Thursday, 9 October 2008

Marriage and XOR


Marriage and XOR.
What is that I am trying to relate?
Please comment with your views.

Sunday, 28 September 2008

தந்தை மகற்கு ஆற்றும் நன்றி...

"come came come"

"eat ate eaten"

"is was been"

இந்த present, past, past-perfect tense நான் படிச்சப்போ எனக்கு 6 வயசு.

இந்த காலத்து புள்ளங்க பிறக்கும் போதே, tense voice லாம் தெரிஞ்சுக்கிட்டு தான் பொறக்குதுங்க. ஆனால் நான் சொல்லுறது 23 வருஷத்துக்கு முன்னாடி.

என் அப்பா ஒரு M.A, B.Ed பட்டதாரி. M.A English literature. அவங்களுக்கு ஆங்கிலத்தில் ஆர்வம் என்று சொல்லுறத விட வெறி ன்னு சொல்லுறது ரொம்ப பொருந்தும் .
ஷேக்ஸ்பியர் ஐ எல்லாம் கரைத்து குடித்தவர். English Dictionary யைக் கூட, பசி தூக்கம் மறந்து படிக்க முடியும் எங்க அப்பாவால் .... 'Around the world in 80 days' novel கதையை எங்கப்பா சொல்ல, நான், தம்பி,அம்மா மூணு பேரும் திறந்த வாய் மூடாமல் கேட்டிருக்கோம். வாழ்க்கையில் எதையுமே ரசித்து செய்வாங்க. ஜூனியர் விகடன் ல அப்போல்லாம் ஒரு படம் குடுத்து அதுக்கு பொருத்தமாக ஒரு புதுக் கவிதை எழுத சொல்லி போட்டி வரும். அதற்கு எங்கப்பா கவிதை எழுதி அனுப்புவதை பார்த்து தான் எனக்கே கவிதை எழுதும் ஆசை வந்தது.

"முடிந்து போன விஷயங்கள் பத்தி கவலைப் படுவதில் அர்த்தம் இல்ல...."
"அடுத்தவர்கள் நம்மை பார்த்து பரிதாபப் படுற மாதிரி நம்ம வாழக்கூடாது, பொறாமைப் படுற மாதிரி தான் வாழணும்" இதெல்லாம் எங்கப்பா அடிக்கடி சொல்லக் கேட்ருக்கேன்.

சைக்கிள்கள் மட்டுமே இருந்த எங்க ஊருல முதல் முதலாய் TVS-50 வாங்கியது எங்கப்பா தான்.சினிமா பார்ப்பதில் ரொம்ப ஆர்வம்....அதே சினிமா ஆர்வம் தான் எனக்கும் வந்துருக்கு போல...


எங்க ஊரு ல இருக்குற எல்லா பத்தாம் கிளாஸ் பசங்களுக்கும் English டீச்சர் னா அது எங்கப்பா தான்.எங்க ஊருல English மீடியம் ஸ்கூல் கெடயாது. அதுனால தமிழ் மீடியம் ல படிச்சுட்டு இருந்த என்னை, English ல நல்ல proficiency கெடைக்கணும் ன்னு plan பண்ணி எங்கப்பா பண்ண பல விஷயங்கள்ல ஒண்ணு தான் இந்த பதிவின் முதல் சில வரிகள்.

அப்போ உள்ள தமிழ்நாடு state board syllabus ல , 10th English second paper ல தான், tense voice லாம் வரும். எங்க அப்பா தொண்டை தண்ணி வத்த வத்த , கத்தி கத்தி அந்த பசங்களுக்கு tense voice பாடம் நடத்துவாங்க. அந்த 10th work book ல இருக்க tense full ஆ என்னை 6 வயசுலேயே படிக்க வெச்சாங்க.

"This is All India Radio. News Read by...."

தினமும் காலை 8.10 க்கு எங்கள் வீட்டு Radio வில் English News கண்டிப்பா கேக்கணும் என்பது என் அப்பாவின் order. கேட்டால் மட்டும் போதாது. ஒரு paper பேனா வெச்சுக்கிட்டு அந்த News ல எனக்கு புரிந்த எல்லா வார்த்தைகளையும் எழுதணும். News முடிஞ்சோன எங்கப்பா கிட்ட காட்டணும். காலைல 8.10 க்கு எங்க வீட்டுல டிபன் ரெடி ஆகி இருக்காது....பசியில் நான் செரியா கவனிக்காம விட்டுட போறேன்னு, daily 8 மணிக்கு, ரெண்டு spencers bread க்கு நடுவே kissan jam வெச்சு தர ஆரம்பிச்சாங்க எங்கப்பா...நாளுக்கு நாள் நான் எழுதும் வார்த்தைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது...:-)


தமிழ் மீடியம் ல படித்ததுனாலயோ என்னவோ, நான் English Vocabulary கொஞ்சம் weak தான். ஆனா அப்பா குடுத்த grammar பயிற்சி, தைர்யம் எல்லாம் english படிப்பதிலும்,பேசுவதிலும் எந்த பிரச்னையும் வராமல் பார்த்துக் கொண்டது.

9th ல இருந்து ஹாஸ்டல் ல தங்கி படிச்ச நான் SSLC Public exam ல English மீடியம் புள்ளைங்களை எல்லாம் விட English ல ஜாஸ்தி மார்க் வாங்கினேன். 96/100.+2 விலும் 176/200.

என்னுடைய college friends and colleagues யாருமே நான் 12th வரைக்கும் தமிழ் மீடியம் ல படித்தேன் ன்னு சொன்னா நம்பினது இல்ல...'you dont speak like one" ன்னு தான் சொல்லி இருக்காங்க,

நான் டென்மார்க் ல interview attend பண்ணப்போவும் சரி, ஸ்வீடன் ல interview attend பண்ணப்போவும் சரி, interviewers எனக்கு குடுத்த முதல் கமெண்ட் "Your spoken language is very clear and communicative"

அந்த குட்டி ஊருல ஒரே ஒருத்தருக்கு தான் ஹிந்தி தெரியும், அவர பிடிச்சு எனக்கு ஹிந்தி சொல்லி தர வெச்சாங்க.... அவரும் என்னை Prachaara Sabha exams லாம் எழுத வெச்சாரு.

டெல்லி ல ஒரு வருஷம் வேலை பாத்தப்போ தான் ஹிந்தி படிச்சதோட பலனை முழுசா அனுபவிச்சேன். வீட்டு வேலை செய்யும் வட நாட்டு வேலைக்காரம்மா, கூர்க்கா, ஆட்டோ டிரைவர், பஸ் டிரைவர், கடைக்காரர்கள் இவர்களோடு எல்லாம் பேசி சமாளிக்க என் வீட்டுக்காரர் என்னை கூப்பிடும் அளவுக்கு என்னால் ஹிந்தி பேச முடியும்.

Bangalore ல, north-indians கூட்டம் அதிகமா இருக்குற projects ல எல்லாம் official language itself ஹிந்தி மாதிரி இருக்கும். Project meetings ல கூட நடு நடுவுல ஹிந்தி புகுந்து வெளாடும்.North Indians க்கு பொதுவாகவே ஒரு கருத்து என்னன்னா.....'தமிழ் நாட்டு காரங்களுக்கு ஹிந்தி தெரியாது" அது ஏதோ ஒரு down-syndrome மாதிரி கருதப்படும் ஒரு விஷயம். அவர்களோடு சரளமாக ஹிந்தி பேச முடியாட்டியும் கூட அவர்கள் பேசுவதை வெகு இயல்பாக, சுலபமாக புரிந்து கொண்டு ஹிந்தியும் ஆங்கிலமும் கலந்து ஒரு பதில் சொல்ல சமாளிக்க முடிவதெல்லாம் என் அப்பா என்னை ஹிந்தி படிக்க வெச்சதுனால தான்.வீட்டிலும் ஹிந்தி படங்கள் பார்க்கும் நேரங்கள் எனக்கு ரொம்ப பிடித்தவை. அதுவும் subtitles இல்லாத படங்கள். "ஏய், அவன் என்ன சொல்லுறான்னு சொல்லிட்டு சிரி" என்று என்னை superior ஆக feel பண்ண வைத்த தருணங்கள்.

இப்படி தந்தை மகற்கு ஆற்றும் நன்றி யை மிக சரியாகவே செய்த என் அப்பா.

அப்பாக்கு Travelling ல மிக மிக ஆர்வம்.எந்த ஊருக்கு போனாலும் திரும்பி வீட்டுக்கு வரப்போ , snacks வாங்கிட்டு வராங்களோ இல்லையோ, English சம்பந்தமான books எனக்கு வாங்கிட்டு வருவாங்க....
ஒரு முறை என் அப்பாவுடன் வேலை பாத்த ஒரு colleague கிட்ட சொல்லி எனக்கு
lifco dictionary வாங்கிட்டு வர சொன்னாங்க, அத என்கிட்டே குடுக்க எங்க வீட்டுக்கு வந்த அவரு சொன்னாரு , " உங்கப்பாவே ஒரு பெரிய dictionary, ஸ்கூல் ல எல்லாரும் English ல என்ன doubt னாலும் அவர தான் கேப்போம், அப்டி இருக்கப்போ, உனக்கு ஏம்மா தனியா ஒரு dictionary?" ன்னு கேட்டாரு....அந்த sir க்கு தெரிந்து இருக்க நியாயம் இல்ல....'வெறும் ஆறாவதும், நான்காவதும் படித்து கொண்டு இருக்கும் என்னிடம் இருந்தும் தம்பியிடம் இருந்தும் அந்த live - dictionary யை கடவுள் பறித்து கொள்ள போகிறார், அதை உணர்ந்து தானோ என்னமோ எனக்கு backup-dictionary வாங்கி தர என் அப்பா யோசித்து இருக்கிறார்கள்' என்று.


"10th ல state ரேங்க் வாங்கி உன் போட்டோ paper ல வரணும்"
"ஹிந்தி விடாம படிக்கணும்"
"IAS ஆகணும்"

இதெல்லாம் தான் என்னை பொறுத்த வரை என் அப்பாவின் எதிர்பார்ப்புகள்.

மகள் தந்தைக்கு ஆற்றும் உதவியையும் ஓரளவிற்கு நான் சரியாகவே செய்து வருகிறேன்.
10th ல state third rank. 483/500.
Paper ல என் போட்டோ வந்தது.
எங்கள் குடும்பத்தில் எல்லாருக்குமே சிரிப்புக்கு பதில் அழுகை தான் வந்தது...
இதை பார்க்க ஆசை பட்ட அப்பா போட்டோ வில் இருக்கும் போது யாரால் சிரிக்க முடியும்?

Dakshin Bharath Hindi Prachara Sabha exams ல Visharad வரைக்கும் முடித்து சபாவின் சால்வை.

IAS exams க்கு படிக்குற அளவுக்கு பொறுமையும் வெறியும் இல்லை.ஒரு வேளை அப்பா இருந்து இருந்தால் ஆகி இருப்பேனோ என்னவோ....

"உங்கப்பா கிளாஸ் எடுத்தா, சிரிப்பலையில் classroom அதிரும்மா, அவ்வளவு humorous ஆ , involve ஆகி பாடம் நடத்துவாரு. அவருக்கு நாங்கல்லாம் 'சிரிப்பூட்டும் வாயு' (laughing gas-நைட்ரஸ் ஆக்சைடு) ன்னு பேரு வெச்சுருந்தோம்" - சில வருடங்களுக்கு முன்னால் ஒரு முறை பஸ் ல நான் சந்தித்த அப்பாவின் மாணவர்.

"டீச்சர், உங்க சார் கிட்ட தான் என் தம்பி படிச்சான். அவர் குடுத்த அறிவுரைகளும், வழிகாட்டுதலும் தான் இன்னைக்கு அவனை மாதம் ஐந்திலக்க சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்த்தி இருக்கிறது" அம்மா ஸ்கூலுக்கு சில மாதங்களுக்கு முன்னால் transfer ஆகி வந்த attender.

"தம்பி, நீங்க KS சார் பையன் தான? நான் உங்கப்பா கிட்ட தான் படிச்சேன்..."
இது தம்பி ஓசூர் ல சந்தித்த ஹோட்டல் முதலாளி.

பத்தே வருடங்கள் மட்டுமே என்னுடன் வாழ்ந்த, பத்தொன்பது வருடங்களுக்கு முன்னால் இழந்த அப்பாவை அடிக்கடி இப்படி பலரிடம் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம்.

அர்ஜுன் பொறந்தப்போ, எல்லாரும் அர்ஜுனை பாக்க அப்பாவுக்கு கொடுத்து வைக்கலைன்னு சொன்னாங்க....எனக்கு என்னமோ அப்பாவிடம் ஆங்கிலம் படிக்க அர்ஜுன் க்கு கொடுத்து வைக்கலைன்னு தான் தோணுச்சு.

மறுபிறவி என்பதெல்லாம் உண்மையாக இருக்கும் பட்சத்தில், என் அப்பா தான் அர்ஜுனாக என் வயிற்றில் பிறந்திருக்க வேண்டும்!!!

Thursday, 18 September 2008

சரோஜா, தாம் தூம், மொட்டை, டெல்லி,Roger, பிருந்தாவன் எக்ஸ்பிரஸ்

ஒரு வழியா சொந்த நாட்டுக்கு வந்தாச்சு.
வந்ததோட முதல் மற்றும் இரண்டாவது பலன். தாம் தூம் , சரோஜா ரெண்டும் சத்யம் சினிமா ல .....அதுவும் சரோஜா ரிலீஸ் அன்னைக்கே....அர்ஜுனை தூங்க வெச்சு அவங்க ஆச்சி கிட்ட தள்ளிட்டு....

சரோஜா ரொம்ப பிடிச்சுது. நெறைய timing ஜோக்ஸ், ரொம்ப casual actors.... Venkatprabhu has lived upto the expectation. எனக்கு எப்போவுமே இந்த மாறி ஒரு 'off the trend' and 'highly expected' kind of படத்தை தியேட்டர் ல அதும் ரிலீஸ் அன்னைக்கு பாக்கணும் ன்னு ஆசை. infact, நான் இது வரைக்கும் ரிலீஸ் அன்னைக்கு எந்த படமும் பாத்து இல்ல....so எல்லாரும் பயங்கரமா கத்துவாங்க, whistle லாம் அடிப்பாங்க ன்னு நெனச்சு போனேன். ஆனா எல்லாரும் ரொம்ப quiet ஆ பாக்குறாங்க...
எங்க ஆளு, 'balcony fully blocked, may be, படத்தோட மொத்த team மும் balcony ல உக்காந்து, opening எப்டி இருக்குன்னு பாக்குறாங்க போலிருக்கு' ன்னு சொன்னாரு. அதுனால எனக்கு 'ஐயோ வெங்கட்பிரபு balcony ல இருந்தார்னா அவருக்கு " என்னடா யாருமே whistle அடிக்கலை, கை தட்டலைன்னு" கவலையா இருக்குமே' ன்னு கவலையா இருந்துச்சு. ஆனா இந்த quiet crowd கூட, சில பல காமெடி க்கு விழுந்து விழுந்து சிரிச்சுது. 'ஜெய்' வர்ற சீன் ல நான் பயங்கரமா சிரிச்சு, அவரோட popcorn ஐ தட்டி விட்டு, காமெடி - tragedy ஆனது குறிப்பிட தக்கது.

படம் முடிஞ்சப்போ பின்னாடி ஒருத்தர் "இதுக்கு தான் 'உதயம்' போலாம் ன்னு சொன்னேன், நீ கேக்கலை....இங்க பாரு எல்லாம் அமைதியா பாக்குறாங்க....சென்னை-28 உதயம் ல எவ்ளோ ஜாலி யா பாத்தோம் ன்னு' அவரோட friend கிட்ட சொன்னாரு....'அட, ஆமாங்க' ன்னு சொல்லணும் ன்னு தோணுச்சு....ஆனா சொல்லலை...படம் நல்லா ஓடுதுன்னு நேத்து எங்க ஆளு sify ல படிச்சாராம். சந்தோசம், actually இந்த மாறி படம் லாம் நல்லா ஓடணும்.

உள்ளம் கேட்குமே, 12B, உன்னாலே உன்னாலே எல்லாம் பாத்து, அதே எதிர்பார்ப்புல தாம் தூம் போனோம், ஆனா பாதி படம் மட்டுமே ஜீவா சார் கைவண்ணம் என்பதாலயோ என்னமோ, படம் எனக்கு அவ்ளோ ருசிக்கலை. படத்தோட heroine ஐ விட , லக்ஷ்மி ராய் smart ஆ இருக்க மாறி இருந்துச்சு. அவங்க டோனி கூடல்லாம் bike ல போயி இருக்காங்களாமே.....?

ரெண்டு படத்துக்கும் ஒரு ஒற்றுமை என்னன்னா கடைசி கடைசில ஜெயராம் 'டேய் நான் தாண்டா வில்லன்' ன்னு வர்றது.

அப்றோம் இத்தனை நாளா நீளமா முடி வளர்ந்து 'பாடி ஸ்டுடா' hairstyle ல்ல இருந்த நம்ம அர்ஜுன் க்கு வடபழனி முருகன் கோவில் ல போயி, அவன் கதற கதற, மொட்டை போட்டாச்சு. வீட்டுக்கு வந்து கண்ணாடில அவனையே அவனுக்கு காமிச்சேன்....மொழு மொழு ன்னு இருந்த தலைய பாத்தான், அப்றோம் அத தடவி பாத்தான்....அவ்ளோ தான்...'அம்மாஆஆஆஆஆஆஆ' ன்னு ஒரே கத்து...:-)

பயந்த மாறியே டெல்லி ல குண்டு வெச்சுட்டாங்க...
ஏதோ ஒரு blog ல படிச்சேன்....'இப்டில்லாம் பண்ணுறதுக்கு ஒட்டு மொத்தமா எங்க நாட்டை அழிச்சுடுங்க.....எங்க சொந்தங்களை இழந்து வாழ்வதை விட, மொத்தமாக சாவதற்கு நாங்கள் தயார்' என்று எழுதி இருக்காங்க.
என்னோட stand point கூட இதான்.
"தீவிரவாதத்தால் பலி கொள்ளப் படுவது மொத்த குடும்பமாக இருந்து விடுவது எவ்வளவோ மேலானது....
ஓரிருவரை இழப்பதை விட....
ஓரிருவர் மட்டும் மிஞ்சுவதை விட..."


அப்றோம் சமீபத்திய ஆறுதல், Roger American open டைட்டில் வாங்கினது. இதுக்கு அப்றோம், Roger ஐ கொஞ்சம் ஜாஸ்தி watch பண்ணிட்டு இருக்கேன், ஒலிம்பிக் லையும் ஊத்திக்கிட்டோன, சின்ன கறுப்பர் கிட்ட செம சண்டை...நல்ல வேளை, இதுல win பண்ணிட்டாரு.

'காடி நம்பர் எரடு, ஒம்பத்து மூறு, நால்கு.... '

'டாக்ஸி பேக்கா மேடம்?'

பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் பிடிச்சு நம்ம பெங்களூரு க்கு வந்து சேந்தாச்சு. 3 வருஷத்துல ஒண்ணும் பெரிசா மாறலை. ஆட்டோ drivers, house brokers, house owners, இப்டி பெங்களூரு வின் அதி முக்கியமான பிரமுகர்களை எல்லாம் சந்தித்து கொண்டிருக்கிறோம். Hope God Bless us with a healthy and peaceful living in Bangalore. I need a lot of It now.

Thursday, 28 August 2008

முக்கையா... முங்கி...டோபியோ

இது சத்தியமா தமிழ் வார்த்தைகள் தான்.
என் பையன் முருங்கைக்காய், முள்ளங்கி, Tomato க்கு தான் இப்படி பேரு வெச்சுருக்கான்.

முருங்கைக்காய் - முக்கையா
முள்ளங்கி - முங்கி
Tomato - டோபியோ

இன்னும் சில...
Biga - Brinjal
பாப்பையா (salamon பாப்பையா மாதிரி உச்சரிப்பு) - Papaya
Babo - Mango
குச்சாச்சு - குளிச்சாச்சு
சாப்பியா - சாப்பிட்டியா
தபர் - டம்ளர்
அம்மியாம் - அம்மாச்சி
போப்பு - சோப்பு
தய்யம் - தண்ணி
பீபூ - பீட்ரூட்
அப்பியா - அப்படியா (if anyone says அப்படியா he repeats அப்பியா)
கிக்கன் - சிக்கன்,

ச்சாமீ - God, விபூதி, விளக்கு, குங்குமம் எதை பார்த்தாலும் ச்சாமீ தான்....!!!
காப்பாக்கு - காப்பாத்து
சாவம் - சாதம்
அசி - அரிசி


இது மாறி நெறைய இருக்கு....இதெல்லாம் சும்மா samples....:-)

Tuesday, 26 August 2008

சொர்க்கமே என்றாலும்...

'உங்க சொந்த ஊரு எது?'

'திருச்சி பக்கம்'( வழக்கமா சொல்லுறது தான்...)

'திருச்சி பக்கத்துல எங்க?'

'புதுக்கோட்டை....'(ஆஹா ஆரம்பிச்சுடுச்சு...இது எங்க போயி நிக்கும் னு எனக்கு நல்லா தெரியும்)'...

'proper புதுக்கோட்டை யா?'

'இல்ல...அங்கே இருந்து கொஞ்சம்(???) தூரத்தில அறந்தாங்கி.....'

'ஓ! அறந்தாங்கி யா?'

'அட இருங்க, நான் இன்னும் முடிக்கலை, அறந்தாங்கி பக்கத்துல கீரமங்கலம் பேரூராட்சி (பக்கத்துல வேம்பன்குடி கிராமம்)'

'அட மக்கா! இதான் திருச்சி பக்கமா??முழுசா 100km ஐ ஒரு 'பக்கம்' ல மறச்சுட்டியே....பேரூராட்சியாம்ல....நான் மட்டும் கேள்வி கேக்கலைன்னா நீ ஏதோ மாநகராட்சி லேர்ந்து வந்துருக்கே ன்னுல்ல நெனச்சுருப்பேன்.....ம்ம்ம் போ போ....'

My face hanging.

காலேஜ் சேந்த புதுசுல ஒவ்வொரு புது அறிமுகமும் இப்படி தான் தொடங்கும்.

ஒரு செமஸ்டர் லீவ் ல என் classmates ரெண்டு பேரு எனக்கு DTDC ல courier அனுப்ப try பண்ண போக, (எங்க ஊருக்கு அப்போல்லாம் professional மட்டும் தான் சர்வீஸ்)courier காரன் இந்த ஊருக்கு எல்லாம் டெலிவரி இல்ல ன்னு சொல்ல போக...அவங்க ரெண்டு பேறும் எக்கச்சக்கமா கடி ஆயிட்டாங்க...அதுல ஒருத்தனுக்கு, நான் ஆட்டோகிராப் ல வேம்பன்குடி(west) னு அட்ரஸ் எழுத போயி, அவன் கொலை வெறி ஆகி, 'உங்க ஊருல இருக்குறதே நாலு வீடு தான், அதுல east,west, north, south லாம் தேவையா?? னு பின்னிட்டான்.

காலேஜ் ல லீவ் விட்டா போதும்.....கிளாஸ் ல எல்லாரும், "என்ன ப்ரியா....மாட்டு வண்டி, ஆரத்தி, குலவை விடுறதுக்கு, கொட்டு க்கு எல்லாம் சொல்லியாச்சா??" ன்னு கலாசிடுவாங்க.....'என் இனிய கிராமத்து மக்களே" பாரதிராஜா படத்துல வர கிராமம் மாறி எங்க ஊரு இருக்கும் னு அவங்களே முடிவு பண்ணிட்டாங்க.

இதே மாறி, "I am from Nagercoil(பக்கத்துல நல்லூர்) " னு பீலா விட்டுக்கிட்டு இருந்த பார்ட்டி நமக்கு pick up ஆனது தனி track.

அடிக்கடி நானும் என் தம்பியும் 'ச்ச,நம்ம வேற ஊருல பொறந்து இருக்கலாம்' னு feel பண்ணுவோம். ஏன்னா ஒவ்வொரு முறை ஊருக்கு போறதும், ஒரு பெரிய travel experience ஆ இருக்கும்.
டெல்லி ல வேலை பாக்குறப்போ, காலைல சென்னை வந்து இறங்கினதும் , அடிச்சு பிடிச்சு Paris corner போயி, ஊருக்கு பஸ் பிடிக்குறப்போ, ரொம்ப கடுப்பா இருக்கும், என்னடா வந்து இறங்கினோமா, வீட்டுக்கு போனோமான்னு இல்லாம இன்னும் பத்து மணி நேரத்துக்கு மேல travel பண்ணனுமேன்னு.....அதும் அறந்தாங்கி வரைக்கும் கூட போய்டலாம். அங்க இருந்து எங்க ஊருக்கு ஒரு பஸ் விட்டா அப்றோம் அடுத்த பஸ் வர்ற வரைக்கும் பேய் முழி முழிச்சுக்கிட்டு பஸ் ஸ்டாண்ட் ல நிக்க வேண்டியது தான். என் தம்பி நெறைய வாட்டி, அறந்தாங்கி ல வெயிட் பண்ணி பண்ணி, பொங்கி எழுந்து வீட்டுக்கு போன் பண்ணி, பக்கத்துல தான் சென்னை பஸ் நிக்குது, அதுல ஏறி சென்னை க்கே திரும்பி போறேன்னு சொல்லுவான்....

ஸ்வீடன், டென்மார்க் ல இருந்து வரப்போ, அங்க இருந்து சென்னை வர ஆகுற டைம் விட, சென்னை ல இருந்து எங்க ஊருக்கு போறதுக்கு ஜாஸ்தி டைம் ஆகும்.

ஆனா எங்க ஊரு compare பண்றப்போ நல்லூர் ரொம்ப சின்ன ஊரு.
எங்க ஊருல ரெண்டு higher secondary school, மூணு elementary school, நாலு கல்யாண மண்டபம், ரெண்டு தியேட்டர் எல்லாம் இருக்கு....நல்லூர் என்பது நாலே நாலு தெரு மட்டும் இருக்குற ஒரு சிற்றூர். ஆனா எப்போ இந்த argument வந்தாலும் இந்த travel மேட்டர் ல அவர் என்னை overtake பண்ணிடுவார். "நாகர்கோயில் வரைக்கும் direct train, அப்றோம் அங்கேருந்து 20 mins travel" னு, இந்த ஒரு பாயிண்ட் வெச்சே என்னை பேச்சிழக்க பண்ணிடுவாரு....:-(

But whatever it is, எங்க ஊரு எனக்கு special, like anyone else...

இப்போ தான் ஒரு 10 நாள் அம்மா வீட்டுக்கு போயிட்டு வந்தேன்.
படிக்குறப்போ லீவ் க்கு வந்துட்டு, hostel கெளம்பும் போது எப்புடி அழுகை வருமோ அதே மாறி தான் இப்போவும் வருது...

நம்மூரு போல வருமா???

Thursday, 14 August 2008

"தாயின் மணிக்கொடி பாரீர்" நல்லா பாடணும்..."கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர், எங்கும் காணரு வீரர் பெருந்திரள் கூட்டம்" கூட்டம் ல சுதி சரி இல்லன்னு, பாவம் பாட்டு டீச்சர் எத்தனை வாட்டி சொல்லி குடுத்தாங்க....
கட்டி வெச்ச கொடி மேல போனதும் ஒழுங்கா அவிழ்ந்துக்குமா... பட்டொளி வீசி பறக்குமா....கொடிக்குள்ள வெச்ச பூ எல்லாம் அழகா கீழ உதிருமா ...
ஸ்கூல் Salute ல, order சொல்றப்போ கை வந்து டிரஸ்/கால் ல அடிக்குற மாறி சத்தம் வர கூடாது, gentle ஆ பண்ணனும் னு PT மிஸ் சொன்னது மறந்துட கூடாது.கம்பத்துக்கு கீழ போட்ட கோலம் அழியாம இருக்கணும்... marching பண்றப்போ நான் left-right கரெக்ட் ஆ வெப்பேனா... என் கிளாஸ் புள்ளைங்க எல்லாம் கரெக்ட் ஆ march பண்ணுமா... அம்மா ஸ்கூல் ல என்ன ஸ்வீட் குடுத்து இருப்பாங்க... அப்பா ஸ்கூல் ல என்ன ஸ்வீட் குடுத்து இருப்பாங்க... function முடிஞ்சு பெஞ்ச் லாம் arrange பண்ணிட்டு நான் வீட்டுக்கு போயி சேருரதுக்குள்ள அந்த dog (என் தம்பி) எல்லா ஸ்வீட்டையும் முடிச்சுடுவானா..... இப்படி பலவிதமான டென்ஷன் இருக்கும்.இது அஞ்சாவது படிச்சு முடிக்குற வரைக்கும்!

கொஞ்சம் வளர்ந்து, ஒரு ஆறாவது முதல் பன்னிரெண்டாவது படிக்குற வரைக்கும் ஸ்கூல் ல நடக்குற பேச்சு போட்டி, கட்டுரை போட்டிகளில், 'என்னை கவர்ந்த தலைவர்' , 'எனக்கு மிகவும் பிடித்த கவிஞர்' , 'எதிர் கால இந்தியாவில் நான்' ... இன்ன பிற தலைப்புகளில் நம்ம தெறமை காட்டி இருக்குறதுக்கு பரிசு கெடைக்குமா, கண்டிப்பா கெடைக்கும்... ஆனா first price கெடைக்குமா....இன்னைக்கு hostel ல ஏதாச்சும் ஸ்பெஷல் லஞ்ச் இருக்குமா... இல்ல... எப்போதும் போல தானா...
இப்டி கவலைகள்.


"ரோகிணி காம்ப்ளெக்ஸ் ல கிடைக்கலைன்னா ஆட்டோ பிடிச்சு அபிராமி போனா atleast black ல சர்வ நிச்சியமா வாங்கிடலாம், warden அதே படத்துக்கு வந்து தொலச்சுட கூடாது" இது கல்லூரி வாசல்.

Corporate world ல அடி எடுத்து வெச்ச நாளா , "monday இல்லாட்டி friday ல வந்தா நல்லா இருக்கும், ஊருக்கு போலாம் மூணு நாளைக்கு, KPN ல டிக்கெட் வாங்குறதுக்குள்ள உயிரே போய்டும்.....try பண்லாம்...., பாப்பையா ஐயா எந்த தலைப்பு வெச்சுருக்காரோ தெரியலை... ராஜா பேசுறப்போ கரண்ட் போய்ட கூடாது...என்ன படத்தை போடுறானோ என்னவோ..."

ஆனா சமீப காலமா "கடவுளே, எங்க நாட்டுல எங்கயும் குண்டு வெடிச்சுட கூடாது, காப்பாத்துப்பா சாமீ!!!" இந்த பயம் கலந்த சிந்தனை தான் மனசுல ஓடுது......டிவி ல ஏதாவது flash news வந்தா கூட 'பக் பக்' னு மனசு பதறுது.

62 ஆவது சுதந்திர தினம்.
"இந்தியா பொருளாதாரத்துல முன்னேறணும், வல்லரசாகனும், அந்நிய செலாவணி பெருகணும்..."
இப்டின்னு பெரிய கனவு எல்லாம் எனக்கு இல்லவே இல்ல....அந்த கனவு எல்லாம் காணுறதுக்கு நெறைய பெரியவங்க இருக்காங்க....என் கனவு, வேண்டுதல் எல்லாம் இப்போதைக்கு ஒண்ணே ஒண்ணு தான். "எங்க நாடு அமைதியான நாடா இருக்கணும்"

தாய் மண்ணே வணக்கம்!!!

Friday, 11 July 2008

Roger Vs Nadal

எட்டாவது படிக்குறப்போ, Chris Evert பத்தி ஒரு lesson,

அப்றோம் காலேஜ் first year ல என் room-mate ஆர்த்தி Pete Sampras ஐ தீவிரமா love பண்ணா.

"ஸ்டெபி ொம்ப அழகா இருக்காளே, oh அவளுக்கும் மொட்டை மண்டை அகாசி க்கும் love ஆ?"

அதுக்கு அப்றோம் கம்பெனி ல பக்கத்து cubicle பையன் screen saver ல மரியா ஷரபோவா பாத்து, "அட, நெடு நெடு ன்னு என்னமா இருக்கா??"

அப்புறம் ஒரு வாட்டி கம்பெனி outing போன club ல டென்னிஸ் கோர்ட் இருக்க போயி, அந்த bat...(Grrrrrrrr அது ராக்கெட், அப்டின்னு எங்க ஆளு மொறச்சுகிட்டே சொல்லுற மாறி ஞாபகம் வருது) தூக்கி பாத்து, இத வெச்சு எப்டி தான் வெளாடுறாய்ங்களோ ன்னு பெரு மூச்சு.

எனக்கும் டென்னிஸ்க்கும் இவ்ளோ தான் சம்பந்தம்.

அப்றோம் என்னத்துக்கு இப்புடி ஒரு heading....எல்லாம் ஒரு வெளம்பரத்துக்கு தான்.

இந்த தலைப்பைப் பாத்துட்டு யாராச்சும் நான் மேட்ச் பத்தில்லாம் எழுத போறேன்னு நெனச்சா, "அண்ணா.....அது நான் இல்லீங்கோ....எனக்கு அதெல்லாம் தெரியாது"

ஊருல எல்லாருக்கும் நல்லா தெரிஞ்ச கிரிக்கெட்டே நமக்கு சரியா தெரியாது.
ஏதோ பந்து உருண்டு உருண்டு கோட்டுக்கு வெளிய போனா நாலு ரன், அதுவே பறந்து போச்சுன்னா ஆறு ரன், batsman பின்னாடி நட்டு வெச்சுருக்குற மூணு குச்சிய தட்டி விட்டுடுச்சுன்னா அந்த ஆளு out. இப்டி உல்லுல்லாயி மேட்டர் வெச்சே மேட்ச் பாக்குற ஆளு நான். என் வீட்டுகாரரும் நெறைய வாட்டி, long on, long off, mid on, mid off, googly, dhoosra, இப்டின்னால்லாம் என்னன்னு சொல்லி குடுத்துருக்காரு.நானும் ஏதோ 2 marks answers மாதிரி மனப்பாடம் பண்ணி வெச்சுருக்கேன். ஆனா ஒருத்தன் googly போட்டா, அது googly தான்னு கண்டு பிடிக்கல்லாம் தெரியாது.Googly,dhoosra லாம் அப்புறம்....மொதல்ல அவன் leg spin போடறானா, off spin ஆ ன்னு கண்டு பிடிக்கவே CPU utilization 90% ஆயிடும், அப்றோம் அவன் மாத்தி போட்டுருக்கான்னு என் சிற்றறிவுக்கு எட்டுறதுக்குள்ள ஓவர் முடிஞ்சுடும்...:-(

என்னைக்காச்சும் அவரோட friends லாம் கிரிக்கெட் பாக்க வந்து, எல்லாரும் எதாச்சும் technical matters பேசிக்கிட்டே பாக்கும் போது, நான் தோனிக்கு இந்த hair style நல்லா இருக்கா.... இல்லாட்டி முன்னாடி நெறைய தலை முடி இருந்ததே better ஆ ன்னு யோசிச்சுக்கிட்டு இருப்பேன்.... மனசுக்குள்ள மொத தடவையா customer meeting attend பண்ண போற மாறி ஒரே திகிலா இருக்கும்....யாராச்சும் என்கிட்டே எதாச்சும் கிரிக்கெட் technique பத்தில்லாம் பேசிடுவாங்களோன்னு....

கிரிக்கெட்டே இப்டின்னா டென்னிஸ் பத்தி நான் சொல்லவே வேணாம்.

இப்டி பட்ட என்னைய நெறைய பேரு ஏகத்துக்கு உசுப்பி விட்டுடாங்க.

"இவிங்க ரெண்டு பேரும் செம rivals, இவன் அவனை clay court ல ஜெயிக்க முடியாது, அவன் இவனை grass court ல அடிச்சுக்க முடியாது....இவன் வேற 5 வாட்டி wimbledon titles வாங்கிட்டான், இந்த முறையும் வாங்கனும்னு செம வெறியோட வெளாடுவான், அவன் french open ல clay court ல தான் வாங்கிருக்கான், first wimbledon டைட்டில், அதுவும், இவனை grass court ல ஜெயிச்சு வாங்கணும்னு முடிவோட வெளாடுவான், செம மேட்சா இருக்க போகுது....cant wait. " - அவர்.

"Can Roger do it again?" - UK ல இருக்க friends லாம் வெச்ச orkut status.

இதெல்லாம் பாத்து நான் ரொம்பவே உசுப்பேரிட்டேன்.

இந்த மாட்சை பார்த்தே தீரனும் டா ன்னு ஒரு கொலை வெறி வந்துடுச்சு!

Sunday. 6th July.

எங்க ஆளுக்கு அவர் கிளப் ல கிரிக்கெட் மேட்ச். மொதல்ல போக வேணாம் னு இருந்தவரு, திடீர்னு மெம்பெர்ஸ் கொறையுது ன்னு சொல்லி கெளம்பிட்டாரு.
. "கண்டிப்பா பாரு, செம மேட்ச், தூங்கிட்டு கோட்டை விட்டுடாதே" ன்னு அன்பா(?) சொல்லிட்டு போனாரு.
நானும் எங்க டைம் ல ஒரு மூணு மணிக்கு டிவி ய on பண்ணி பாத்தேன். ஒரே புள்ளி.....எந்த சேனல் லையும் ஒண்ணுமே தெரியலை.
எங்க ஊருல எல்லாம் கேபிள் டிவி ஆபீஸ் ல பவர் கட் ணா தான் இப்டி ஆகும்.
என்ன கொடுமை இது ன்னு சரவணனை கேட்டுட்டு, சோகமா இருந்தேன்,

அவர் கிரிக்கெட் மேட்ச் முடிஞ்சு அரக்க பறக்க ஓடி வந்தாரு....

"என்ன டீ மேட்ச் பாக்கலையா?"
"டிவி ல ஒண்ணுமே தெரியலை"

அவரு டிவி ய on பண்ணி பாத்துட்டு (அப்போவும் ஒண்ணும் தெரியலை), ஒரு circastic body language ல....எதையோ குனிஞ்சு குனிஞ்சு கட்டில்க்கு கீழ தேடினாரு......

'என்னடா...டிவி தெரியலைன்னா கீழ தேடுறாரு..ரொம்ப வெய்யில கிரிக்கெட் ஆடி இப்டி ஆயிடிச்சோ' - என் மனசாட்சி...அவருக்கு கேக்காது

(ரொம்ப மெதுவா) "ஏங்க ரிமோட் தேடுறீங்களா.....?"

....பாத்தா கட்டில்க்கு கீழ இருக்குற socket ல இருக்க வேண்டிய கேபிள் அவிழ்ந்து விழுந்துருக்கு.. அதை எடுத்து அவர் சொருக, டிவி ல Roger Vs Nadal.

"இது கூட தெரியலை....உனக்கெல்லாம் wimbledon பாக்குறது ஒண்ணு தான் கொறைச்சல்" - அவரோட பார்வை.

"எங்க ஊருல எல்லாம் ஜன்னல் வழியா கேபிள் வந்து டிவி க்கு பின்னாடி சொருகுவோம், இங்க என்ன கட்டில் க்கு கீழ இருக்கு, chaos theory மாதிரி கட்டில்க்கு கீழ ஏதோ பிரச்னை ஆகி, டிவி ல புள்ளி ....இதெல்லாம் எனக்கு என்ன தெரியும்?" - நான்.

'மத்தது எல்லாம் தெரியுமாக்கும்' - இது அவரோட மனசாட்சி. ஆனா எனக்கு கேட்டுடுச்சு.

அப்ப நல்ல நேரத்துக்கு மழை வந்து ஆட்டம் தடை பட்டு மீண்டும் நடக்க ஆரம்பிச்சுருந்துச்சு....

What a come back Roger!
From no where, he was having a bash.

ரொம்ப interesting ஆ பாத்துட்டு இருந்தோம்.

"எங்க Ace ன்னா என்னன்ன்னு சொல்லு பாக்கலாம்....ரொம்ப பெருமையா wimbledon finale பாக்குறே" - வேற yaaru....

"Phew , A serve that the receiver is unable to reach" - சொல்லிட்டோம் ல....
எந்த காலத்துலயோ டென்னிஸ் பாத்தது ஞாபகம் வெச்சு சொல்லிட்டோம் ல...

"volley ன்னா???" - அவரே தான்

"அர்ஜுன் முழிச்சுட்டா மாறி இருக்கு, இருங்க வரேன்" - பே பே னு முழிக்குறதோட, இன்னொரு version.

"A tennis return made by hitting the ball before it bounces" - புரிஞ்சுகிட்டு அவரே சொல்லி குடுத்துட்டாரு.infact நான் answer பண்ணி இருந்தா பயங்கர அதிர்ச்சி ஆயிருக்கும் அவர்க்கு.
ACE கே ஒரு light jerk நோட் பண்ணேன்.

இப்படியா பாத்துட்டு இருக்கப்போ,
I have fallen all in love with Federer.

எவ்ளோ composed ஆ இருக்காரு....கொஞ்சம் கூட டென்ஷன், emotion லாம் வெளிய காட்டாம.....சூப்பர்.

போராடி போராடி Nadal ஜெயிச்சு கீழ விழுந்து சந்தோஷ படுறாரு.
மின்னல் மாறி அத்தனை காமிராக்களும் flash பண்ணுது..... சனிக்கிழமை wiliams sisters match க்கு avlova மின்னின மாறி ஞாபகம் இல்ல...
எனக்கு ஒரே feelings. ஆனா quiet ஆ போயி தண்ணி குடிச்சுட்டு presentation க்கு வந்த Roger, நாலரை மணி நேர போராட்டம் தோல்வியில் முடிந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லாம "Nadal is a deserving champion" னு சொன்னது...Hats off.
ஆனா Nadal அவரோட spanish உச்சரிப்புல அழகா சொன்ன மாறி "Roger is THE champion".

ஏற்கனவே நான் டோனி டோனி னு பண்ணுற அளப்பரைல எங்க ஆளு காதுல ஒரு chimney மாட்டலாம் போல பொகையா வரும், நான் இப்டி அடுத்தது ஒண்ணு ஆரம்பிக்க போறேன்னு தெரிஞ்சு இருந்தா அவரு இந்த மேட்ச் பத்தி என்கிட்டே சொல்லியே இருக்க மாட்டாரு.....:-)

நான் எங்க குல தெய்வம் அய்யனார் கிட்டயும், சின்ன கருப்பர் கிட்டயும் ஒரு application போட்டுட்டேன், "Next wimbledon ல Roger தான் ஜெயிக்கணும்"