொல்லி அனுப்பிச்சுடாங்க.
நம்ம டீம் மக்கள், ஒவ்வொருத்தரா வந்து என்னாச்சு என்னாச்சு ன்னு கேட்டு, நான் பதில் சொல்லி, அவங்களும் ஜோக் அடிப்பதாக நெனச்சு, "கதவுக்கு ஒண்ணும் ஆகலையே" ன்னு கேட்டு and so on.
தலைவருக்கு போன் போட்டு விவரத்தை சொன்னா, எனக்கு ஏதோ எறும்பு கடிச்சு, அதுக்கு நான் போன் பண்ணிருக்கேன் அப்டிங்கற மாதிரி reaction.
இந்த situation க்கு எல்லாம் இருக்கவே இருக்காங்க எங்கம்மா ன்னு ஒரு போன் போட்டு அம்மா கிட்ட அம்மாஆஆஆ நீ சுமந்த பிள்ளை...சிறகொடிந்த கிள்ளை....,
"தண்ணி படாம பாத்துக்கோம்மா,ரொம்ப நடக்காதம்மா"....எல்லாம்...:-)



சாயங்காலம் அன்னைக்கின்னு எனக்கு வேலை பிச்சுகிட்டு போக, வீட்டுல drop பண்ண முடிஞ்சா எந்த colleagues கூடவும் கெளம்ப முடியாம போயி, எப்டியோ நொண்டி நொண்டி வீட்டுக்கு போயி சேந்தேன்.

சனிக்கிழமை பெப்ரவரி 14 காலை 7:30
------------------------------------
எந்திரிச்சு மெது மெதுவா பாத்ரூம் க்கு போற வழில கால்ல ஒரு இடி இடிச்சு, அம்மா ன்னு கத்த வந்தத அடக்கி, (நான் கத்தினா பின்னாடியே என் பையன் அம்மான்னு கத்திட்டு முழிச்சுடுவானே...) உள்ள நொழஞ்சா, கண்ணாடி ஸ்டாண்ட் ல பச்சை கலர் ல ஒரு குட்டி பெட்டி. பாக்குறதுக்கு நகைப்பெட்டி மாறி இருக்கு.
"அட நம்ம ஆளு எப்போலேர்ந்து இவ்ளோ romantic ஆ மாறினாரு? Valentines day க்கு ஏதோ surprise gift லாம் வாங்கி வெச்சுருக்காரே?, என்னவா இருக்கும் , தோடா மோதிரமா??" ன்னு கதவுல இருந்து கண்ணாடிக்கு போறதுக்குள்ள, (நொண்டி நொண்டி போறதுக்கு டைம் ஆகும் ல...) யோசிச்சுக்கிட்டே போயி அந்த பெட்டிய தொறந்து பாத்தா, "படுபாவிங்க, odonil க்கு எவண்டா இப்டி ஒரு பெட்டிய டிசைன் பண்ணீங்க??"
காதலர் தினத்துக்கு பரிசுகளைப் பரிமாறிக்கொண்ட காதலர்களே...நல்லா இருக்கப்பு!!!


காலை 10:30

டாக்டர் கிட்ட கொண்டு போயி கால காமிச்சு, again "I got hit at A glass door etc...etc"
கட்டை பிரிச்சு பாத்துட்டு, "பாதி நகம் ஏற்கனவே பேந்துடுச்சு. மொத்தத்தையும் எடுத்துடறது தான் நல்லது, Its A painless procedure, ஊசி போட்டு அந்த இடத்தை numb பண்ணிடுவேன், அதுக்கு அப்றோம் அந்த வெரலையே எடுத்தா கூட(??), வலிக்காது.என்ன சொல்றீங்க? "
நான் பரிதாபமா அவர பாக்க, "you carry on டாக்டர்"

"அட பாவி உங்களுக்கென்ன போச்சு? "

நகம் எடுக்கும் போது வலிக்காதுன்னு தெளிவா சொன்ன அந்த டாக்டர், anesthesia ஊசிய நகக் கண்ணை சுத்தி ஒரு அஞ்சாறு தடவ குத்த போறத பத்தி மறச்சுட்டார்.
அந்த காலத்துல எல்லாம் குற்றவாளிகளுக்கு, நகத்தை பிடுங்கி தண்டனை கொடுத்த காரணம் நல்லாவே வெளங்கிடுச்சு சாமி. வலியா அது? எழுத்தில் கொண்டு வர முடியாது.


அவர் எனக்கு ஊசி போடறப்போ ஆஆஆஆ!!!!!!! ன்னு ஒரு சத்தம்.பாத்தா அம்மாக்கு ஊசி போடறாங்களேன்னு என் புள்ள அழுவுறான். உலகத்துல நம்ம அம்மாக்கு அப்றோம் நமக்கு ஒண்ணுன்னா துடிச்சு போறது நம்ம புள்ள தான்.

ஒரு வழியா நகத்தை பிடுங்கி, கட்டு போட்டு விட்டார். வீட்டுக்கு வந்து பாத்தா லிப்ட் work ஆகலை. எத்தி எத்தி நாலு மாடி ஏறி வீட்டுக்கு போயி, சக்கரக்கட்டி படம் பாத்தேன்.I-pod ல பாட்டு கேட்டுகிட்டே இருக்கப்போ, டாக்ஸி டாக்ஸி , சின்னம்மா சிலக்கம்மா tracks லாம் வந்துச்சுன்னா என்னை அறியாம ரொம்ப சந்தோஷமா இருக்கும். ஆனா என்னவோ இந்த பாட்டெல்லாம் நான் ஒரு வாட்டி கூட visuals பாத்தது இல்ல. படம் சரியல்ல ன்னு ஏற்கனவே கேள்வி பட்டு இருந்தாலும் இந்த பாட்டோட visuals பாக்கலாம் ன்னு படம் பாக்க உக்காந்தா, what A disappointment?
தல போட்டுக்குடுத்த tunes எல்லாம் எப்டி படம் ஆக்குறதுன்னு மணிரத்தினம், ஷங்கர் கிட்ட எல்லாம் படிச்சு தெரிஞ்சுக்குங்க டைரக்டர் சார்!

ஞாயிறு மாலை 6:30
--------------------------------
கலைஞர் டிவி யில் 'கடவுளின் குழந்தைகள்' என்று நான் கடவுள் குழுவின் கலந்துரையாடல். "படம் பாத்துட்டே ஒரு வாரமா எங்கயோ வெறிச்சு வெறிச்சு பாத்துட்டு இருக்கே நீ! you better dont watch this" ன்னு சொல்லிட்டு போன அவருடைய எச்சரிக்கைய அலட்சியம் செய்து விட்டு பாக்க ஆரம்பித்தேன். ரொம்ப கட்டுப்பாட்டுடன் தான் பாத்துகிட்டு இருந்தேன். ஆனா இளையராஜா வந்த உடன், பூஜா ஏதோ சொல்ல அதை புரிந்துகொண்டு மதுபாலா அவரை பாத்து கை கூப்பியதை பார்த்த பிறகு எனக்கு தாங்கலை. படம் பாக்குறப்போவே அவளை, அவளுடைய தாத்தாவிடம் இருந்து பிடுங்கி செல்லும் காட்சியில், "See it like A movie" என்று அவர் என்னை அழுகைய நிறுத்த சொன்னது ஞாபகம் வந்தது. ஆனாலும் நேத்து நைட் ஒரு ரெண்டு மணிநேரம் அழுது தீர்த்து முகம் வீங்கி இன்னைக்கு ஆபீஸ் வந்துருக்கிறேன். Especially, தாயான பிறகு இந்த கொடுமைகளை எல்லாம் தாங்க முடிவதில்லை.
கடவுளே! நீ எங்களுக்கு எதை புரிய வைக்க இவர்களை எல்லாம் படைக்கிறாய்?

என்னடா! வாரத்தின் முதல் நாள் வந்து இப்படி violin வாசிச்சுட்டேனே?? ஏதாவது மங்களகரமா முடிக்கணுமே பதிவ....Hmm...
Ok, என்னுடைய இந்த பதிவை tamilish இல் போஸ்ட் செய்து, அதுக்கு பத்து ஓட்டுகள் வேற கெடைச்சு, என்னுடைய பதியும் ஆர்வத்தை boost பண்ணிய ச.ந.கண்ணன் அவர்களுக்கு நன்றி மற்றும் திருமண வாழ்த்துக்கள்.




No comments:

Post a Comment