Tuesday 18 August 2009

From Today's Playlist :-)

இசை என்று ஒரு விஷயம் இந்த உலகத்தில் இல்லாமல் போனால், நிறைய பேருக்கு பைத்தியம் பிடிச்சுடும். ஏதோ ஒரு வடிவத்தில் இசைக்கு எல்லோருமே அடிமை தான்.

"இளையராஜாவின் "How to Name it?" கேட்டு இருக்கீங்களா??"
"இல்லை"
"கேட்டதில்லையா...ச்ச, வேஸ்ட் நீங்க"

இசையை பொறுத்த வரை என்னுடைய எல்லை ரொம்ப ரொம்ப சின்னது.
நம்ம எதுக்கு மியூசிக் கேக்குறோம்? மகிழ்ச்சியை பகிர்ந்துக்க, துக்கத்தை வடிக்க, தனிமைய போக்க, பொழுது போக, தூக்கம் வர, கடவுளை உணர...etc etc.
இந்த மாதிரி ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு மாதிரியான தேடலுடன் மியூசிக் கேட்போம்.

இந்த தேடலுக்கு எல்லாம் விடை சிலருக்கு "How to name it"டில் கிடைக்கலாம். எனக்கு சினிமா பாட்டுலேயே கெடைச்சுடுது.
இதை 'குறுகிய ரசனை' ன்னு ஆதங்கப்படும்/'வளர்த்துக்கொள்ள சொல்லி' அக்கறைப்படும் நண்பர்களுக்கு நான் சொல்றது இதான்,
"எனக்கு தெரிஞ்சது இவ்வளவு தான்...:-(
இப்போதைக்கு எனக்கு அதுவே போதுமானதா இருக்கு."

லகான் படத்துல "Radha kaise na jale" ன்னு ஒரு பாட்டு வரும். என்னோட சந்தோஷத்தை இரட்டிப்பாக்க அது போதும்."காதலின் தீபம் ஒன்று" பாட்டை விட ரொமான்டிக் ஆன ஒரு பாட்டு இன்னும் வந்துடலைன்னு எனக்கு ஒரு நம்பிக்கை. எப்போல்லாம் தனியா இருக்க மாதிரி உணர்கிறேனோ, அப்போல்லாம் "Tanhayee(Dil Chahta Hai)" பாட்டு எனக்காக அழும்.

சரி எனக்கு பிடிச்ச பாட்டு லிஸ்ட் சொல்லி பிட் போடுவதற்காக அல்ல இந்த பதிவு.
மேட்டர்க்கு வரேன்.

இந்த மாதிரியான என்னோட limited horizon னில் இருந்து சில கேள்விகள்.

கூகிள் பண்ணாம பதில் சொல்லுங்க பார்க்கலாம்.


1)உன்னி கிருஷ்ணனும், உதித் நாராயணனும் சேர்ந்து பாடின பாட்டு சொல்லுங்க.

2)அனுராதா ஸ்ரீராம், மாதங்கி சேர்ந்து பாடின பாட்டு?

3)"வளையோசை கல கலவென", "ஓ பட்டர்பிளை" இந்த ரெண்டு பாட்டுக்கும் என்ன ஒற்றுமை?

4)இசைஞானியின் நானூறாவது படத்துல, அவரே பாடின பாட்டு என்ன?

5)Musically Connect: அபூர்வ ராகங்கள். பதினாறு வயதினிலே, சிந்துபைரவி, மின்சாரகனவு,கருத்தம்மா, அழகி, பாரதி, ஆட்டோக்ராப்

No comments:

Post a Comment